சேராத பிரியும் காதல் கவிதைகள்

Kadhal Piriyum Kavithai

இந்த தொகுப்பு “சேராத பிரியும் காதல் கவிதைகள்” உள்ளடக்கியுள்ளது.

  • சேராத காதல் கவிதை
  • பிரியும் காதல் கவிதைகள்
  • சேராத பிரியும் காதல் கவிதைகள்
  • Kadhal Piriyum Kavithai

சேராத பிரியும் காதல் கவிதைகள் (Kadhal Piriyum Kavithai)

எனக்கும் தெரியும்..
உனக்கும் தெரியும்..
நாம் இருவரும்
சேர முடியாதென்று தெரிந்தும்
காதலித்தோம் விதியாவது
நம்மை சேர்க்குமோ என்று..!

உன்னோடு சேர்ந்து
வாழவில்லை என்பதற்காக
என் காதல் தோற்றுப்போய்
விடவில்லை.. சேர்வது மட்டுமே
காதலென்றால் காதல்
எப்பொழுதோ அழிந்திருக்கும்..!

காதல் வரும் வரை தெரியாது..
காதல் இருக்கும் வரை
தெரியாது.. நீயும் நானும்
பிரியும் போது தான்
தெரியும்..!

நான் உன்னை நேசிக்கும்
அளவு நீ என்னை
நேசிக்க வேண்டாம்..
ஆனால் என் நேசம் எந்தளவு
என்று புரிந்து கொண்டாலே
போதும்..!

அர்த்தங்கள் தெரியாமலே
ஆசை கொண்டேன்
உன் மீது.. காதலின்
அர்த்தம் உணர்ந்தேன்
நீ தந்த காயத்தோடு..
பிரிவின் அர்த்தம்
உணர்கிறேன் நான்
இன்று தனிமையோடு..!

நம்மாலும் இவ்வளவு
நேசிக்க முடியும் என்றும்..
நம்மாலும் இவ்வளவு
வெறுக்க முடியும் என்றும்
நமக்கே உணர்த்த
ஒரு உறவு எல்லோர்
வாழ்விலும் இருக்கும்..!

நீ அள்ளித் தந்த காதலை
அவசரமாய் பிடுங்கியதில்
வேர்களை கொஞ்சம் விட்டு
விட்டாய்.. அதனையும் வந்து
அறுத்துப் போ அவை
துளிர் விட்டு விருட்சம்
ஆவதற்கு முன்..!

உன் மௌனங்கள்
கலையட்டும் பெண்ணே..
ஒரு வார்த்தை பேசிவிடு..
சில மௌனங்கள் உடையும்
போது வார்த்தைகள் பிறக்கும்..
உன் மௌனம் உடைந்தால் தான்
எனக்கு வாழ்க்கையே பிறக்கும்..
புரிந்து கொள் என் உயிரே..
புரிந்து கொள்ளாமல்
பிரிந்து செல்ல நினைப்பது
ஞாயமா..?

நான் போகின்றேன் எனது
பொழுது சாய்கின்றது..
உனது பொழுதாவது
புலரட்டும்..!

உறங்கும் அவளின்
விழிகளுக்குள் உறங்காது
உயிர்த்திருக்கும் எனது
நினைவுகள்..!

பிரிந்து சென்ற உறவுகள்
மீண்டும் கிடைக்கப் பெறுமா
என ஏங்கும் தருணம்
மரணத்தை விட கொடியது..!

பிரிவு என்பது யாரும்
மறுக்க முடியாத வலி..
நினைவு என்பது யாரும்
திருட முடியாத பொக்கிஷம்..!

உடலுக்கு வெளியே உயிர்
நின்றாலும் உயிர்
வாழ முடியும் என்பதை
நீ விலகிய போது தான்
உணர்ந்து கொண்டேன்..!

கிடைக்க போவதில்லை
என்று உணர்ந்தும் மனம்
எதிர்பார்த்து கொண்டு தான்
இருக்கிறது.. சிலரிடமிருந்து
காதலை..!

நமக்கு பிடித்தவர்கள்
நலமாகத்தான் இருக்க
வேண்டுமே தவிர..
நம்மோடு தான் இருக்க வேண்டும்
என எந்த அவசியமில்லை..!
உன் பிரிவின் வலியைக் கூட
தாங்கி கொள்ள முடியும்..!

நான் உன்னை எவ்வளவு
விரும்பினேன் என்பதை
நீ உணராத வரைதான்
இந்த பிரிவு உனக்கு
மகிழ்வாக இருக்கும்..!

பிரிவின் வலியை நீ
அறிவாயோ இல்லையோ..
உன்னையே நேசித்துக்
கொண்டிருக்கும் ஓர் உயிர்
உணர்ந்து கொண்டிருக்கும்..
அதன் கொடுமையை..!

மேலும் படிக்க…