காதல் சண்டை கவிதைகள் – Kadhal Sandai

Kadhal Sandai Kavithai in Tamil

இந்த தொகுப்பில் “காதல் சண்டை கவிதைகள் – Kadhal Sandai Kavithai in Tamil” காணலாம்.

  • காதல் சண்டை கவிதைகள் – Kadhal Sandai Kavithai
  • காதல் சண்டை கவிதை வரிகள்
  • Kadhal Sandai Kavithai in Tamil

காதல் சண்டை கவிதைகள் – Kadhal Sandai Kavithai in Tamil

நான் உன்கூட சண்டை
போடுவேன் ஏனென்றால்
எனக்கு உரிமை இருக்கு..
ஆனால் நீ தான்
சமாதானப்படுத்தனும்
ஏனெனில் உனக்கு
அந்த கடமை இருக்கு..!

கோபத்துடன் விலகி
இருப்பதை விட உரிமையுடன்
திட்டி விடுங்கள்.. பிரிவுகள்
உண்டாவதை தடுக்கலாம்..!

நமக்கு பிடித்தவர்கள் நம்மிடம்
பேசவில்லை என்றாலும்
பரவாயில்லை ஆனால்
வேறு யாரிடமும் பேசக்கூடாது..
இதுவும் ஒருவகை
சுயநலமான அன்பு தான்..!

நீ வெறுத்து ஒதுக்கினாலும்
சிரித்து கொண்டு உன்னை
நெருங்கி வரும் என் அன்பும்..
என் பலவீனங்களில்
ஒன்று தான்..!

நீ சொல்லி நானும்..
நான் சொல்லி நீயும்..
கேட்காத ஒன்று
நீ எனக்காக அழுவதும்
நான் உனக்காக
அழுவதும் தான்..!

பிடித்தவர்களுடன் சண்டை
போடுவது அவர்களை
பிரிய வேண்டும்
என்பதற்காக அல்ல..
பிரியவே கூடாது
என்பதற்காக..!

அன்பிருந்தா சண்டை
வரத்தான் செய்யும்..
நம்பிக்கை இருந்தா
அதுக்கு மேல
செம சண்டை வரும்..
ஒண்ணுமே இல்லனா
கம்முனு கிடக்கும் மனசு..
இதை புரிந்தால் தான்
உன் காதல் நிலைக்கும்..!

ஆயிரம் சண்டைகள்
உன்னோடு நான்
போட்டாலும்..
நீ இல்லாமல்
என் வாழ்க்கை இல்லை
என்பதே உண்மை..!

உன் மீது அதிக அன்பு
இருப்பதால் தான்..
நீ செய்யும் சிறு தவறு கூட
என்னை பெரிய அளவில்
பாதித்து விடுகிறது..
கோபம் தான் உனக்கு
தெரியுது.. பாசம்
புரியவில்லை..!

எங்கே அன்பு அதிகம்
இருக்கிறதோ.. அங்கே
சண்டைகள் அதிகம் வரும்..
எங்கே சண்டை அதிகம்
வருகிறதோ.. அங்கே
சமாதானமும் அதிகம் இருக்கும்..
சண்டை இடுவது விலக அல்ல..
விலகி விடுவோமோ என்ற
பயத்தினால் தான்..!

உனக்காக அனைத்தையும்
மாற்ற முடிந்த என்னால்..
உன்னுடன் சண்டை
போடுவதை மட்டும்
மாற்ற முடியவில்லை..
இன்று வரை..!

உண்மையான காதல் என்பது
சண்டை போடாமல்
வாழ்வதில் இல்லை..
எவ்வளவு தான் சண்டை
போட்டாலும் திரும்ப வந்து
சமாதானம் செய்வதில்
தான் இருக்கிறது..!

உன்னுடன் நான் அடிக்கடி
சண்டை போடுவது
உன்னை பிடிக்கவில்லை
என்று அர்த்தம் அல்ல..
உன்னை அதிகம்
பிடித்ததால் தான் உன்னுடன்
அதிகம் சண்டை போடுறன்..!

சண்டை போட்டுவிட்டு
மறுநாள் எதுவும் நடக்காதது
போல் பேசும் காதல்
கிடைத்தால் வாழ்க்கை
சொர்க்கம் தான்..!

உண்மையான அன்பில்
ஆயிரம் சண்டை வந்தாலும்..
இறுதியில் ஒருத்தர் மேல்
ஒருத்தர் வைத்த
அன்பு தான் ஜெயிக்குது..!

தினம் தினம் சண்டை போடுவேன்..
சில நொடிகள் கோபமாய்
பேசுவேன்.. ஆனால்
உனக்கொரு வலி என்றால்
முதலில் கலங்குவது
என் விழிகள் தான்..!

சண்டையிட்டு பேசாமல்
உன் மௌனத்தால்..
என் காதல்மொழி
அறிய வைத்தாய் நீ..!

மேலும் படிக்க…