போலி வேஷம் கவிதைகள்

vesham kavithai in tamil

இந்த தொகுப்பில் “போலி வேஷம் கவிதைகள்” காணலாம்.

  • பாசம் வேஷம் கவிதை
  • வேஷம் கவிதை
  • போலி வேஷம் கவிதை
  • vesham kavithai

போலி வேஷம் கவிதைகள்

வேஷம் போட்டு ஆடத்
தெரியாதவர்களை விஷமி
என்று ஒதுக்குகிறார்கள்
சில உறவுகள்..!

வேஷம் போடும் உறவுகளுக்கு
மத்தியில் உண்மையான பாசம்
தோற்றுத் தான் போகிறது..
மதிகெட்ட மனதுக்கு தான்
தெரியவில்லை.. அது பாசம்
இல்லை வேஷம் என்று..!

முக்கியத்துவம் இல்லாத இடத்தில்
மீண்டும் மீண்டும் முகம்
காட்டுவது முட்டாள்தனமானது..!

சில நேரம் எங்கே உறவுகள் என்று
தேட தோன்றுகிறது.. சில நேரம்
எதற்காக இந்த உறவு என்று
நினைக்கத் தோன்றுகிறது..!

உண்மை இல்லாத இடத்தில்
உரிமை கேட்பது தவறு.. உரிமை
இல்லாத இடத்தில் பாசம்
வைப்பது தவறு.. பாசம் இல்லாத
இடத்தில் பழகுவதும் தவறே..!

உனக்காக உனக்காக என்று
வீணாக்கியது என் நேரத்தை
மட்டுமல்ல.. என்
வாழ்க்கையையும் தான்..!

யார் மீதும் அன்பும் அக்கறையும்
காட்டாமல் இருந்தாலே போதும்..
பைத்தியம் போல் புலம்ப
வேண்டிய அவசியம் இல்லை..!

வெளிப்படையாக இருப்பவர்களை விட..
வேஷம் போடுபவர்களுக்கு தான்
இந்த உலகில் மதிப்பு அதிகம்..!

வேஷம் இல்லாத உண்மையான
அன்பு தான் இந்த உலகத்தில் எல்லா
நோய்களுக்கும் மருந்து.. அந்த
அன்பே பொய்யானால் உலகில்
அதை விட கொடிய நோய் வேறு
எதுவும் கிடையாது..!

ஏமாற்றம் கண்ட பின்பு தான் சிலரது
அன்பு போலி என்பதை உணர்கிறோம்..
பழகும் வரை தெரியாது.. பழகிய
பின்பு தான் தெரிகிறது
பாசத்தின் வேஷம்..!

உன்னுடைய வேஷங்களில்
என்னை மரணிக்க செய்தது
இந்த காதல்..!

கஷ்டப்பட்டு முன்னுக்கு வருவது
தப்பில்லை.. மற்றவரை கஷ்டப்படுத்தி
முன்னுக்கு வருவது தான் தப்பு..!

பாசம் ஒன்று இல்லை என்றால்..
வேஷம் ஒன்று தேவைப்படும்
வாழ்க்கை வாழ்வதற்கு..!

யார் யாரோ வந்து போகும் வாழ்வில்..
சிலர் தந்து போகும் அன்பு எனும்
வேஷம்.. கலைந்து போகும் போது தான்
தெரிகிறது.. என் இதயம்
இரும்பு அல்ல மெழுகு என்று..!

இந்த உலகில் எதிரிகள் குறைவு
துரோகிகள் அதிகம்.. பிடித்தவர்கள்
குறைவு நடிப்பவர்கள் அதிகம்..
பாசம் குறைவு வேஷம் அதிகம்..!

யாசகமாய் கேட்டாலும்
கிடைப்பதில்லை.. சில உறவுகளின்
உண்மையான அன்பு..!

உண்மையாக வாழ எந்த வேஷமும்
தேவையில்லை.. பொய்யாக வாழ தான்
ஆயிரம் வேஷம் போட
வேண்டியதாக இருக்கு..!

பார்க்கும் உறவுகள் எல்லாமே
உனக்கு சொந்தம் இல்லை..
பழகிப் பார் பாதி வேஷம் என்று
உனக்கு புரியும்..!

கடவுள் எழுதி முடித்து விட்ட
நாடகத்திற்கு நாம் தினமும்
போடுகிறோம் வேஷம்..!

உண்மையான உறவுக்கு
விட்டுக் கொடுங்கள் ஏனெனில்
அது பாசம்.. உறவென்னும் பெயரில்
உங்களை உபயோகிப்படுத்திக்
கொண்டிருப்பவர்களை விட்டு விடுங்கள்..
ஏனெனில் அது வேஷம்..!

ஒருவரின் போலியான வேஷம் பற்றி
அறிய வேண்டுமா..? ஒரு முறை
பிரிவை சந்தித்து விடு..!

மேலும் படியுங்கள்…