உதாசீனம் கவிதைகள் வரிகள்

Uthasinam Kavithai

இந்த தொகுப்பு “உதாசீனம் கவிதைகள் வரிகள்” உள்ளடக்கியுள்ளது.

  • உதாசீனம் கவிதைகள்
  • உதாசீனம் Quotes
  • தமிழ் உதாசீனம் கவிதை
  • Uthasinam Kavithai

உதாசீனம் கவிதைகள் வரிகள்

உதாசீனம் ஒன்றே உன்னை
உயர்த்தும்.. உதாசீனப்படு
உயர்த்தப்படுவாய்..!

நடிப்பவர்களை நம்புகிற
உலகம் இது.. உண்மையாக
இருப்பவர்களை உதாசீனம்
செய்யத்தான் செய்யும்..!

நம் உண்மையான அன்பை
உதாசீனம் செய்தவர் முன்னே
நாம் சந்தோசமாக வாழ்ந்து காட்ட
வேண்டும்.. நம்மை இழந்து
விட்டோம் என்று அவர் மனதில்
தோன்றும் வரை..! உண்மையான
அன்பு காட்டும் யாரையும்
ஏமாற்றாதீர்கள்.. ஒருநாள்
உண்மையான அன்பு
கிடைக்காமல் வருந்துவீர்..!

எதிர்பார்ப்புக்கள் இருக்க வேண்டும்..
உரியவரிடத்தில் மட்டுமே..
நம் உரிமைகளையும் உணர்வுகளையும்
உதாசீனம் செய்தவர்களிடத்தில் இல்லை..!

ஓர் ஆணின் உச்ச கட்ட கர்வத்தை
அவனுக்கு பிடித்த பெண்ணின்
சிறு உதாசீனம் தரை மட்டம்
ஆக்கிவிடும்..!

என்னை அழ வைப்பது.. என்னை
பிடிக்காதவர்கள் அல்ல.. நான்
உயிராக நேசித்தவர்கள்..!

முடிந்து போனவை என்று
உதாசீனம் செய்யாதீர்கள்..
நினைத்துப் பார்க்கவோ..
நெகிழ்ந்து போகவோ இறந்த
காலத்தில் தான் எல்லாம்
இருக்கின்றது..!

யாரையும் உதாசீனம் செய்யாதீர்கள்..
ஏனெனில் இவ்வுலகில்
எதையெல்லாம் நீங்கள்
செய்கிறீர்களோ அவையெல்லாம்
திரும்ப உங்களை வந்து சேரும்..!

நாம் தேடி தேடி கொட்டும்
அன்பினை உதாசீனம்
செய்பவர்களால் வரும் மனவலி..
நம்மை தேடி தேடி காட்டும்
ஒருவருடைய அன்பினை
உதாசீனம் செய்து விடுகிறோம்..!

உனது உதாசீனம் ஏற்படுத்திய
கீறல்கள் இன்னும் ஆழமாய்
விதைக்கப்பட்டு விட்டது.. உனது
நினைவுகள் இந்த இதய நிலத்தில்..!

அவமானம்.. உதாசீனம்..
நிராகரிப்பு.. இதன் பின்னும்
பரவாயில்லை.. நீ தானே..
என கடந்து நிலைக்கும் நேசத்தின்
பெயர் தான் அன்பு..!

ஈரம் இல்லாத கண்ணீரை
இலவசமாக கொடுக்க
ஏதும் ஏற்பாடா.. உன் உதாசீனம்
கொண்டு உற்றுப்பார் என்
கண்களை உன் உருவம்
அதில் கலங்கி நிற்பதை..!

எவ்வளவு பிடித்தவராக
இருந்தாலும் மனம்
வெறுக்கத்தான் செய்கிறது..
நம் அன்பை உதாசீனம்
செய்யும் போது..!

நீ யாருக்காக உருகி உருகி
வாழ்கிறாயோ.. அவர்கள்
உன்னை வேறு யாரோ
ஒருவருக்காக உதாசீனம்
செய்வார்கள்..!

விரக்தி நிலையை உச்சத்திற்கு
கொண்டு செல்கிறது..
உன் உதாசீனங்கள்..!

அருகில் இருந்தும் உங்களை
உதாசீனம் செய்கிறார்கள்
என்றால் ஒதுங்கி விடுங்கள்..
அவர்களுக்கு வேறு புது உறவுகள்
வந்து விட்டது என்பதை
புரிந்து கொள்ளுங்கள்..!

உன்னையே தேடித் தேடி வரும்
ஒருவரை உதாசீனம் செய்து விட்டு..
உன்னை தேடாத ஒருவரை
தேடிக்கொண்டு இருக்காதே..!

உயிரை கொடுத்து பாசம்
காட்டினாலும் சில உறவுகள்..
புதிய உறவுகள் கிடைத்தால்
நம்மை உதாசீனம் செய்யத்தான்
செய்யும்..!

பொறுத்துக் கொள்கிறாள்
சகித்துக் கொள்கிறாள் என்பதற்காக..
அடுத்தடுத்த உதாசீனங்களால்
ஒரு பெண்ணை காயப்படுத்தாதீர்கள்..
கணக்கிட்டு வைக்கபடிக்கருக்கும்
உங்கள் உதாசீனங்கள்.. உங்களையே
ஒருநாள் தூக்கி ஏறிய வைத்துவிடும்..!

மேலும் இது போன்ற பதிவுகளை படியுங்கள்..