புத்தரின் போதனைகள் | Buddha Tamil Quotes

tamil buddha quotes

புத்தரின் போதனைகள் | Buddha Tamil Quotes that will change your thinking and grow good things on your mind.

பலராலும் புத்தரின் போதனைகள் விரும்பப்படக் காரணம் அவற்றில் மறைந்துள்ள நல்ல வழிகாட்டல்கள் என்று கூறலாம்.

புத்தரின் போதனைகள் | Buddha Tamil Quotes

பயனில்லாத சொற்களை
பேசுவது உப்பில்லாத
உணவிற்கு நிகரானது..
இரண்டும் கடைசியில்
குப்பைக்கு தான் போகும்.
அதிகமாக பேசுவதால்
ஒருவன் அறிஞனாகி
விட முடியாது.

நீ கேள்விப்படும் விடயங்கள்
அனைத்தையும் ஆராயாமல்
உண்மை என்று நம்ப கூடாது.
காதில் கேட்பதற்காகவே
ஒரு விடயத்தை உண்மை
என்று நம்பத் தேவையில்லை.

எந்த விடயமாக
இருந்தாலும் சரி யார்
சொல்லுகிறார் என்று
பார்க்காதே என்ன
சொல்லுகிறார்
என்று பார்.

நங்கூரம் போட்ட
கப்பல் போல அறிவு
எப்போதும் அமைதியாக
இருக்கும்.

தனது சிந்தனையில்
தெளிவு உள்ள
மனிதனிடம் அச்சம்
என்பது சிறிதும்
இருப்பதில்லை.

புகழ்ச்சி இகழ்ச்சி
இரண்டையும் பெரிதாக
எண்ணி வருத்தம்
அடையக் கூடாது.

உடலிலை சுத்தம்
செய்வதை விட
உள்ளதை சுத்தம்
செய்வது தான்
முக்கியமானது.

மனத் தூய்மையுடன்
ஒரு விடயத்தை செய்யும்
போது அதில் கிடைக்கும்
நன்மைகள் அது நம் நிழல்
போல பின்
தொடர்ந்து வரும்.

அக்கறையின்றி எனோ
தானோ என்று செய்யும்
எந்த ஒரு செயலாலும்
ஒரு பயனும்
கிடைக்காது.

ஒருவரின் நம்பிக்கைக்கு
தகுதியானவரே நல்ல
உறவினர்… திருப்தியான
உள்ளம் கொண்டவர்கள்
தான் உண்மையான
செல்வந்தர்கள்.

சிறந்த அறிவும்
நல்ல ஒழுக்கமும்
நிறைந்தவர்களை
உங்கள் நட்பாக
தேடிக் கொள்ளுங்கள்
இது உங்கள்
வாழ்க்கையையும்
சிறப்பாக மாற்றிடும்.

அறிவாளிகளுடனான
நட்பு உங்கள் அறிவை
வளர்ப்பதுடன் உங்களுக்கு
உதவியாகவும் இருக்கும்.
முட்டாள்களுடனா உங்கள்
நட்பு உங்கள் அறிவையும்
மங்க செய்வதுடன்
துன்பத்தையும்
தேடித் தரும்.

தன் சுயலாபத்திற்காக
மற்றவர்களுக்கு துன்பம்
விளைவிப்பவர்கள்
நிச்சயம் ஒரு நாள்
கொடுத்ததை விட
அதிகமாக பெறுவார்கள்.

நூறு ஆண்டுகள்
ஒழுக்கம் அற்றவர்களாக
வாழ்வதை விட ஒரு நாள்
ஒழுக்கம் உள்ளவர்களாக
வாழ்வது மேலானது.

மனத் தூய்மையுடன்
வாழ்பவன் தனக்கும்
தன்னை சுற்றி
இருப்பவர்களும்
நன்மையை தேடிக்
கொள்கிறான்.

மறந்தும் கூட பாவச்
செயல்களில் ஈடுபடாதீர்கள்
பின்னர் அது திரும்ப
உங்களுக்கு கிடைக்கும்
போது அதன் வலியை
உங்களால் தாங்க
முடியாது.

பகையை பகையால்
கடைசி வரை
தணிக்க முடியாது.
அன்பால் மட்டுமே
அதை தணிக்க முடியும்.

உங்கள் உள்ளத்தை
அன்பால் நிரப்புங்கள்..
பிறருக்கு உதவி
செய்யுங்கள்..ஆனால்
பிறருக்கு தீமை செய்ய
மனதாலும் எண்ணாதீர்கள்.

மற்றவர்களுக்கு தீமை
செய்வதை தவிர்த்து
நன்மை செய்ய
பழகுங்கள் இது
உங்களுக்கு மனத்
தூய்மையையும் மன
அமைதியையும்
தேடித் தரும்.

உன் வாழ்க்கையை
உனக்காக மட்டும்
இல்லாமல் உன்னை
சுற்றி இருப்பவர்களுக்காகவும்
வாழு உன் வாழ்க்கை
அர்த்தமுள்ளதாக அமையும்.

பொய், சூது, வாது,
களவு, மது, மாது போன்ற
குணங்கள் ஆரம்பத்தில்
சந்தோசத்தைக் கொடுத்தாலும்
இறுதியில் சொல்ல முடியாத
துன்பங்களைக் கொடுக்கும்.

Read here buddha quotes in tamil (part-1)