காலை வணக்கம் கவிதை

இந்த பதிவில் உள்ள காலை வணக்கம் கவிதை உங்களை விடியல் பொழுதை நேர் எண்ணத்துடன் ஆரம்பிக்க சிறு உத்வேகத்தைக் கொடுக்கும்.

காலை வணக்கம் கவிதை

மலர்கள் மலர..
உள்ளம் குளிர..
மனங்கள் குளிர..
என் அன்புக்குரிய
அனைவருக்கும் என்
இனிய காலை வணக்கம்.

மதம் மனிதனை
உருவாக்கவில்லை மனிதன்
தான் மதத்தை
உருவாக்கினான் மனிதம்
என்பது மட்டுமே இங்கே
நிதர்சனம் அனைவருக்கும்
காலை வணக்கம்.

துயரம் என்று தளராதே..
எதிர் காலத்தை கண்டு
அஞ்சாதே.. துவண்டு
விழுந்தாலும் எழுந்து ஓடு..
துணிந்து செல்
வெற்றி நிச்சயம்..
உறவுகள் அனைவருக்கும்
காலை வணக்கம்.

பணம் உலகத்தை கவரும்..
அழகு உள்ளத்தை கவரும்..
வார்த்தைகள் மனிதரைக்
கவரும்.. இரக்கம் ஒன்றே
கடவுளைக் கவரும்.
அனைவருக்கும்
பொன்னான காலை வணக்கம்.

நிரந்தரமான இன்பமும்
இல்லை.. நிரந்தரமான
துன்பமும் இல்லை..
அதனால் எப்போதும்
சிரித்த முகத்துடன்
இருக்க பழகுங்கள்…
அனைவருக்கும்
மகிழ்ச்சி கலந்த
காலை வணக்கம்.

மன அழுத்தத்துடன்
சிந்திக்காதீர்கள்..
அது ஒரு போதும்
வெற்றியை தராது..
புன்னகையோடு
சிந்தித்து பாருங்கள்..
வெற்றி பெறுவீர்கள்..
அனைவருக்கும்
புன்னகை கலந்த
காலை வணக்கம்.

இன்றைய உங்களின்
பொழுது உங்கள்
மனதுக்கு இதமான
பொழுதாகவும் நலமாகவும்
அமைய வாழ்த்துக்களுடன்
காலை வணக்கம்.

உங்கள் பார்வைகளை
அழகு படுத்துங்கள்..
உங்கள் உள்ளத்தை
தூய்மை படுத்துங்கள்..
பேச்சில் நேர்மையாக
இருங்கள்.. நடக்கும் போது
மென்மையாக நடந்து
கொள்ளுங்கள். இந்த நாள்
இனிய நாளாக அமையட்டும்.

நம் எண்ணங்கள்
உயர்வானதாக இருந்தால்
நாம் செய்யும் செயல்களும்
உயர்வானதாகவே இருக்கும்.
இன்றைய நாள் உங்களுக்கு
சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

கடந்த காலத்தில்
இருந்து கற்றுக் கொள்ளுங்கள்
எதிர் காலத்தை நினைத்து
கனவு காணுங்கள் ஆனால்
இன்றைய நாளில்
மகிழ்ச்சியாக இருங்கள்
ஏனெனில் இன்றைய நாள்
கடந்து விட்டால்
மீண்டும் கிடைக்காது.

நம் மீது அளவு கடந்த
அன்பு கொண்டவர்களுக்காக
இறங்கிப் போவது தப்பில்லை
நம் அன்பு புரியாதவர்களிடம்
ஒதுங்கிப் போவதும் தப்பில்லை
உறவுகளுக்கு உதய வணக்கம்..!

வெறும் பெருமைக்காக
எதையும் செய்யாதீர்கள்..
உங்கள் மன திருப்திக்காகவும்
மன நிறைவிற்காகவும்
உங்களுக்கு பிடித்ததை
செய்யுங்கள்.. உயர்வு நிச்சயம்
இனிய காலை வணக்கம்..!

தனிமை படுத்தப்பட்டோம்
என வருந்தாமல்..,
சுதந்திரமாக இருக்கிறோம்
என எண்ணி நகருங்கள்..
இனி வாழ்வின் மிச்சம்
மகிழ்ச்சி மட்டுமே..
இனிய காலை வணக்கம்..!

பயணத்தை நிறுத்தாமல்
தொடரும் போது தான்..
நம் இலக்கை நம்மால்
அடைய முடியும்..!
இனிமையான
காலை வணக்கம்..!

என் இதயத்திற்கு
ஓய்வென்பதே கிடையாது
உன்னை நேசிப்பதை
மட்டும் என் இதயம்
செய்து கொண்டிருக்கிறது.
இனிய காலை வணக்கம்
அன்பே..!

உன்னால் முடியும் என்று
உன்னை நம்பு.. முயற்சிக்கும்
அனைத்திலும் உன்னால்
வெற்றி பெற முடியும்..
இன் நாள் பொன்னான
நாளாக அமைய
இனிய காலை வணக்கம்..!

இந்த காலை வணக்கம் கவிதை உங்கள் காலை நேரத்தை மகிழ்ச்சியுடன் தொடங்க சிறு உற்சாகத்தை கொடுக்கும்.

மேலும் வாழ்க்கைக்கு தேவையான பொன்மொழிகள் இங்கே படியுங்கள்.