தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள்

நமது வாழ்வில் உற்சாகம் தேவைப்படும் போது அடுத்தவர்களின் அறிவுரைகளோ பிறரின் தேவையோ அவசியம் இல்லை தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் மட்டும் போதும்.

தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளை நமக்கு நாமே சொல்லி கொள்வதன் மூலமும் அந்த வரிகளை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலமும் நமக்கான உற்சாகம் நமக்கு கிடைக்கும்.

நமக்கு நாம் கொடுக்கும் தன்னம்பிக்கை தான் வாழ்வை வெற்றி பெற எப்போதும் நிலைத்து நிற்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நம்மை தவிர நமக்கு வேறு யாராலும் தன்னம்பிக்கையும் உற்சாகமும் கொடுக்க முடியாது.

தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் சிலவற்றை பார்க்கலாம்.

உண்மையை பேசுவதற்கு
எந்தவொரு சூழ்நிலையிலும்
தயங்காதீர்கள். உண்மையை
பேசுவது இலகுவானது
ஏனென்றால்
என்ன பேசுனீர்கள்
என்பதை நினைவில்
வைத்திருக்க வேண்டிய
அவசியம் இல்லை.

பொய் பேசும் போது தான்
நீங்கள் பேசியதை
வாழ் நாள் முழுதும்
ஞாபகம் வைத்திருக்க வேண்டும்
ஏனெனில் நீங்கள்
கூறியதை திரும்பவும்
அதே மாதிரி கூற வேண்டும்.

பிரச்சனைகள் வரும் போது
விடியும் என்ற நம்பிக்கையில்
உறங்க போவது போல
முடியும் என்ற நம்பிக்கையில்
மீண்டு வாருங்கள் இந்த
உலகில் அனைத்தையும்
சாதிக்கலாம்.

எந்தவொரு இழப்பிலும்
நம்பிக்கையை மட்டும்
இழந்து விடாதீர்கள்
இழந்ததிற்கு மேலாக
பெறுவதற்கான சக்தி
நம்பிக்கைக்கு மட்டும்
தான் உண்டு.

நீங்கள் சந்திக்கும்
கஷ்டமான காலம்
எல்லாம் கடுமையான
காலம் என்று எண்ணாதீர்கள்
அந்த காலம் தான் உங்களை
கட்டமைக்கும் காலம்
என்பதை நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.

வாழ்க்கையில் சிறப்பான
அனுபவத்தையும்
பாடத்தையும்
கற்று தரும் ஆற்றல்
உங்கள் எதிரிகளை விட
துரோகிகளிடம் தான்
இருக்கிறது.

எல்லாம் முடிந்து விட்டது
என்று நினைத்து நாம்
உடைந்து போய் இருக்கும்
இடம் தான் எதோ
ஒரு சிறந்த விடயத்திற்கான
ஆரம்ப இடமாக இருக்கும்.

நேற்று நீ செய்த
தவறிற்கான தீர்வை
இன்று நீ கண்டு கொண்டால்
உன் நாளைய தினம்
உயர்வாக இருக்கும்.

நம்மக்கு உண்டாகும்
பிரச்சனைகளுக்கு என்ன
தான் மற்றவர்கள் ஆறுதல்
கூறினாலும் அதற்கான
தீர்வும் விடையும் உன்
கைகளில் மட்டும்
தான் இருக்கும்.

நம் வாழ்வில் ஏற்படும்
அனைத்து துயரங்களும்
நிச்சயம் ஒரு நாள்
மாறியே தீரும் ஆனால்
ஒரே ஒரு நாளில்
அனைத்தும் மாறி விடாது.

அனைவருக்கும் வாழ்க்கையில்
உயரத்தை அடையும்
கனவு இருக்கும். ஆனால்
அதற்கான முயற்சியை
அனைவரும் செய்வதில்லை
ஒரு சிலர் தான் செய்கிறார்கள்.

தன்னமிக்கை ஊட்டும் வரிகள்