லவ் ஸ்டேட்டஸ் கவிதைகள் தமிழ்

Love Status Kavithai Tamil

இந்த தொகுப்பு “லவ் ஸ்டேட்டஸ் கவிதைகள் தமிழ் (Love Status Kavithai Tamil) பற்றியது.

  • லவ் ஸ்டேட்டஸ் கவிதைகள் தமிழ்
  • லவ் ஸ்டேட்டஸ் கவிதை
  • Love Status Kavithai Tamil
  • Love Status Kavithai

லவ் ஸ்டேட்டஸ் கவிதைகள் தமிழ் (Love Status Kavithai Tamil)

நீ பிரியாமல் இரு
நான் இதமாக வாழ்வேன்..
உன் இதயத்தின் ஓரத்தில்..!

நான் உன்னை நேசிப்பது
உன்னோடு வாழ மட்டுமல்ல…
உனக்காக மட்டும் வாழ..!

என் ஆயுள் முழுவதும்
உன் அன்பு நீடிக்க வேண்டும்..
இல்லையேல் உன் அன்பு
உள்ள வரை என் ஆயுள்
நீடித்தாலே போதும்..!

நீயே கேட்டாலும் விட்டு
கொடுப்பதாய் இல்லை..
உன் மீதான என் காதலை..!

தாய்மொழி போல நீ வாழ்வாய்
என்னில் உன் நிழல் பிரிந்தாலும்
வீழ்வேன் மண்ணில்..!

அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள்..
அன்புக்காக ஏங்குபவரை
தேடுங்கள்.. அந்த அன்பு
ஆயுள் வரை நிலைத்திருக்கும்..!

ஒரு முறை பார்த்தவுடன் வருவது
காதல் அல்ல.. ஒரு நாள்
ஒரு முறையாவது பார்க்க வேண்டும்
என ஏங்க வைப்பதே காதல்..!

ஆசை யார் மீது வேண்டுமானாலும்
வரலாம் ஆனால் ஏக்கம் நமக்காக
வாழும் ஒருவர் மீது தான் வரும்
ஏனென்றால் அது தான்
உன் மீதான என் காதல்..!

உனக்காக வாழ்கிறேன் என்று
பிறர் சொல்வதை விட..
உன்னால் வாழ்கிறேன் என்று
ஒருவரை சொல்ல வை..!

உன்னை மறப்பதற்கு.. நீ
ஒன்றும் மணலில் வரையப்பட்ட
ஓவியம் அல்ல.. என் மனதில்
செதுக்கப்பட்ட சிற்பம் நீ..!

மரணம் இல்லா உயிர் கேட்பேன்..
உன் தோள் சாய்ந்து வாழும்
வரம் கிடைத்தால்..!

அளவுக்கு மீறிய அன்பு
அதிக சந்தோசம் தருகிறது
இல்லையெனில் அதிக
வலிகளைத் தருகிறது..!

மனிதனாக பிறந்ததால் தான்
உன்னை நான் காதலித்தேன்..
காற்றாக நான் இருந்தால்
உந்தன் சுவாசமாக
நான் இருந்திருப்பேன்..!

நீ அழும் போது முதலில்
ஆறுதல் சொல்வது..
நீ நேசித்தவராக இருக்கமாட்டார்
உன்னை நேசித்தவராக
தான் இருப்பார்..!

இதயம் இருக்கும் வரை..
என் இதயமாக நீ..
என் இதயத்தில் இருப்பாய்..!

புயலை விட வேகமாக தாக்குகின்றது..
உன் பார்வை கொஞ்சம்
தாழ்த்திக் கொள்
நான் நிலையாக நிற்க..!

நீ காதலை தந்த போது
வாழ்வின் அர்த்தம் புரிந்தது..
நீ பிரிந்து சென்ற போது
வலியின் அர்த்தம் புரிந்தது..!

காரணம் தெரியாத
அன்பை விட காரணம் தெரிந்த
கோபத்தில் உள்ள
உண்மையால் தான் காதல்
இன்னும் வாழ்கிறது..!

யாருக்காகவும் உன்னை
மாற்றிக் கொள்ளாதே ஆனால்
உனக்காக தன்னையே
மாற்றி கொள்பவர் கிடைத்தால்
அவர்களை தொலைத்து விடாதே..!

நேரம் கிடைக்கும் போது மட்டும்
நலம் விசாரிக்காமல் நமக்காக
நேரம் ஒதுக்கி நலம் விசாரிக்கும்
அன்பான உறவு கிடைப்பது கூட
ஒரு பெரிய வரமே..!

மனதிற்கு பிடித்த ஒருவரால்
மட்டுமே.. அருகில்
இல்லாத போதும் தனிமையில்
சிரிக்க வைக்க முடியும்..!

மேலும் படிக்க…