லவ் கவிதைகள் வரிகள் தமிழ்

love kavithaigal in tamil

இந்த தொகுப்பில் “லவ் கவிதைகள் வரிகள் தமிழ் (love kavithaigal in tamil) பார்க்கலாம்.

  • லவ் கவிதை வரிகள்
  • தமிழ் லவ் கவிதைகள்
  • love kavithaigal in tamil
  • love kavithai in tamil

லவ் கவிதைகள் வரிகள் தமிழ் – love kavithai in tamil

ஆசை யார் மீது வேண்டுமானாலும்
வரலாம் ஆனால் ஏக்கம் நமக்காக
வாழும் ஒருவர் மீது தான் வரும்
அது தான் காதல்..!

எத்தனை தடவை யோசித்தாலும்
ஞாபகத்திற்கு வர மறுக்கிறது..
உன் மேல் காதல் வந்த அந்த
அழகான நொடி..!

உன் காதலை தயக்கமின்றி
சொல்லி விடு.. இதயங்கள்
உடைவதற்கான முதல் காரணம்
காதலை சொல்லாதது தான்..!

எதுக்கெடுத்தாலும் நம்மைப்
பிடிக்கவில்லை என்று சொல்ல
ஆயிரம் இதயங்கள் இருந்தாலும்..
எது நடந்தாலும்.. உன்னைப்
பிடித்திருக்கிறது என்று சொல்ல
ஒரு இதயம் இருந்தாலே போதும்..
வாழ்க்கை என்பது சுகமே..!

எத்தனை வேலைகள் இருந்தாலும்
என் அலைபேசி அதிர்ந்ததும்
நீயாக இருக்கும் என்று தானாக
ஓடும் என் கால்கள்..!

நீண்ட நாட்களாய் பூக்கள் மலரும்
சத்தம் கேட்டு ரசிக்க ஆசை..
அன்று தான் அது நிறைவேறியது
உன் இதழ்கள் விரித்து
என் பெயரை உச்சரித்தாய்..!

வான வீதியில் பவனி வரும் நிலவு
மகாராணிக்கு அள்ளி
இறைக்கப்பட்ட மல்லிகை
மலர்களோ நட்சத்திரங்கள்..!

காண முடியாத தூரம் தான்
இருப்பினும் காணும் இடமெல்லாம்
உன் முகம் தான்..!

கொஞ்சம் நேரம் பேச “ஆசை”..
கொஞ்சிக் கொஞ்சிக் பேச “ஆசை”..
நீ பேச பேச கேட்க “ஆசை”..
உன் குரல் கேட்டு கேட்டு மயங்க
“ஆசை”.. மயங்கி மயங்கி உன்
மடியிலேயே உலகை மறந்து
கிடக்க ஆசை..!

கணவன் எல்லா நேரமும் கூடவே
இருக்க வேண்டும் என்பதல்ல
மனைவியின் ஆசை..
கூட இருக்கின்ற கொஞ்ச நேரத்திலும்
சந்தோஷமா பாத்துக்கனும்
என்கிறது தான் மனைவியின் ஆசை..!

எனக்கு உன் கூட அப்பிடி இருக்கணும்
இப்படி இருக்கணும் என்றெல்லாம்
ஆசை இல்லை.. எப்பவும் உன் கூட
மட்டும் இருக்கனும் அவ்வளோதான்..!

நேரில் பார்க்க ஆசை..
பார்க்க முடியவில்லை கண்கள்
இரண்டும் உன்னையே தேடுகிறது
எப்போது உன்னை பார்ப்பேன் என்று..!

ஒரு பெண்ணின் அதிகபட்ச ஆசை..
தனக்குள் இருக்கும் சின்ன
ஆசையை அன்பால் நிறை வேற்றும்
ஆண் கிடைத்தால் போதும்..!

தேடவில்லை என்று வருந்தாதே
உன்னை தொலைத்தால் தானே
தேடுவதற்கு..!

என்னை தினமும் அணு அணுவாக
பேசாமல் கொல்லும் கூர்மையான
ஆயுதம் அவளின் மௌனம்..!

உரிமை கொண்டாடுவதல்ல
வாழ்க்கை உணர்ந்து வாழ்வதே
வாழ்க்கை..!

ஆழமாய் பழகி ஒருவரை
புரிந்து கொள்ள முடியவில்லை
என்றால்.. அங்கு அன்பு
தோற்று நிற்கிறது..!

நான் எப்போது தனிமையில்
அமர்ந்திருந்தாலும் என் கூடவே
அமர்ந்திருக்கும் உன் நினைவுகள்..!

மேலும் இது போன்ற பதிவுகளை படியுங்கள்..