பாசம் கவிதைகள் வரிகள்

pasam kavithaigal in tamil

இந்த தொகுப்பில் “பாசம் கவிதைகள் வரிகள்” பார்க்கலாம்.

  • பாசம் கவிதை வரிகள்
  • பாசம் கவிதை
  • pasam kavithaigal in tamil

பாசம் கவிதைகள் வரிகள்

பணம் இன்று வரும் நாளை
வந்த வழி சென்று விடும்..
ஆனால் பாசம் என்றும்
நிலையானது.. பணத்துக்காக
பாசத்தை விற்று விடாதீர்கள் 
மீண்டும் கிடைப்பது கடினம்..!

பாசம் கட்டவிட்டாலும்
பரவாயில்லை.. வேஷம்
போடாதீர்கள்..!

அதிக பாசம் ஒரு நாள் நம்மை
அனாதை ஆக்கிவிடும்..!

ஆயிரம் பேர் எதிர்த்து நின்று
நம்மீது பழி சொன்னாலும்..
தவறு நம்மீதே இருந்தாலும்
நம்மை விட்டுக்கொடுக்காமல்
இறுதிவரை போராடும் உறவுக்கு
பெயர் தான் மனைவி..!

பழகிவிட்டு போக பலர்
வருவார்கள் பாசம் காட்ட
ஒருவர் மட்டுமே இருப்பார்..
இழிவுபடுத்தி இழந்து விடாதீர்கள்..!

காரணத்தோடு சண்டை போடுவதும்
காரணமின்றி கோபப்படுவதும்..
வெறுப்பதன் வெளிப்பாடு அல்ல..
பாசத்தின் மாறுபாடு தான்.. இதை
தவறாக புரிந்து கொள்பவர்களே
அதிகம்..!

நடிக்க தெரியாத பாசத்தில்
அதிகம் இருப்பது கோபம்
சண்டை மட்டுமே..!

நீ அன்பாக பேசி என்னை
வென்றாலும் பேசாமலே இருந்து
நீ என்னை கொன்றாலும்..
உன்னை நிழல் போல் துரத்துவேன்
என்றென்றும்..!

அவசரப்பட்டு யார் மேலையும்
அதிகமா பாசம் வைச்சிடாதீங்க..
இங்கு யாரு எப்போ எப்பிடி
மறுவாங்கனு தெரியாது..!

உண்மையான பாசம் இருந்தால்..
வார்த்தைகள் தேவையில்லை
நினைவுகள் கூட பேசும்..!

பொய்யா பழகுறவங்கள
நம்புறாங்க.. உண்மையான
பாசமும் அக்கறையும்
கொண்டவங்கள மதிக்க கூட
மாட்டேங்குறாங்க..!

பாசமே இல்லாதவங்க கிட்ட பாசம்
காட்டினால்.. பழகிய பாவத்திற்கு
வேஷம் வேணும்னா போடுவாங்களே
தவிர பாசம் கிடைக்காது..!

பல மணி நேரம் பேசும்
உதடுகளை விட சில நிமிடம்
நினைக்கும் இதயத்திற்கு தான்
பாசம் அதிகம்..!

ஆசை என்பது சில நாட்களில்
மறைந்து போகும்.. ஆனால்
பாசம் மட்டுமே வாழ்நாள் முழுவதும்
நிலைத்து நிற்கும்..!

வேஷம் நிறைந்த பாசம்
மதிக்கப்படுகின்றது..
உண்மை கலந்த நேசம்
வீசப்படுகிறது..!

உண்மையான பாசத்திற்கு
தகுதியானவர்கள் நமக்கு
கிடைத்து விட்டால் கண்களில்
கண்ணீருக்கு வேலையிருக்காது..
மனதினில் மகிழ்ச்சிக்கும்
பஞ்சம் இருக்காது..!

தேவையின் முடிவில் அனைத்து
பாசமும் ஊமை ஆகிவிடுகின்றது.

ஒரு பெண் அழகென்று
அனைவருக்கும் தெரியும்.. ஆனால்
ஒரு ஆண் அழகென்று அவனை
ஆழமாய் நேசிக்கும் பெண்ணிற்கு
மட்டுமே தெரியும்..!

நம் பாசத்தை பற்றி
நினைத்துக் கூட பார்க்க
நேரமில்லாதவர்களை தான்
நாம் துரத்தி துரத்தி நேசிக்கிறோம்..!

உலகத்திலேயே மிக அதிபயங்கர
போதை எது தெரியுமா..? நமக்கு
பிடித்தவர்களின் பாசத்திற்காக
ஏங்கி தவிப்பது தான்..!

நானும் வெறுக்க தொடக்கி விட்டேன்
சில உறவுகளை காரணம்.. நான்
வைத்த உண்மையான பாசம்
பொய்யாகிப் போனதால்..!

 ஒரு சிலர் நம்ம மீது பாசமா
இருக்காங்கனு நினைக்கும் போது
சந்தோஷமா இருக்கு இருந்தாலும்
அது வேஷமாக போயிடுமோனு
அதை விட பயமா இருக்கு.

பாசம் பலவீனமான ஆயுதம் ஆனால்
பலமாக காயம் தந்துவிடும்..!

அன்பு பாசம் வைத்தவர்களுக்கு
மட்டும் எப்போதும்
இரண்டு தண்டனை…
பிரிவு..!
நினைவு..!

மேலும் படியுங்கள்..