கலைஞர் கருணாநிதி பொன்மொழிகள்

Kalaignar Karunanidhi Quotes In Tamil

இந்த பதிவில் “கலைஞர் கருணாநிதி பொன்மொழிகள்” பார்க்கலாம்.

முத்துவேல் கருணாநிதி என்ற இயற்பெயர் கொண்ட கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் முதல்வராக ஐந்து முறை பதவி வகித்தவர்.

  • கலைஞர் பொன்மொழிகள்
  • கருணாநிதி பொன்மொழிகள்
  • Kalaignar Karunanidhi Quotes In Tamil

கலைஞர் கருணாநிதி பொன்மொழிகள்

1.நான் தாக்குதலை தாங்கிக்கொள்ளும்
பழக்கம் உள்ளவன் மட்டுமல்ல..
தாக்குதலை விரும்புபவனும் கூட..
தாக்கப்பட்டால் தான் நான் கூட
மெருகு பெற முடியும்.!

2. மோதிக்கொள்வது என்பது சாதாரணமான
விடயம் தான்.. ஆனால்
அதனால் ஏற்படுகிற பலன், விளைவு
என்ன என்பதுதான்
மிக முக்கியமான விஷயம்.!

3. கோரிக்கைகளை நீட்டுவதில்
நான் குறைபடுவது இல்லை..
சிலநேரங்களில் கோரிக்கைகளுக்கு
பதிலாக கோரக் கைகள் நீட்டப்படுவதை
கண்டுதான் பயம் கொள்கிறேன்.!

4. பதவிகள், பவுசுகள் வரும் போகும்..
நிலைக்காது.. தியாகம் மட்டுமே
என்றும் நிலைக்கும்.

5. உலகில் ஓரிருவர் சரித்திரமாகிறார்கள்..
ஒருசிலர்.. சரித்திரத்தை உருவாக்குகிறார்கள்..
பலர் சரித்திரத்தில் இடம் பெறுகிறார்கள்..
மிகப்பலரோ இவை எதுவுமின்றி
தரித்திரங்களாகவே மறைந்து போகிறார்கள்.!

6. நம் நாட்டில் இப்போது நடந்து
காட்டுகிறவர்களை விட..
நடித்து காட்டுபவர்கள் தான் அதிகம்.!

7. ஒளியில் தான் நமது நிழலின் வடிவம்
நமக்கு தெரிகிறது..
சோதனையில் தான்
நமது நெஞ்சின் வலிமை
நமக்கு புரிகிறது.!

8. அமைச்சர்கள் முன்னாள் அமைச்சர்கள்
ஆகி விடுகிறார்கள்..
தியாகிகள் முன்னாள் தியாகிகள்
ஆவதில்லை.!

9. பொது வாழ்க்கையில் என்மீது
கற்கள் வீசப்பட்ட போதும்..
மலர்கள் தூவப்பட்ட போதும்
இரண்டையும் ஒன்றாக கருதிதான்
பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன்.!

10. பழியுணர்வு மட்டுமே வாழ்க்கை
எனக் கொண்டவர்கள்..
பகைவர் இல்லாமலே தமக்கு தாமே
குழி வெட்டிக்கொள்வார்கள்.!

11. துணிவிருந்தால் துக்கமில்லை..
துணிவில்லாதவனுக்கு
தூக்கமில்லை.!

12. கண்ணீரில் மலரும் காதல்..
சேற்றில் மலரும்
செந்தாமரையாய்
காட்சி தருவதும் உண்டு.!

Kalaignar Karunanidhi Quotes In Tamil

13. சிரிக்க தெரிந்த மனிதன் தான்
உலகத்தின் மனிதத் தன்மைகளை
உணர்ந்தவன்.!

14. அதிருப்தியாளர்கள் வளர வளர
அவர்களின் மத்தியில்
அவர்களை நடத்திச் செல்லும்
தலைவன் ஒருவன் தோன்றிவிடுவான்.!

15. ஒருவர் எத்தனை ஆண்டுகள்
உயிர் வாழ்ந்தார் என்பதை
அவர் மரணித்து போன நாளில்
இருந்து தெரிந்து கொள்ளலாம்.!

16. அணு அளவு கூட இதயமில்லா
ஒருவருக்கு ஆகாயம் அளவு
மூளையிருந்து என்ன பயன்.?

17. அனுபவம் ஒரு பள்ளிக்கூடம்
ஆனால் அதில் ஆணவக்காரர்கள்
கற்று தேர்வதில்லை.!

18. பதவி என்பது முள்கிரீடம்
போன்றது.!

19. கூடவே இருந்து இழிவு செய்யும்
நண்பர்களை விட..
எதிரில் எதிர்த்து நிற்கும் எதிரி
எவ்வளவோ மேல்.!

20. மனச்சாட்சி உறங்கும் நேரத்தில் தான்
மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்புகிறது.!

21. குச்சியை குச்சியால் சந்திக்க வேண்டும்..
கூர்வாளை கூர்வாளால் தான்
சந்திக்க வேண்டும்.!

22. தோழமையின் உயிர் துடிப்பே
துன்பத்தை பகிர்ந்து கொள்வதில்
தான் இருக்கிறது.!

23. உண்மையை மறைக்க முயல்வது
விதையை பூமிக்குள் மறைப்பது
போலத்தான்.!

24. ஆசைகள் சிறகு ஆகலாம்
அதற்காக கால்களை
இழந்துவிட்டுப் பறந்தால்
பிறகு பூமிக்கு திரும்ப முடியாது.!

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

வாழ்க்கை தத்துவம் கவிதை வரிகள்

அறிஞர் அண்ணா பொன்மொழிகள்

முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்

சீமான் பொன்மொழிகள் – Seeman Quotes