Ponmozhigal In Tamil Words

Ponmozhigal

Here are the Latest Collection of Ponmozhigal In Tamil Words (பொன்மொழிகள்).

Ponmozhigal In Tamil Words

உண்மையை எதிர்கொள்ள துணிச்சல்; மறுப்பு தெரிவிக்க தைரியம்; சரியான செயல்களைச் செய்தல்; இவையே நேர்மையான வாழ்க்கைக்கான மந்திர திறவுகோல்.

எப்பொழுது நாம் நமது எண்ணங்களை ஒழுங்காக வழிநடத்துகிறோமோ, அப்பொழுது நம்மால் நமது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடிகின்றது.

உங்களின் தனிப்பட்ட சாதனை உங்கள் மனதிலேயே தொடங்குகிறது; உங்களின் பிரச்சினை, குறிக்கோள் மற்றும் ஆசை என்ன என்பதை சரியாக அறிவதே முதல்படி.

வாழ்க்கையானது வாழ்வதற்கு மதிப்பானது என்பதை உறுதியாக நம்புங்கள், உங்கள் நம்பிக்கை அதை உண்மையாக்க உதவும்.

எப்பொழுதெல்லாம் மற்றவருடன் உங்களுக்கு முரண்பாடு ஏற்படுகிறதோ, அப்பொழுது உறவு சிதைவதற்கும் மற்றும் ஆழமாவதற்கும் இடையேயான வித்தியாசத்தை ஏற்படுத்துவது உங்கள் அணுகுமுறையே.

தனது ஒழுக்கத் தன்மையை இழந்து விட்ட எந்தவொரு சமுதாயமும் அழிவை நோக்கியே செல்கிறது. ஏனென்றால், எல்லாத் தோல்விகளுமே ஒழுக்கமின்மையால் எற்பட்டவையாகவே இருந்திருக்கின்றன.

நீங்கள் ஒரு உயர்ந்த சுய மதிப்பினை விரைவாக வளர்த்துக் கொள்ள விரும்பினால், முதலில் உங்களுக்கு எந்த வகையிலும் பிரதிபலன் செய்ய முடியாதவர்களுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்.

வாய்ப்புகள் தடைகளைப்போல மாறுவேடம் போட்டுக் கொண்டு வரும். ஆகவேதான் பெரும்பாலான மக்கள் அவற்றை உணருவதில்லை.

வெற்றியாளர்கள் ஒவ்வொரு நாளையும் கடைசி நாளாகவே நினைத்து வேலை செய்கிறார்கள். ஏனெனில் எதாவது ஒருநாள் கடைசி நாளாக இருக்கப் போகிறது; அந்த நாள் எது என்பதை நாம் அறியமாட்டோம். அவர்கள் இறக்கும்போது வெற்றியாளர்களாகவே இறக்கிறார்கள்.

வாழ்க்கையில் நாம் எப்படிச் சோதனைகளை எதிர்கொள்கிறோம் என்பதை பொறுத்து அவை துன்பமாகவோ அல்லது வெற்றியாகவோ அமையலாம். முயற்சி இல்லாமல் வெற்றி வருவதில்லை.

விதையை விதையுங்கள். ஆனால் எந்தக் கொடுங்கோலனையும் அறுக்க விடாதீர்கள். செல்வத்தைத் தேடுங்கள் ஆனால் எந்த ஏமாற்றுக்காரனையும் குவிக்க விடாதீர்கள்.

தர்ம உள்ளம் படைத்த மனிதன் ஆணையிடுவதும் இல்லை; அடங்கிப் பணிவதும் இல்லை. அதிகாரமானது ஒரு படுகாசகரமான கொள்ளை நோயைப் போல், தான் தொட்டதையெல்லாம் கறைப்படுத்தும்.

இந்த உலகில் நாம் கற்றுக்கொண்ட பாடத்தை விட வறுமை, அவமானம், புறக்கணிப்பு இவைகள் கற்றுத்தந்த பாடமே அதிகம்.

வறுமையில் கை கொடுத்து உதவுவாரில்லை வந்தவர் போனவர் அறிவுரைக்கோ பஞ்சமில்லை.

சொந்த வீடாயினும் சொந்த உழைப்பில் சாப்பிடாவிட்டால் சாப்பிடும் சாப்பாடும் குற்ற உணர்வை ஏற்படுத்தும்.

எதிர்பார்ப்பு இல்லாமல் எவரும் எதையும் செய்ய மாட்டார்கள்.. உதவி செய்வது கூட ஏதோ ஒன்றை எதிர்பார்த்து தான்.

தூக்கத்தில் இருப்பவனை எழுப்பாதே அப்போது தான் அவன் பாவம் செய்யாமல் இருக்கிறான்.

கோபத்தில் ஒருவரை ஒரு அடி அடித்துவிடுவது எளிது ஆனால் எழும் கையை தாழ்த்தி மனதைக் கட்டுப்படுத்தி அமைதியாய் இருப்பது கடினமான செயல். இந்த கடினமான செயலைத்தான் நீ பழகிக்கொள்ள வேண்டும்.

எல்லா விதத்திலும் ஒத்துப்போவது நட்பல்ல.. இருவருக்கிடையே கருத்து மோதல் ஏற்படும் போதிலும் அதை தாங்கிக் கொள்வதுதான் உண்மையான நட்பு.

சிரமங்கள் உங்களை நெருங்க சிரமப்படும் அளவிற்கு உழையுங்கள்.

வாழ்க்கையில் நல்ல எண்ணங்களை சிந்திக்க முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.. பின்பு அனைத்தும் தானாக நடக்கும்.

தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை உயர ஆரம்பிக்கும்.

இதுவரை வாழ்ந்த வாழ்வை அழிக்கவும் முடியாது.. இனி வாழப்போகும் வாழ்வை அறியவும் முடியாது.. கற்றுக்கொண்ட பாடங்கள் தான் வாழ்க்கையை கடக்க உதவும்..!

Read More Tamil Quotes.

ஊக்கமூட்டும் மேற்கோள்கள் தமிழில்

Tamil Quotes For Life