தன்னம்பிக்கை பொன்மொழிகள்

பொன்மொழிகள்

தன்னம்பிக்கை பொன்மொழிகள் (Ponmozhigal) – நம் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்த உதவியாக இருக்கும். சிறந்த நம்பிக்கை பொன்மொழிகளை இந்த பதிவில் காணலாம்.

தன்னம்பிக்கை பொன்மொழிகள் (Ponmozhigal)

தன் வாழ்க்கைக்கு தேவையான
முடிவை தானே சுயமாக
முடிவெடுக்க தெரியாதவன்
பெரும்பாலும் அடிமையாகவே
இருப்பான்.

தன்னம்பிக்கை என்பது
ஒரு நாளில் உதிர்ந்து விடும்
பூவாக இருக்க கூடாது
ஒவ்வொரு நாளும் பூக்கும்
செடியாக இருக்க வேண்டும்.

சிறந்த குறிக்கோளை
அடைவதற்காக மனிதனால்
செய்யப்படும் முயற்சியே
பிற்காலத்தில் மற்றவர்களால்
படிக்கப்படும்
வரலாறாக மாறுகிறது.

எல்லோரையும் அதிகம்
நம்புங்கள் துரோகம் பழகிடும்..
யாரையும் தங்கி வாழாதீர்கள்
தன்னம்பிக்கை
தானாக வந்திடும்.

தவறு செய்யும் மனிதர்களை
தவறாக பேசாதீர்கள்
ஏனென்றால் உங்கள்
வாழ்க்கை இன்னும்
முடியவில்லை.

வெற்றி எனும் உயரத்தை
அடைய ஏணியாக
இருக்கும் ஆயுதம் தான்
தன்னம்பிக்கை
அதை
எப்போதும் வளர்த்துக் கொள்.

தன்னம்பிக்கை எனும்
ஆயுதம் மட்டும் நம்மிடம்
இருந்து விட்டால்
முடிக்க முடியாத விடயம்
என்று எதுவும் இந்த
உலகில் இருக்காது.

தன்னம்பிக்கை இல்லாதவன்
வெற்றி பெறுவது கடினம்..
அசைக்க முடியாத
தன்னம்பிக்கை கொண்டவன்
வீழ்வது அரிது.

தன்னம்பிக்கையை
வளர்த்துக் கொள்ள
உங்கள் உதடுகளில்
எப்போதும் புன்னகையை
வைத்திருங்கள் அது
தருகின்ற தன்னம்பிக்கை
வேறு எங்கும் கிடைக்காது.

ஒவ்வொரு முறையும்
தன்னம்பிக்கை வெற்றியை
தேடித் தராது ஆனால்
வெற்றிக்கான படிக்கட்டை
உருவாக்கி தரும்.

என்றும் உங்கள் மனதில்
வைத்துக் கொள்ளுங்கள்..
மனிதனாக பிறந்தவன்
பயனின்றி அழியக்கூடாது.

முடியாத விடயங்கள்
குறித்து கனவு காண்பவர்களே
அவற்றை வெற்றி
கொள்ள முடியும்.

சலித்துக் கொள்பவன்
ஒவ்வொரு வாய்ப்பிலும்
உள்ள ஆபத்தைப் பார்க்கின்றான்.
சாதிப்பவன் ஒவ்வொரு
ஆபத்திலும் உள்ள
வாய்ப்பினைப் பார்க்கின்றான்.

பலம் கொண்ட
உடலை விட தன்னம்பிக்கை
கொண்ட மனமே சிறந்தது.

நீங்கள் ஆசைப்படுவது
உங்களுக்கு கிடைக்காமல்
போகலாம் ஆனால்
உங்களுக்கு தகுதியானது
உங்களுக்கு நிச்சயம்
கிடைத்தே தீரும்.

அரிய சாதனைகள்
எல்லாம் வலிமையினால்
செய்யப்பட்டவை அல்ல..
தன்னம்பிக்கையாலும்
விடாமுயற்சியாலும்
செய்யப்பட்டவை.

நம்முடன் வாழ்வோரை
புரிந்து கொள்வதற்கு
நம்மை முதலில் புரிந்து
கொள்ள வேண்டும்.

விழுந்து விட்டேன் என்று
கண்ணீர் சிந்துவதை விட..
எழுந்து விட்டேன் என்று
புன்னகை செய்.!

விடாமுயற்சி மற்றும்
தன்னம்பிக்கை இந்த
இரண்டும் தான் உங்கள்
வாழ்க்கையில்
முன்னேற்றத்தை
ஏற்படுத்தும் ஆயுதங்கள்.

வெற்றி பெறும் நேரத்தை விட
நாம் மகிழ்ச்சியுடனும்
நம்பிக்கையுடனும் வாழும்
நேரமே நமக்கு கிடைக்கும்
மிகப் பெரிய வெற்றி.

வாழ்வில் சம்பாதிக்க
வேண்டிய மிகப் பெரிய
விடயம் தன்னம்பிக்கை.

தன்னம்பிக்கை, தெளிவு
மற்றும் துணிச்சல்
இந்த மூன்றும் தான்
ஒருவனை எப்போதும்
காப்பாற்றி உயர்த்தும்
ஆயுதங்கள்.

நீங்கள் எந்த வார்த்தையை
அடிக்கடி சொல்கிறீர்களோ
அந்த வார்த்தை
ஒரு நாள் உங்கள் வாழ்வில்
உண்மையாக பலித்துவிடும்..
எனவே நம்பிக்கையுடன்
வெற்றி வெற்றி என்று
சொல்லுங்கள்.

முடியாது என்று சொல்வது
மூட நம்பிக்கை.. முடியுமா
என்று கேட்பது அவநம்பிக்கை..
முடியும் என்று சொல்வதே
தன்னம்பிக்கை.!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.