நம்பிக்கை தரும் பொன்மொழிகள்

நாம் வாழ்க்கையில் துன்பத்தை எதிர் நோக்கி துவண்டு போகும் நேரங்களில் நம்பிக்கை தரும் பொன்மொழிகள் எமக்கு உத்வேகத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும்.

இந்த தத்துவங்கள் வாழ்க்கையை வென்ற மனிதர்களாலும் ஞானிகளாலும் சொல்லப்பட்ட நம்பிக்கை தரும் பொன்மொழிகள்.

பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி பெறுவான்.

வாழ்க்கையில் பொறுமை அவசியமான ஒன்று வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பொறுமையை இழக்க கூடாது. “பொறுத்தார் பூமி ஆழ்வார்” என்ற பழமொழியை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

சுயமாக சிந்திக்க தெரிந்தவனுக்கு அடுத்தவர்களின் ஆலோசனைகள் தேவை இல்லை.

ஒவ்வொருவருக்கும் சுயமான சிந்தனைகள் தேவை. அடுத்தவர்களின் சிந்தனைகளை கேட்டு நாம் வாழ ஆரம்பித்தால் நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.

சரி எது..? பிழை எது..? என எம்மால் சிந்திக்க முடிந்தால் மற்றவர்களின் ஆலோசனைகள் எமது வாழ்க்கைக்கு அதிகம் தேவைப்படாது.

துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வி இல்லை.

நாம் வாழும் வாழ்க்கையில் அனைவருக்கும் துன்பங்கள் வரும். துன்பங்களும் கவலைகளும் இல்லாத வாழ்க்கை இல்லை.

துன்பங்கள் வரும் போது அதை தைரியமாகவும் சாதுரியமாகவும் எதிர் கொள்ள நாம் கற்றுக் கொள்ள வேண்டும். துன்பங்களை கண்டு துவண்டு விட கூடாது.அனைத்திலும் வெற்றி அடைவதற்கான ரகசியம் விடா முயற்சி

வெற்றி எனும் அர்த்தத்தை இலகுவில் அடைந்து விட முடியாது. ஆனால் விடா முயற்சியம் கடின உழைப்பும் நிச்சயம் வெற்றியை தேடி தரும்.

தற்போதைய சிறு முடிவு மூலம் உங்களுடைய எதிர்காலம் அனைத்தையும் மாற்ற முடியும்.

இன்று நீங்கள் எடுக்கும் முடிவு மூலம் உங்களுடைய வாழ்க்கை முழுவதையும் மாற்ற முடியும். நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.

எந்த சந்தர்ப்பத்திலும் நீங்கள் எடுத்த முடிவில் இருந்து பின் நகரக்கூடாது. நீங்கள் எடுக்கும் முடிவு சிறப்பானதாக இருக்க வேண்டும்.

சிறந்த சிந்தனை வரிகள்