காதல் பொன்மொழிகள்

காதல் பொன்மொழிகள் பலராலும் தேடப்படும் ஒன்றாக இருக்கின்றது காரணம் காதல் என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணர்வு.

காதலை சுவாசிக்காத உயிர்கள் இந்த உலகில் இருக்க முடியாது. காதல் என்பது ஒரு மகத்தான உணர்வு இந்த பதிவில் காதல் பொன்மொழிகள் பற்றிய தொகுப்பை தான் பார்க்க போகிறோம்.

காதல் பொன்மொழிகள்

எந்த ஒரு பெண்ணால் ஒரு
ஆணின் கடந்த கடந்த
காலத்தை மறக்க வைக்க
முடிகிறோதோ அந்த
பெண் தான் அந்த
ஆணின் முழு எதிர்காலம்
ஆகிறாள்.

உன்னை எப்போதும்
நினைத்து கொண்டிருப்பதாலே
சில நேரங்களில் என்னையே
நான் மறந்து விடுகிறேன்.

கண்கள் திறக்கும் வரை
தான் கனவு நீடிக்கும்
ஆனால் உன் நினைவுகள்
ஆயுள் வரை நீடிக்கும்.

ஆறுதல் கூறமுடியாத பல
வலிகளுக்கு உன்
அரவணைப்பு சிறந்த
மருந்தாகஇருக்கிறது.

எனக்கு உனக்கு நான்
இந்த உறவை யாராலும்
எப்போதும் பிரிக்க முடியாது.

உணர முடியாத
மகிழ்ச்சியையும் உணர
முடியாத வலியையும்
கொடுப்பது நம் மனதால்
காதல் செய்யப்படுபவர்கள்
தான்.

நதியில் விழுந்த இலையும்
காதலில் விழுந்த மனமும்
ஒன்று தான் இரண்டுமே
கரை சேரும் வரை
தத்தளித்துக் கொண்டே
இருக்கும்.

நீ நேசிக்கும் இதயம்
உன்னிடம் நிறைய
எதிர்பார்க்கலாம். ஆனால்
உன்னை நேசிக்கும்
இதயம் உன்னை மட்டும்
தான் எதிர் பார்க்கும்.

கண்கள் இமைக்க மறந்த
நேரங்களில் கூட உன்னை
நினைக்க மறக்கவில்லை
ஏனென்றால் நீ என்
இதயத்தில் இருப்பதால்.

என் வாழ்க்கையில் எனக்கு
கிடைத்த பொக்கிஷ
புதையல் நீ தான்
தெரியாமல் கூட
அதை நான்
தொலைக்க மாட்டேன்.

உன்னோடு சேர்ந்து
வாழ முடியாது என
தெரிந்தும் கூட மனமோ
உன்னை நேசிப்பதை
தவிர்க்க முடியவில்லை.

ஒரு பெண்ணின் அழகு
அவளின் முகத்திலும்
உடலிலும் இல்லை
அவள் காட்டும் அன்பிலும்
நடத்தையிலும் தான்
அவளின் அழகு
இருக்கின்றது.

ஒரு ஆணின் அழகு
பணத்திலும் பொருளிலும்
இல்லை அவனின் அழகு
பெண்ணுக்கு கொடுக்கும்
மரியாதையில் இருக்கிறது.

நீ என்னை எவ்வளவு
காயப்படுத்தினாலும்
உன் மீது அன்பு
செலுத்துவதையும்
உன்னை நேசிப்பதையும்
என்னால் கூட
தவிர்க்க முடியாது.

உன்னிடம் அடிக்கடி
சண்டை போடும்
இதயத்தை விட்டு விடாதே.
அவர்களை விட உன்னை
யாராலும் ஆழமாக
நேசிக்க முடியாது.

அதிக கோபம் கொண்டதும்
உன் மேல் தான் அதே போல
அதிக பாசம் கொண்டதும்
உன் மீது தான்.

நீ நேசிக்கும் இதயம்
உன்னை விரும்பிய போது
விரும்பினாய் என்பதை
விட உன்னை வெறுத்த
போதும் நீ விரும்பினாய்
என்பதே உண்மை காதல்.

நேற்று வரை நேரம்
போகவில்லை என்று
கவலை இன்று நேரம்
போதவில்லை என்று
கவலை உனது
அருகினில்
இருப்பதனால்.

நேசிக்கும் காதல் மீது
அதிகளவு அன்பு
வைத்திருப்பதை விட
அதிகளவு புரிதல்
வைத்திருப்பது ஆயுள்
வரை அந்த உறவை
வாழ வைக்கும்.

வாழ்க்கையில் பிரிவும்
கோபமும் வருவது
ஒருவரை மறப்பதற்கு
அல்ல அவர்களை
அதிகமாக நினைப்பதற்கு.

என்னை வெறுக்க
உன்னிடம் பல காரணம்
இருக்கலாம் ஆனால்
உன்னை எனக்கு பிடிக்க
ஒரு காரணம் மட்டும்
போதும் “காதல்”.

காதல் பொன்மொழிகள்

இந்த காதல் பொன்மொழிகள் காதலின் உணர்வை வார்த்தைகளால் உணர்த்துபவையாக இருக்கும். அதனால் தான் காதல் பொன்மொழிகள் பலராலும் விரும்பப்படுகின்றது.

மனதை தொடும் காதல் கவிதைகள்