Tamil Thoughts: அன்பு ஏமாற்றம் கவிதை

anbu ematram kavithaigal

இந்த பதிவில் அன்பு ஏமாற்றம் கவிதை (Tamil Thoughts) தொகுப்பை பார்க்கலாம். அன்பை கொடுத்து ஏமாறுபவர்களுக்கு தான் அதன் வலி புரியும்.

Tamil Thoughts: அன்பு ஏமாற்றம் கவிதை

அன்பை போல மிகச்
சிறந்த பரிசும் இல்லை
அன்பை போல மிக
மோசமான தண்டனையும்
இல்லை அன்பு ஏமாற்றம்
அடையும் போது அதன்
வலி பெரிதாக இருக்கும்.

ஏமாந்து போவதற்கு
முட்டாளாக இருக்க வேண்டும்
என்று அவசியம் இல்லை.
அன்புக்கு ஏங்கும் மனம்
கொண்டவர்களாக
இருந்தாலே போதும்.

இந்த உலகில் விலை
மதிப்பில்லாத பொக்கிஷம்
அன்பு தான் ஆனால் அது
எந்த விலையும் இல்லாமல்
கிடைப்பதால் அதன்
பெறுமதியை பலரும்
உணர்வதில்லை.

உங்கள் மீது அன்பு
கொண்டவர்களை விட்டு
அதிக தூரம் சென்று விடாதீர்கள்.
திரும்பி வருவதற்கு நிச்சம்
பாதைகள் இருக்காது.

உயிருடன் வாழும் போதே
மரணத்தை பார்த்தவர்கள்
அளவுக்கு மீறிய அன்பு
வைத்து ஏமாற்றம்
அடைந்தவர்கள்.

அன்பு எனும்
பொக்கிஷத்தை தர
எனக்கு யாரும் இல்லை
என்பதை விட, நாம்
யாருக்கும் பாரமாக இல்லை
என்பதே உண்மை.

நீ வெறுக்கும் அளவிற்கு
நான் அழகில்லாமல்
இருக்கலாம். ஆனால்
நீ என்னை ரசிக்கும்
அளவிற்கு அன்பு
கொண்டவன்.

அன்பை புரிந்து
கொள்ளாததை விட
வேதனையானது அன்பை
தவறாக புரிந்து கொள்வது.

பேச வேண்டாம் என
முடிவு எடுத்த பின்பும்
நீயாக பேச மாட்டிய
என ஏங்கும் மனதிற்கு
பெயர் தான் அன்பு.

எவ்வளவு தான் கதறி
அழுதாலும் அன்பால்
ஏமாற்றப்பட்ட வலிகள்
மட்டும் குறைவதே இல்லை.

நமக்கு பிடித்தவர்களுக்கு
உண்மையான அன்பை
கொடுப்பதில் நாம் வென்று
விட்டாலும். அதே
உண்மையான அன்பை
அவர்களிடம் எதிர்பார்க்கும்
போது தோற்று நிக்கிறோம்.

ஒரு உண்மையான
அன்பை எந்த காரணமும்
இல்லாமல் நிராகரிப்பதை
விட கொடிய வன்முறை
இந்த உலகில் இல்லை.

என் அன்பை மட்டும்
நீ சுமந்தால் போதும்
நான் உன்னை சுமப்பேன்
உன் தாய் போல.

ஒரு உண்மையான
அன்பை தவறவிட்டால்
பின்பு தேடினாலும் அதே
உண்மையான அன்பு
கிடைக்காது.

அளவுக்கு அதிகமான
அன்பை பிறரிடம் இருந்து
பெறவும் கூடாது கொடுக்கவும்
கூடாது இரண்டுமே
வலியைக் கொடுக்கும்.

வலியோடு இருந்து
பழகி விட்டேன் மீண்டும்
உன் அன்பால் ஆறுதல்
தந்து அனாதை
ஆக்கி விடாதே.

நான் உன் மீது
கொண்ட அன்பும்
நேசமும் நீ புரியாததால்
தான் இந்த பிரிவு.

இதயம் நமக்கு ரொம்ப
பிடித்தவர்களிடம் எந்த
அளவிற்கு சண்டை
போடுகின்றதோ அதே
அளவிற்கு அவர்களிடம்
அன்பையும் எதிர் பார்க்கும்.

காதல் என்ற சிறையில்
அன்பு என்ற விலங்கால்
கைது செய்யப்பட்ட நான்
விடுதலை கிடைக்காமல்
தவித்துக் கொண்டிருக்கிறேன்.

என்னை மீறி நேசித்தேன்,
என்னை மீறி அன்பு
செலுத்தினேன் இப்போது
என்னை மீறி
கலங்குகின்றேன்.

உன்னோடு சேர முடியாது
என நன்றாக தெரிந்தும்
மனமோ உன் மீது கொண்ட
அன்பும் காதலும்
தவிர்க்க முடியவில்லை.

சிலர் மீது கொண்ட
அன்பில் எத்தனை முறை
காயப்பட்டாலும் மனமோ
கேட்காது. அதுவே
எல்லை மீறிய அன்பு.

காதல் கவிதை வரிகள்