தமிழ் காதல் வரிகள்

தமிழ் காதல் வரிகள் காதலின் உணர்வை நம் மனதில் நினைவுகளாக மீட்டு தரும் இந்த தமிழ் காதல் வரிகள் இதயத்திற்கு காதலடுடன் நெருக்கமான உணர்வை ஏற்படுத்தும்.

காதலில் விழ வார்த்தைகளோ
செயல்களோ அவசியம்
இல்லை ஒரு சிறு கண்
அசைவு மட்டும் போதும்
காதல் வலையில்
விழுந்து விட.

நம் மனதிற்கு பிடித்தவரை
இறுக கட்டி அணைக்கும்
போது நம் மனதில் இருக்கும்
துன்பங்கள் எல்லாம்
காற்றோடு காற்றாக
பறந்து விடும்.

பறவை போல பறக்க
எனக்கு சிறகு இல்லை
என்றாலும் பருந்து
போல உயர பறந்து
கொண்டு தான்
இருக்கின்றேன் நீ
என் அருகில்
இருக்கும் போது.

இந்த என் வாழ்க்கையின்
ஆரம்பத்திலே நீ எனக்கு
கிடைத்து இருப்பாய்
என்றால் நான் பலரின்
போலி அன்பிற்காகவும்
துரோகத்திற்காகவும்
ஏமாறாமல் இருந்து
இருப்பேன்.

அன்பே உன்னை
நரகத்திற்கு அனுப்ப
வேண்டும் ஏன் தெரியுமா
நரகத்தையும் சொர்க்கமாக
மாற்ற உன்னால் மட்டும்
தான் முடியும்

என் இருள் நிறைந்த
அர்த்தமற்ற
வாழ்க்கையில் ஒளி ஏற்றி
அர்த்தம் கொடுத்த
தேவதை நீ.

தான் நேசித்த பெண்
தன்னை விட்டு பிரிந்த
பின்பும் அந்த பெண்ணை
பற்றி தவறாக ஒரு
வார்த்தை கூட பேசாதவன்
தான் உண்மையான ஆண்
என்ற சொல்லிற்கு அர்த்தம்
உடையவன்.

தன்னை அறியாமல்
துடித்துக் கொண்டு
இருக்கும் இதயத்திற்கு
தெரியவில்லை அது
துடிப்பதற்கான கரணம்
நீ மட்டும் தான் என்று.

மீன்களை சிக்க வைக்க
தான் தூண்டில் போடுவார்கள்
ஆனால் உன் விழி மீன்களில்
சிக்கி விட்டு வெளியே வர
முடியாமல் தவிக்கின்றேன்
நானடி.

வாழ்கை ஒரு முறை தான்
வருகின்றது அதில் உன்
நினைவுகள் மட்டும் பல
முறை நொடிக்கு நொடி
வருகிறது.

அவள் என்னை கண்டு
கொள்ளாமல் போனாலும்
திமிராக போகின்ற அழகை
என்னை அறியாமலே மெய்
மறந்து ரசிக்கிறது
என் இதயம்.

அன்பே கடலும் உன்
நினைப்பில் துடிக்கும்
அங்கே நீ காலடி எடுத்து
வைத்தால் என் நாடி
துடித்து கொண்டு
இருக்கிறது உன்
நினைப்பில்.

அடிமை போல அடைப்பட்டு
வெளிய வர முடியாமல்
இருக்கின்றேன் உன்
அன்பில் வெளியே வர
விரும்ப மறுக்கின்றது
என் மனது.

நரகம் கூட சொர்க்கமாக
தெரியும் அங்கும்
உன்னை போல உண்மையான
காதல் காற்று வீசும்
என்றால்.

சிறந்த சிந்தனை வரிகள்