வாழ்க்கை சிந்தனை துளிகள்

சிந்தனை துளிகள் என்பது வாழ்க்கையை நாம் மேம்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். சிறந்த வாழ்க்கை சிந்தனை துளிகள் மூலம் நம் எண்ணங்களை சிறப்பானதாக மாற்ற முடியும்.

நல்ல எண்ணங்களை வளர்க்க நல்ல எண்ணங்களை நம் மனதில் வளர்க்க வேண்டும். எப்போதும் நேர் மறையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும்.

வாழ்க்கையில் சிரமங்கள், தோல்விகள், கவலைகள் வரும் போது நாம் அதை தாண்டி செல்வதற்கான நேர்மறையான எண்ணங்கள் நம் மனதில் இருக்க வேண்டும்.

வாழ்க்கை சிந்தனை துளிகள்

வாழ்க்கையில் ஏற்படும்
சிரமங்களையும்
தோல்விகளையும்
எதிர்கொள்ள தயாராக
இருந்தால் எவராலும்
எதுவும் கற்க முடியும்.

வாழ்க்கையில் உழைத்து
சோர்வடைவதற்கு முன்பே
ஓய்வு எடுப்பதற்கு பெயர்
தான் சோம்பேறி தனம்.

நீங்கள் எப்போதும் நேற்று
நடந்ததை பற்றியே
நினைத்து கொண்டு
இருப்பீர்கள் என்றால்
உங்களுக்கு நாளை
சிறப்பாக அமையாது.

நேற்று நடந்ததில் இருந்து
கற்றுக்கொண்டு இன்று
நடப்பதை சிறப்பாக
மாற்ற வேண்டும்.

முதலில் நாம் எண்ணங்களை
உருவாக்கி கொள்ளுகின்றோம்
அந்த எண்ணங்கள் தான்
பின்னர் நம் வாழ்க்கையை
உருவாகின்றன.

தெரியாத விடயங்களை
பிறரிடம் கேட்பவன்
ஒரு நிமிடம் முட்டாள்
தெரியாத விடயத்தை
கேட்காமல் இருப்பவன்
வாழ்நாள் முட்டாள்.

ஒன்றை நீங்கள் அடைய
வேண்டும் என்றால்
முயற்சி செய்தால் தோல்வி
என தெரிந்திருந்தாலும்
அதை நம்பிக்கையுடன்
முயற்சி செய்ய வேண்டும்.

இந்த வாழ்கை ஒரு முறை
தான் அதை சரியாக
வாழ்ந்தால் வாழ்க்கை
ஒரு முறையே போதுமாக
இருக்கும்.

எந்த கடினமான
சூழ்நிலையிலும்
தகுதியும் திறமையும்
கொண்டவர்கள் தப்பி
பிழைப்பார்கள்.

இந்த உலகத்தில் சாதிக்க
வேண்டும் என்றால்
மிகையான போராடும்
குணம் இருக்க வேண்டும்.

நீங்கள் தற்போது பார்க்கும்
வெற்றிகரமான மனிதர்களுக்கு
பின்னால் அவர்கள் எடுத்த
துணிவான முடிவு இருக்கும்.

தகுதியையும் திறமைகளையும்
விட விடா முயற்சியே
வெற்றிக்கான திறவு கோல்.
அது அனைத்தையும் வெல்லும்
சக்தி கொண்டது.

நீங்கள் செய்யும் முயற்சி
உங்களையே பதற்றமடைய
செய்யுமானால் அது முடிவில்
சிறந்த பலனை தரும்.

உங்கள் எண்ணங்களை
சிறப்பானதாக மாற்றுவதன்
மூலம் வாழ்க்கையை
சிறப்பானதாக மாற்ற முடியும்.

சிறந்த சிந்தனை வரிகள்