தமிழ் காதல் கவிதை வரிகள்

தமிழ் காதல் கவிதை வரிகள் பற்றிய தொகுப்பை இந்த பதிவில் காணலாம். இவை காதலை கவிதையாக வெளிப்பதும்.

தமிழ் காதல் கவிதை வரிகள்

உன்னோடு இந்த வாழ்க்கையில்
சேர்ந்து வாழ முடியாது என்று
தெரிந்திருந்தும் கூட உன்னை
காதலிப்பதை என் மனம்
நிறுத்தவில்லை.

மழை இடை விட்டு தான்
பொழியும் ஆனால்
இடைவிடாமல் பெய்யும்
உன் காதல் மழையில்
நனைந்து கொண்டு
இருக்கிறேன்.

வாழ்கை சுமையாக இருக்கும்
நேரங்களில் உண்மையான
அன்பு கொண்டவர்களை
மனதில் நினைத்துக்
கொண்டால் சுமை கூட
சுகமாக மாறி விடும்.

அன்பு ரொம்ப அழகானது
என்பதை காதலில் தான்
பார்த்தேன் அது எவ்வளவு
வலியை தரும்
என்பதையும் காதலில்
தான் அறிந்தேன்.

நீ கோவமாக பேசினாலும்
சரி வெறுப்பாக பேசினாலும்
சரி நான் உன் மேல்
வைத்திருக்கும் காதல்
மட்டும் குறையாது.

எப்பவும் உண்மையான அன்பு
அருகில் இருக்கும் போது
அதன் தேவையும் அர்த்தமும்
புரிவதில்லை அது அருகில்
இல்லாத போது தான்
புரியும்.

உண்மையான அன்பிற்காக
எதை வேண்டுமானாலும்
தொலைக்கலாம்
எதற்காகவும்
உண்மையான அன்பு
காட்டும் இதயத்தை
தொலைக்க கூடாது.

ஒருவரை நேசித்தாலோ
ஒருவர் மீது அன்பு
செலுத்தினாலோ
உண்மையாக
செய்யுங்கள் அது
பொய் என்றால்
அதன் வலி
கொடுமையாக
இருக்கும்.

காதல் என்றால் அன்பு,
அழுகை, அரவணைப்பு,
துக்கம், தவிப்பு,
ஏமாற்றம், கவலை
சந்தோசம் என பல
விடயங்கள்
கலந்து இருக்கும்.

வேப்பம் மரத்தின் இலை
கூட இனிப்பாக
தித்திக்கும்
உன் மடியில்
தலை வைத்து
தூங்கும் போது.

உன்னுடன் வாழ்வதற்கு
பிறந்தவன் நான் இல்லை
நான். இந்த வாழ்க்கையை
உனக்காக வாழ
பிறந்தவன் நான்.

எனக்குள் ஆயிரம் ஆசைகள்.
அதை உன்னுடன்
வாழ்வதற்கு இந்த
பிறப்பு போதாது
சாகா வரம் கேட்கிறேன்
இறைவனிடம் உன்னுடன்
மட்டும் வாழ்வதற்கு.

தமிழ் காதல் வரிகள்