அண்ணன் கவிதைகள் வரிகள்

Annan Quotes in Tamil

இந்த தொகுப்பு “அண்ணன் கவிதைகள் வரிகள் (Annan Quotes in Tamil)” உள்ளடக்கியுள்ளது.

  • அண்ணன் கவிதைகள்
  • அண்ணன் கவிதை
  • அண்ணா கவிதை
  • அண்ணா கவிதைகள்
  • Annan Quotes in Tamil

அண்ணன் கவிதைகள் வரிகள் (Annan Quotes in Tamil)

அம்மாவின் அன்பையும்
அப்பாவின் பாதுகாப்பையும்
ஒரே இடத்தில் பெற
முடியுமானால் அது
அண்ணனிடம் மட்டுமே..!

அண்ணனுடன் பிறந்த
தங்கைகளுக்கு
மட்டும் தான் தெரியும்
அண்ணனுக்கு இன்னொரு
பெயர் “அப்பா” என்று..!

அண்ணனை பெற்ற
தம்பி தங்கைகளுக்கு
மட்டுமே தெரியும்..
தனக்கு ஒரு பிரச்சனை
என்ற பொழுதே தன் மீதான
அவன் அன்பு
வெளிப்படுத்தப்படும் என்று..!

பெண்களின் மனம் ஆழமாம்..
அண்ணனின் மனதை
அளந்து பார்க்காதவர்கள்
சொல்லிக் கொள்ளுகிறார்கள்..!

அண்ணன் என்பவன் கடவுளால்
கொடுக்கப்பட்ட
அற்புதமான வரம்..
அந்த வரத்தை பெற்றவர்களுக்கு
அப்பாசத்தின் விலைமதிப்பு
தெரியாது.. அந்த வரம்
கிடைக்காமல் அந்த
பாசத்திற்காக ஏங்குபர்களுக்கு
மட்டும் தான் தெரியும்
அப்பாசத்திற்கு விலை மதிப்பே
இல்லை என்று..!

எப்போது சண்டை போட்டாலும்
என் பொய்யான அழுகையில்
அனைத்தையும் விட்டுத் தரும்
நல்ல உறவு என் அண்ணன்..!

நதி போல ஓடிக் கொண்டே
இருந்தால் மட்டுமே வாழ்க்கை
போரை வென்றிட இயலும்
என்று செயலில் காட்டியவன்
என் அண்ணன்..!

என் வாழ்வினை உன் கனவென
நெஞ்சில் சுமந்தவன் நீயடா..
என் அண்ணா..!

போகின்ற வழி எங்கிலும்
உடன் நின்று நிழலென
தொடர்பவன் நீயடா..!

எத்தனை பந்தங்கள் என்னை
விலகிச் சென்றாலும்
நீயொருவன் போதும்
என் அண்ணா..!

கர்வத்தோடு உலகிற்கு
சொல்ல விரும்புகின்றேன்.. 
உடல் வலிமையோடு
பெண்ணை பேனிக் காப்பவனே
சிறந்த ஆண் மகன்..
அவனே சிறந்த அண்ணன்..
அப்படிப்பட்டவனுக்கே
நான் தங்கையாக
பிறந்திருக்கின்றேன் என்று..!

ஆயிரம் தான் அவனிடம்
சண்டை போட்டாலும்
பேசாமல் இருப்பதில்லை..
இருக்கவும் முடியாது என்
அன்பு அண்ணனுடன்..!

மனம் விட்டு பேச ஒரு நல்ல
அண்ணன் கிடைத்தால்
போதும் அதும் தாயின் மடி தான்..
எனக்கு கிடைத்த தாயின் மடி
நீதான் அண்ணா..!

தோழமையோடு
தோழ் கொடுத்தான்
நான் துவண்டெழும் பொழுது…
வல்லமையோடு வலிமை
கொடுத்தான் நான் வீழ்ந்தெழும்
பொழுது… பரிவோடு பாசம்
கொடுத்தான் தனிமையில்
நான் தவிக்கும் பொழுது..
அன்போடு அரவனைத்தான்
என் மனம் உருகும் பொழுது..
நண்பனாக நன்னெறிகள் தந்தான்
நான் பாதை தவறிய பொழுது..
தந்தையாக அறிவுரை தந்தான்
தவறுகளை நான் செய்த பொழுது..
அன்னையாக ஆறுதல் தந்தான்
கண்ணீரில் நான் கலங்கிய பொழுது..
சண்டைகள் பல வந்தாலும்
அன்பின் ஆழம் குறைவதில்லை..
பந்தங்கள் பல இருந்தாலும்
என் அண்ணன் தான் என்றுமே
எனக்கு முதல் பந்தம்..!

எத்தனை பிறவிகள்
இருந்தாலும் நீயே எனக்கு
அண்ணனாக வர வரம்
தருவாயா..?

இது போன்ற பதிவுகளை மேலும் படிக்க..