Love Quotes in Tamil

Latest best collections of love quotes in Tamil. when you love truly someone, you can’t express your emotions through words.

but these quotes help to express emotions of love through quotes.

Love Quotes in Tamil

உன்னோடு வாழ்வதற்கும்
உன் நினைவோடு
வாழ்வதற்கும் சிறு
வேறுபாடு தான்
உன்னோடு வாழ்ந்தால்
அது எனக்கு
கிடைத்த வரம்..!
உன் நினைவோடு
வாழ்ந்தால் அது என்
வாழ் நாள் தவம்.. !

நான் உயிரோடு இருப்பது
அனைவருக்கும் தெரியும்
ஆனால் என் உயிர்
உன்னிடம் தான்
இருக்கின்றது என்பது
எனக்கும் உனக்கும்
மட்டும் தான்
தெரியும்..!

பார்த்த முகங்கள்
கண்ணை விட்டு
பிரிந்தாலும் உண்மையாக
நேசித்த இதயம் நெஞ்சை
விட்டு ஒரு போதும்
பிரிவதில்லை.

காத்திருப்பது கூட
சுகம் தான் அந்த
காத்திருப்பு உனக்காக
எனும் போது.

காதல் தொலைந்தாலும்
நினைவுகள் தொலைவதில்லை.
கனவுகள் கலைந்தாலும்
காட்சிகள் கண்ணில்
இருந்து மறைவதில்லை.

கவிதை எழுத வார்த்தைகள்
தேவை இல்லை. காதலை
நேசிக்க தெரிந்திருந்தால்
போதும்.

முடிவே இல்லாத இந்த
வாழ்க்கையில் பயணம்
செய்கிறேன். முடிவில்
நீ இருப்பாய் என்ற
நம்பிக்கையில்..!

பெண்ணின் தவறுகளை
மன்னித்து.. அதை
திருத்தி அன்பு கொடுக்கும்
ஆண்மகனே அன்பானவன்..!

நம்மள நேசிக்கிறவங்கள
இறுக கட்டி அணைக்கும்
போது நமக்கு இருக்கும்
கோபங்கள் எல்லாம்
தோற்று போய்விடும்.

நீ என்னோடு பேசும்
நேரங்கள் குறைந்து
போனாலும், நான்
உன்னை மனதில்
நினைக்காத நேரங்களே
இல்லை..!

தொட நினைக்காமல்
தொட்டு பேசுவது நட்பு..!
தொட நினைத்தும்
தொடாமல் பேசுவது
காதலிக்கு கொடுக்கும்
மரியாதை..!

நான் பிறந்ததுக்கு
உரிய அர்த்தத்தை
உணர்ந்து விட்டேன்.
உன்னை பார்த்த பிறகு..!

நான் உனக்கு எப்படியோ
தெரியல ஆனால் நீ
எனக்கு எப்பவுமே
என் உயிர் தான்…!

இறக்கும் போது என்
கடைசி ஆசை நான்
இறக்கும் நிலை
வந்தாலும் உன்னை
மறக்கும் நிலை
எனக்கு வரக் கூடாது..!

காற்று என் மீது கோபப்பட்டது
காரணம் என்ன தெரியுமா ..?
காற்று சொன்னது சுவாசிப்பது
என்னை நேசிப்பது உன்
காதலையா என்று..

நான் அதிகமாக தூங்க
காரணமே நீ தான்
ஏனென்றால் என்
கனவில் நீ வருவதால்..

முதல் காதலை அடைய
நினைக்கும் போது நமக்கு
எந்த தகுதிகளும் இருப்பதில்லை.
ஆனால் எல்லா தகுதிகளும்
கிடைக்கும் போது முதல்
காதல் இருப்பதில்லை..!

இடை விடாமல் பொழியும்
உன் காதல் மழையில்
இடைவிடாமல் நனைந்து
கொண்டிருக்கிறது
என் இதயம்.

வாழ்க்கை சுமையாக
இருக்கும் போது உன்
நினைவுகளை நினைந்து
கொண்டால் மட்டுமே
போதும் சுமைகள் கூட
சுகமாக மாறிவிடும்.

அன்பே..! உன்னை
காணத் துடிக்கும் என்
கண்களும், உன்னை
நினைக்க துடிக்கும் என்
இதயமும், எப்போதும்
உனக்காக காத்திருக்கும்
என்பதை மறந்து விடாதே..!

உனக்காக எதை
வேணுமானாலும்
விட்டுக் கொடுப்பேன்.
ஆனால் எதற்காகவும்
உன்னை விட்டுக்
கொடுக்க மாட்டேன்.

Other Love Quotes in Tamil