Friendship Kavithaigal in Tamil

நட்பு பற்றிய கவிதை வரிகள் (Friendship Kavithaigal in Tamil) பற்றிய கவிதை தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம். நம் வாழ்வை மன நிறைவுடன் வாழ தேவையான உறவு தான் இந்த நட்பு.

எந்த சந்தர்ப்பத்திலும் உண்மையான ஒரு நல்ல நட்பு நம்மை கைவிடாது. நட்பின் பெருமையை யாரும் பேசாமல் இருக்க மாட்டார்கள்.

நட்பு பற்றிய கவிதை வரிகள் – Friendship Kavithaigal in Tamil

நீ மேலே உயரும் போது
நீ யார் என்று உன்
நண்பர்கள் அறிவார்கள்.
ஆனால் நீ கீழே விழும்
போது தான் உன்
உண்மையான நண்பர்கள்
யார் என்பதை நீ அறிவாய்.

உறவுகளில் தூரத்து
சொந்தம் போல நட்பில்
தூரத்து நட்பு இல்லை.
காரணம் நட்பு எனும்
உறவுக்குள் வந்த பின்
யாரும் தூரமில்லை.

கணவனுக்கு சிறந்த
தோழியாக மனைவியும்
மனைவிக்கு சிறந்த
தோழனாக கணவனும்
இருக்கும் போது வாழ்க்கை
சிறப்பானதாக அமையும்.

தவறுகள் செய்யும் போது
தட்டிக் கேட்கும் நட்பு தான்
உண்மையான நட்பின்
அடையாளம்.

உண்மையான நட்பை
பெறுவது என்பது
கடினமான விடயம் தான்
ஏனென்றால் வரையறை
அற்ற அன்பை கொண்டது
தான் உண்மையான நட்பு.

அருகில் இருக்கும் போது
நட்பின் அருமை சிலருக்கு
புரிவதில்லை. நட்பை
பிரிந்து இருக்கும் போது
தான் அதன் ஆழம் புரியும்.

கனவில் காண்பது அல்ல
நட்பு. மனதில் வைத்து
மரணம் வரை நேசிப்பது
தான் நட்பு. உண்மையான
நட்பு உயிர் உள்ள வரை
உன் கூடவே வரும்.

உறவுகள் உன் முகத்தில்
தெரியும் அழுகையை
கண்டு ஆறுதல் சொல்லும்.
நட்பு உன் அழுகைக்கு பின்
இருக்கும் காரணத்தை
கண்டறிந்து சரி செய்யும்.

உண்மையான உறவுகள்
கடவுள் தந்த வரம் என்று
சொல்லுவார்கள். ஆனால்
உண்மையான நட்பு
கடவுளுக்கு கூட
கிடைக்காத வரம்.

உன் நண்பனை உனக்கு
பிடிக்கவில்லை என்றால்
எதிரியாக கூட மாறி விடு.
ஆனால் துரோகியாக
மாற நினைத்து கூட
பார்த்து விடாதே.