அழகான நட்பு கவிதைகள்

Natpu Kavithaigal Tamil – அழகான நட்பு கவிதைகள் தொகுப்பை இந்த பதிவில் நீங்கள் காணலாம். பலரும் விரும்பும் ஒரு உறவு தான் நட்பு.

நல்ல நண்பர்கள் கிடைத்தவர்கள் எல்லாம் வாழ்வின் அதிஷ்டசாலிகள் என்று சொல்லுவார்கள். நல்ல நண்பர்கள் நம் குடும்பத்தில் ஒருவர்.

Natpu Kavithaigal Tamil – அழகான நட்பு கவிதைகள்

ஒவ்வொருவருக்கும்
கடவுள் துணை இருக்கின்றார்.
அந்த கடவுளின்
வடிவம் தான் நட்பு.

உன் நண்பன் உன்னுடன்
இருந்தால் இந்த உலகம்
உன் காலின் கீழ் இருக்கும்.

நல்ல நட்பிடம் எவ்வளவு
வேண்டுமானாலும்
கோபத்தை காட்டி
சண்டை போடலாம்.
ஆனால் ஒரு நிமிடம்
கூட சந்தேகம் எனும்
கொடிய விஷத்தை
உள்ளே விட கூடாது.

நீ தடுமாறி கீழே விழும்
போது தாங்கி பிடிப்பவனும்
தடம் மாறும் போது தட்டிக்
கேட்பவனும் தான்
உண்மையான நட்பு..

எந்த உறவை மறந்தாலும்
நல்ல நட்பை யாரும்
வாழ்நாளில் மறப்பதில்லை.

நட்பு என்பது வெறும்
வார்த்தை அல்ல அது
நம் உணர்வோடும்
உயிரோடும் கலக்கும்
அழிக்க முடியாத
பொக்கிஷம் அது.

வாழக்கையை புரட்டி
பார் நீ நண்பர்களுடன்
இருந்த தருணம் தான்
நீ உன் வாழ்க்கையில்
சந்தோசமாக இருந்த
தருணமாக இருக்கும்.

நட்பில் உண்மையான
நம்பிக்கைக்கு உரிய
நண்பனாக இரு அல்லது
எதிரியாக கூட இருந்து விடு
ஆனால் ஒரு போதும்
துரோகியாக மட்டும்
இருந்து விடாதே.

நண்பன் வெற்றி பெற்றால்
அவன் என் நண்பன் என்று
பெருமை கொள். நண்பன்
தோல்வி அடைந்தால் நான்
உன் நண்பன் என்று அவன்
அருகில் நிற்க மறந்து விடாதே.

நம் வாழ்வு திசை மாறும்
என தெரிந்தும் சில நட்புடன்
பயணிக்க மனம் விரும்பும்.

நட்பை தேவைக்காக
நேசிப்பதை விடுத்து
உண்மையாக நேசித்து
பார் நீ உயிர் வாழும் வரை
அந்த நட்பு உன்னை விடாது.

நட்பு என்றால் உன் மனதில்
வைக்க வேண்டிய வரிகள்
பழகும் போது உண்மையாய்
இருக்க வேண்டும். பழகிய
பின்பு உயிராய்
இருக்க வேண்டும்.

Quotes About Friendship in Tamil