நட்பு கவிதை வரிகள் தமிழ்

Tamil Kavithaigal Natpu – நட்பு கவிதை வரிகள் தமிழ் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம். நட்பு கவிதைகள் பலராலும் விரும்பப்படும் கவிதை.

காரணம் நட்பை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு உண்மையான நட்பு ஆயிரம் உறவுகளுக்கு மேலானது.

Tamil Kavithaigal Natpu – நட்பு கவிதை வரிகள் தமிழ்

சொந்தங்கள் என்பது
பனி துளி போன்றது
சிறு பொழுதில் மறைந்து
விடும். நட்பு என்பது
பரந்த வானம் போன்றது
உன்னை சுற்றி எப்போதும்
நிலைத்து நிக்கும்.

வலிகள் கூட
நொடிப்பொழுதில்
மறைந்து விடும்.
உன்னை சுற்றி நல்ல
நண்பர்கள் இருப்பார்கள்
என்றால்.

ஆயிரம் விண்மீன்கள்
ஆகாயத்தில் பிரகாசித்தாலும்
இரவுக்கு அழகு நிலவும் தான்.
அதே போலத்தான் ஆயிரம்
உறவுகள் மண்ணில்
இருந்தாலும் வாழ்க்கைக்கு
அழகு உண்மையான
நட்பு தான்.

நட்பு மற்ற உறவுகளை
விட மிகவும்
வித்தியாசமானது
இறக்கும் வரை பிரிக்க
முடியாதது தான் நட்பு.

நட்பின் துரோகம் மிகக்
கொடூரமானது எக்காரணம்
கொண்டும் அதை செய்து
விடாதீர்கள் அதற்கு
வாழ்நாளில் பாவ
மன்னிப்பே கிடைக்காது.

நீ சண்டை போட்டு பிரிந்த
பிறகும் உன்னை பற்றிய
ரகசியங்களை வெளியே
சொல்லாவிட்டால் நீ
பிரிந்திருப்பது மிகச்
சிறந்த நட்பை அந்த
நட்பை எந்த காரணம்
கொண்டும் உதாசீனம்
செய்யாதே.

நண்பர்கள் என்ற
செல்வம் உன்னை
தேடி வர புன்னகை
என்ற ஒரு கருவி மட்டும்
உன்னிடம் இருந்தால்
போதும்.

நீ நண்பர்களிடம்
மரியாதையை
எதிர்பார்த்தால்
அவர்களிடம் நெருங்கி
பழக்க முடியாது.
நண்பர்களிடம் நெருங்கி
பழகும் போது
மரியாதையை
எதிர்பார்க்க கூடாது.

நீ செய்த தவறை
சரி என நியாயப்படுத்தும்
நட்பை விட நீ செய்தது
தவறு தான் என்று
சுட்டிக்காட்டும் நட்பே
சிறந்த நட்பு.

நட்பிடம் போடும் ஆயிரம்
சண்டைகள் வலியை
ஏற்படுத்தாது. ஆனால்
ஒரு நல்ல நட்பின் மவுனம்
இதயத்தையே
உடைத்து விடும்.

வாழ்க்கை சிந்தனை துளிகள்