அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை

Piranthanal Valthukkal Amma

இந்த பதிவில் “அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்” காணலாம்.

  • அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை
  • அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்
  • இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா
  • Piranthanal Valthukkal Amma

அம்மா பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள்

1.ஆறாத துன்பம் எனக்கிருந்தாலும் அம்மா
உன் முந்தானையில் என் கண்ணீர்
துடைக்கும் போது..
காற்றாய் பறந்து போகுமே
எந்தன் துன்பமெல்லாம்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

2. அலங்காரம் பண்ணி உன்னை
பார்க்காவிட்டாலும்..
என் ஆயுள் முழுவதும் உன்னை
என் நெஞ்சில் சுமப்பேன் அம்மா.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

3. இனி உன்னை போல் ஒரு உறவு
எனக்கு கிடைக்குமா என்று
தெரியவில்லையே அம்மா.!
அப்படியே கிடைத்தாலும்
உன்னை மட்டும் எப்போதுமே
மறக்க மாட்டேன் அம்மா.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

4. எத்தனை ஜென்மம் எடுத்தாலும்
எப்போதும் நீதானே எனக்கு
அம்மா.. அம்மா.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

5. இதயம் அற்ற உயிராய்
உன் கருவறையில் துடித்து கொண்டிருந்தேன்..
உன்னிடம் இதயம் எங்கே என கேட்போரிடம்..
கருவறையில் வளர்ந்து கொண்டிருக்கிறது
என சொல்லி மகிழ்ந்தாய்.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

6. மூச்சடக்கி பிரசவித்தாய் என்னை
மூச்சுள்ளவரை உன்னை மறக்க மாட்டேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

7. கருவறையில் சுமந்த என்னை
கருவிழியில் வைத்து காத்தாய்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

8. எண்ணற்ற ஏக்கங்கள் என்னுள்
அருவியாய் ஓடும் போதெல்லாம்..
அன்பென்ற அணை கட்டி என்னுள்
இன்பம் பொங்க செய்தாய்..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

9. கருவறையில் இருந்த உணர்வை
உன் மடியில் உணர்கிறேன்..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

10. அம்மா என்ற வார்த்தைக்குள் ஆயிரம்
உறவுகளை அடக்கிக் கொண்டாய்.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

Piranthanal Valthukkal Amma

11. உன் மடி சாய்ந்து உறங்கும் போது..
என் கவலை எல்லாம் மறந்து போகும்..
என் சோகம் எல்லாம் சுகமாய் மாறும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

12. நிலா காட்டி நீ சோறூட்டும் போது
தெரியவில்லை..
என்னையே சுற்றி வந்த நிலா
நீ தான் என்று.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

13. கருவில் சுமந்த உன்னை மனதில்
சுமந்து கொண்டிருக்கிறேன்..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

14. மீண்டும் நீயே என்னை கருவில் சுமக்க
மனதார வேண்டுகிறேன்..!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

15. என்ன தவம் செய்தேன் உனக்கு
மகனாய் பிறக்க..
என்ன வரம் பெற்றேன் நீ என்
தாயாய் வந்திட..
அடுத்த பிறவியிலும் இதே வரம்
பெற்றிட வேண்டுகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

16. இருள் சூழ்ந்த போதும் என்னுள்
பயம் ஏதும் இல்லை..
விழி திறக்கா விடினும் மனதில்
வலி ஏதும் இல்லை..
கண்ணே என அழைக்கையில்
கண் திறந்து பார்த்தேன்
கடவுளின் முகத்தை..
என் தாயின் முகத்தை.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

17. விழிகளில் கண்ணீரும் மனதில்
மகிழ்ச்சியும் கொண்டவளாய்
என்னை தொட்டு தூக்கினாள்.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

18. நான் அழுத போது என்னை
சிரிக்க வைத்த முகம்..
என்றுமே என்னை வெறுக்காத குணம்..
தவறுகளை மன்னிக்கும் மனம்..
அளவே இல்லாத பாசம்..
மற்றவர்கள் காட்டிடாத நேசம்..
அனைத்தையும் உன்னிடம்
கண்டேன் அம்மா.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

19. தோட்டத்தில் அழகு பூக்கள்..
என் வெற்றிக்கு அழகு அம்மா.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

20. நான் சொல்லிய முதல் சொல் அம்மா..
நான் கடைசியாக சொல்ல
விரும்பும் சொல்லும் அம்மாவே.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

21. எனக்கு உயிர் தந்த உன்னை..
என் உயிர் உள்ளவரை மறவேன்.!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.!

மேலும் பதிவுகளை படியுங்கள்..

அம்மா கவிதை வரிகள்