தோழி கவிதைகள் வரிகள்

Thozhi Kavithai In Tamil

நட்பு எனும் உறவு புனிதமானது அதில் ஆண் பெண் வேறுபாடுகள் கிடையாது. இந்த பதிவில் “தோழி கவிதைகள் வரிகள்” காணலாம்.

  • தோழி கவிதைகள் வரிகள்
  • தோழி கவிதைகள்
  • Thozhi Kavithai In Tamil

தோழி கவிதை வரிகள்

யாரோ அவளோ தெரியவில்லை..
அன்பை தந்தால் தேவதையாய்
சிரிக்க வைக்கும் அவள் மனதை
வெறுக்க வைத்தேன் வார்த்தைகளால்..
விலகி செல்வேன் பலநேரம்
தேடி வந்தாள் தோழியாக..
இவளை பிரிந்த ஒரு நிமிடம்
பிரிந்து விட்டது என் இதயம்.

நட்புக்கு ஏது ஆண்பால் பெண்பால்
நாம் எப்போதும் நண்பர்கள் தான்.

அவள் வாழும் வாழ்க்கை வேறு
நான் வாழும் வாழ்க்கை வேறு..
காலங்கள் மாறிவிட்டது சூழ்நிலைகள்
பதில் சொல்லிவிட்டது..
ஆனாலும் இறக்கும் வரை
அவள் என் தோழி என்பதை
இருக்கும் வரை
உரைக்காமல் என்னால்
ஒரு நொடியும் இருக்க முடியாது..
என்றும் அவள் தான்
என் உயிர் தோழி.!

அன்பிற்காக ஏங்கிய தருணம்
அழகாய் வந்து முன் நின்றாள்..
தோழியென என் கரம் கோர்த்து
தோல்விகளை தூரம் துரத்தினால்..
காதலுக்கும் நட்புக்கும் உள்ள
வேறுபாட்டை உணர்த்தினாள்..
தாயாகவும் தந்தையாகவும் இருந்து
தலைசிறந்த மனிதனாய் மாற்றினாள்..
அப்போது உணர்ந்தேன் தெய்வம்
அவள் வடிவிலே அருகில் இருப்பதை.!

தோழி நீ இருந்தால் போதும்
என்று கூற ஒரு தோழி
இருந்தால் போதும் நம்முள்
ஒரு புது நம்பிக்கை தோன்றி விடும்..
எதையும் எதிர்பார்க்காதவளாய்
தோழியாய் தோழனாய்
தந்தையாய் தாயாய்
நம்மை கடைசிவரை பார்க்கும்
கண்கள் அவளுடையது..
தோழி நீ மட்டும் போதும்
என் வாழ்வில்
நான் வெற்றியை காண..!

தமிழ் பேச தெரிந்த நாள் முதலாய்,
தாய்ப்பாலை நான் மறந்த
நாள் முதலாய்.. என்னோடு
நடைபோட்டு என்னோடு
கைகோர்த்து சென்ற நாள்
முதலாய்..
பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்ட
மற்றொரு தாயவள் என் தோழி..!

Thozhi Kavithai In Tamil

ஒன்றாக பள்ளி சென்றோம்
ஒரே தட்டில் பல கைகள் வைத்து
உணவு உண்டோம்..
அம்மா அப்பா வைத்த
பெயர்களை மாற்றி ஆளுக்கொரு
அடைமொழி பெயர் வைத்து
அதிகாரத்துடன் அழைத்திடுவோம்..
அடித்து விட்ட ஆசிரியரை
ஆசை தீர திட்டித் தீர்த்து மனதுக்குள்ளே
மகிழ்ந்து கொள்வோம்..
வழுக்கி விழுந்த வாய்க்காலும்
இன்று வகை வகையாய்
நம் கதைகள் சொல்லும்..
அழகான ஆனந்தத்தின்
அசைக்க முடியாத
நினைவுகள் இவை.!

பழக இனியவள் என்றும்
அழகுப் பெண் அவள்..
வார்த்தைகளில் அவள் வசந்தம்
வாழும் வரை அவள் என் சொந்தம்.
என் இதயத்தில் என்றும்
நிறைந்திருப்பால்
என் அன்பு தோழியாக.!

இனிய என் உயிர் தோழி
கற்புதானடி நம் நட்பின் வேலி..
தொப்புள் கொடி சொந்தமில்லை..
சிறுவயதில் தொடர்ந்த பந்தம் இல்லை..
மழைகால வானவில் போல
ஒரு நேரத்தில் வந்தாய்..
மனம் மகிழும் பாசம்
அதை தூரத்தில் இருந்து தந்தாய்..
பனித்துளி கரைந்து விடும்
சூரிய உதயத்தில்..
பாசமுள்ள தோழி நீ இருப்பாயடி
என் இதயத்தில்.!

பாசம் காட்டி இதயத்தின்
பக்கத்தில் அமர்ந்தவளே..
நேசம் கொடுத்து
அன்பு நெஞ்சில் நிறைந்தவளே..
என் இதய உறவே..
அன்பு நீடிக்கும் வரை
நமக்குள் இல்லை பிரிவுகள்
என்றும் வராது
நம் உறவில் முறிவுகள்.!

வாழ்வில் வந்த சொந்தங்களில்
புதுமையாய் வந்த பந்தம் அவள்
இரத்த உறவென்று சொல்ல
என் உடன் பிறப்பும் இல்லை அவள்..
முகம் பார்த்து பழகும் காலம்தனில்
அகம் பார்த்து பழகும்
புதுமையானவள் என் தோழி.!

உங்கள் உயிர் தோழியுடன் இந்த பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Read More Tamil Quotes.

நட்பு பொன்மொழிகள் – Tamil Thoughts

Friendship Kavithaigal in Tamil

Quotes About Friendship In Tamil