தமிழ் வெற்றி தத்துவங்கள்

Vetri Thathuvangal

இந்த பதிவில் “தமிழ் வெற்றி தத்துவங்கள்” காணலாம்.

தமிழ் வெற்றி தத்துவங்கள்

நீ எதை சொல்கிறாய்
என்பதை விட யாரிடம்
சொல்கிறாய் என்பதே
முக்கியம்.. மிகவும்
கவனமாக இருங்கள்.

காத்திரு.. நடக்க இருப்பது
மிக சரியான நேரத்தில்
சரியான இடத்தில்
சரியான காரணத்துடன்
நடக்கும்.

மற்றவர்கள் நம்மை
கவனிக்கிறார்கள் என்ற
எண்ணம் எழாதவரை
நாம் நாமாகத்தான்
இருக்கிறோம்.

நீ உனக்கு உண்மையாக
இல்லாதவரை பல வலிகள்
உன்னை துரத்திக்கொண்டே
இருக்கும்.

நாம் எல்லா நேரத்திலும்
ஒரே மாதிரி இருப்பதில்லை
என்பதை விட..
இருக்க விடுவதில்லை
என்பதே உண்மை.

தவறான பதிலை விட
மௌனம் மிகச்சிறந்தது..
எதிரியை அடக்குவதை விட
உன் நாக்கினை அடக்குவதே
மிகச்சிறந்தது.

வாழ்க்கையில் சந்தோஷம்
என்பது யாருக்கும் தானாக
அமைவதில்லை.. நாம் தான்
அமைத்துக்கொள்ள வேண்டும்.

உலகில் அனைத்து
பிராத்தனைகளுக்கும்
பின்னால் சில ஆசைகள்
ஒளிந்திருக்கின்றன.

நம் ரசனையுடன் ஒத்து வரும்
ஒருவர் கூட நம்மை சுற்றி
இல்லாமல் இருப்பதும்
ஒருவகை தனிமையே.

யோசித்து பேசுங்கள்..
உயிர் வாழ்வது உயிர்கள்
மட்டுமல்ல
வார்த்தைகளும் தான்
வார்த்தைகளுக்கும்
உயிர் உண்டு.

நம்மில் பலரும் ஏங்கும்
வாழ்க்கை.. கண்ணை
மூடினால் தூக்கம்
வருகின்ற மாதிரி
ஒரு நிம்மதியான வாழ்க்கை
வாழ்ந்திட வேண்டும்.

துரோகிகள் மீது
நம்பிக்கை வைத்ததற்காக
வருத்தப்படாதே..நீ வைத்த
நம்பிக்கை தான் துரோகிகளை
உனக்கு காட்டிக் கொடுத்தது.

பழகிய பின் ஒருவர்
அழகாக தெரிகின்றார்
என்றால்.. அந்த அழகு
அவர்களின் குணத்தின்
வெளிப்பாடு.

வாழ்க்கையில் அதிகம்
பேசவும் கூடாது
அதே நேரத்தில்..
அமைதியாய்
இருக்கவும் கூடாது..
இரண்டுமே
வாழ்க்கையில் ஆபத்தானதே.!

எத்தனை பேர் என்ன
சொன்னாலும் நமக்கு
பிடித்தது போல் வாழ்வதில்
இருக்கிறது நமக்கான
அடையாளம்.

உனக்கான சந்தோஷத்தை
அடுத்தவர்களிடம் தேடாதே..
அது உனக்கு தனிமையை
மட்டுமே தரும்..
உன் சந்தோஷத்தை
உன்னுள் தேடு
சந்தோஷமாய் இருப்பாய்.!

கேட்க மட்டும் தெரிந்த
காதுகளும்.. பதில் பேசாத
வாயும் எப்போதும்
எல்லோருக்கும்
தேவைப்படுகின்றது.

சிலரின் மௌனங்கள்
சிலருக்கு கேள்வியாகின்றன..
சிலரது கேள்விகளுக்கு
சிலரது மௌனங்கள்
பதிலாகின்றன.

வாழ்க்கையை நிம்மதியாக
வாழ விரும்பினால்..
முதலில் அனைத்தையும்
இழக்க தயாராகுங்கள்.

காயங்களின்றி காலம்
எதையும் வாழ்க்கையில்
கற்றுக் கொடுப்பதில்லை.

சிலரை வாழ்க்கையில்
பிடிக்காது என்றாலும்
வெறுக்க முடியாது..
சிலரை மிகவும் பிடிக்கும்
ஆனாலும் அருகில்
இருந்திட முடியாது புரிதல்
ஒன்றே அன்பை உணர்த்தும்.

பேசிக்கொண்டே இருந்தால்
நமது பலவீனமும்..
மௌனமாக இருந்தால்
மற்றவர்கள் பலவீனமும்
நமக்கு தெரியும்.

கடந்து போனதை நினைத்து
கவலை வேண்டாம்..
கவலை வேண்டாம்
என்பதற்காக தான்
அது கடந்து போனது.

எதையும் தேடிப்போகாதே..
உனக்கு தகுதி இருந்தால்
அது உன்னை தேடி வரும்.

உன் எல்லை எதுவென்று
உன் மனதிற்கு
தெரியும் போது
அடுத்தவர்களின்
விமர்சனத்தை பற்றிய
கவலை உனக்கு எதற்கு.?

எதிர்பார்ப்பதை விட..
எதிர்கொள்வதை
கற்றுக்கொள்ளுங்கள்
இங்கு எதிர்பார்க்கும்
வாழ்க்கை கிடைப்பதில்லை
எதிர்கொள்ளும் வாழ்க்கையே
கிடைக்கின்றது.

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

நம்பிக்கை கவிதைகள் வரிகள் – Nambikkai

தன்னம்பிக்கை பொன்மொழிகள்