நம்பிக்கை கவிதைகள் வரிகள் – Nambikkai

இந்த பதிவு ‘நம்பிக்கை கவிதைகள் வரிகள் – Nambikkai Kavithai In Tamil’ பற்றியது.

  • தமிழ் Quotes – நம்பிக்கை Quotes
  • தமிழ் Quotes – Nambikkai Quotes
  • நம்பிக்கை கவிதை வரிகள்
  • நம்பிக்கை கவிதைகள் (nambikkai kavithaigal)
  • Nambikkai Kavithai In Tamil
  • Nambikkai Quotes in Tamil – Nambikkai Kavithai

நம்பிக்கை கவிதைகள் வரிகள் – Nambikkai Kavithai In Tamil

இதுவும் கடந்து போகும்
என்ற நம்பிக்கையில்
வாழ்க்கை பயணம்
தொடர்கிறது..!

கோபப்படு ஆனால்..
அதற்கு முன் அதை விட
மும்மடங்கு பொறுமையாக இரு..
பூமி கூட பொறுத்திருந்து தான்
பூகம்பத்தை வெளிப்படுத்துகின்றது..!

எப்போதுமே தளர்ந்து விடாதீர்கள்..
வாழ்க்கையில் எப்போதுமே
இன்னொரு வாய்ப்பு இருக்கும்..!

நம்முடைய உள்ளமும் சிந்தனையும்
தெளிவாக இருக்குமானால் நம்மை
யாராலும் வீழ்த்த முடியாது..!

உன் மனசாட்சிக்கு  நீ
உண்மையாக இருந்தால் போதும்
மற்றவர்களிடம் அதை நிருபிக்க
வேண்டியதில்லை..!

வாழ்க்கையை வெறுப்பதற்கு
ஆயிரம் காரணம் இருந்தாலும்
வாழ்க்கையை வாழ ஒரே காரணம்
தான் நாளை எல்லாம் சரி
ஆகிவிடும் என்ற நம்பிக்கையை..!

வெற்றி பெற வேண்டும் என்ற
பதற்றம் இல்லாமல் இருப்பது
தான்.. வெற்றி பெறுவதற்கான
சிறந்த வழி..

இரண்டரை மணி நேரம் பார்க்கும்
சினிமாவிற்கே போரடிக்காமல்
இருக்க வில்லன்கள் தேவைப்படும்
போது நீண்ட நெடிய நம்
வாழ்க்கைக்கு சில வில்லன்களும்
பல துரோகிகளும் இருப்பதில்
தவறில்லை..!

ஆசைகள் எல்லாம் ஒரு நாள்
நிறைவேறும் என்ற நம்பிக்கையில்
ஆசைகளுடன் மட்டுமே செல்கிறது
என் வாழ்க்கை..!

தொடங்கும் இடத்தில் இருந்து
பார்க்கும் போது பாதை முடிவது
போல தெரியும் நம்பிக்கை
கொண்டு நடை போட்டால்..,
பயணம் தொடரும்..,
இலக்கு தெரியும்..!

முடியும் என்று தெரிந்தால்
முயற்சி எடு.. முடியாது என்று
தெரிந்தால் பயிற்சி எடு..
வெற்றி நமதே..!

அதிக நேரம் இருக்காது அதிஷ்டம்..
நீண்ட தூரம் வராது சிபாரிசு..
எல்லா பொழுதும் கிட்டாது உதவி..
எப்போதும் ஜெயிக்கும்
நம்பிக்கை..!

முடிக்க முடியும் என்ற
நம்பிக்கையும் முடிக்க வேண்டும்
என்ற கட்டாயமும் முடியாத
காரியத்தையும்
முடித்து வைக்கும்..!

உன் மீது உனக்கு நம்பிக்கை
இருந்தால் தோல்வி கூட
உன்னை நெருங்க பயப்படும்.

வாழ்க்கையில் நம்பிக்கை
இருக்க வேண்டும்.. ஆனால்
பிறரை நம்பி ஒரு பொழுதும்
இருக்க கூடாது..!

மொத்த உலகமும் முடியாது
என்று சொல்லும் போது
‘ஒரு வேளை முடியலாம்’

என்று கேட்கும்
குரலே நம்பிக்கை..!

நம்பிக்கை என்ற சிறு நூல்
இழையில் தான்.. அனைவரின்
அன்பும் இயங்கிக்
கொண்டிருக்கின்றது..!

அனைவரையும் நம்பு ஆனால்
எல்லா நேரங்களிலும்
நம்பாதே..!

எதையும் எதிர் கொள்வேன்
என்ற மனநிலை மட்டுமே
நம்பிக்கையை கொடுக்கும்..!

முயற்சி செய்ய தயங்காதே..
முயலும் போது முட்களும்
உன்னை முத்தமிடும்..!
நம்பிக்கையுடன்
முயற்சி செய்..!

உள்ளத்தில் தளராத நம்பிக்கை
கொண்டவனுக்கு முடியாதது
என்று இந்த உலகில்
எதுவும் இல்லை..!

மேலும்