கெத்து கவிதை வரிகள் | Gethu Quotes

Gethu Quotes

வாழ்க்கையில் கெத்து என்பது அனைவரும் விரும்பும் ஒரு விடயம். இந்த கெத்து கவிதை வரிகள் | Gethu Quotes உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்த உதவும் வரிகளாக இருக்கும்.

கெத்து கவிதை வரிகள் | Gethu Quotes

உனக்கென ஒரு தன்மானம்
திமிர் எப்போதும்
இருக்க வேண்டும்.
அதை எந்த சந்தர்ப்பத்திலும்
யாருக்காகவும் விட்டு
கொடுக்காதே..

நம்மள சுத்தி இருக்கிறவங்க
எல்லாம் பொய்யா
வேஷமிட்டு நடிக்கும் போது
நான் நானா இருக்கிறது
தனி கெத்து தான்.

அவன மாதிரி வாழனும்
அவள மாதிரி வாழணும்னு
ஆசைபடாதே தனியா
வாழ்ந்தாலும் திமிரா
கெத்தா வாழு.

நம்மை தவறாக புரிந்து
கொண்டவர்களுக்கு நாம்
செய்யும் அனைத்தும்
தப்பா தான் தெரியும்..
நாம தான் அத கண்டுக்காம
கெத்தா வாழனும்.

அடுத்தவன் நம்மள தப்பா
நினைப்பான் என
பயந்து பயந்து வாழ்றத விட..
நம்மள தப்பா நினைக்கிற
அளவிற்கு அவன் யாருனு
கெத்தா வாழ்ந்திடனும்.

நடந்து போற பாதை
கரடு முரடா இருந்தாலும்..
சிரிச்சப்படி கெத்தா
நடந்து போகணும்.

நான் செய்றது பிடிக்கயா
உன் கண்ணை மூடிட்டு இரு..
நான் பேசுவது பிடிக்கலையா
உன் காதை மூடிட்டு இரு..
என்னையே பிடிக்கலான
மூடிட்டு இரு.

உன் எதிரி முன்னாடி
விழுந்தாலும் பரவாயில்லை..
துரோகி முன்னாடி மட்டும்
விழுந்திடாமல் கெத்தா
வாழ்ந்து காட்டு.

நம்மை யாரும் ஒதுக்கும்
போது கவலைப்படாமல்
அவங்க முன்னாடி கெத்தா
வாழ்ந்து காட்டணும்.

கஷ்டங்கள் இல்லாத
சந்தோசமும்.. முயற்சி
இல்லாத வெற்றியும் அதிக நாள்
நிலைத்து நின்றதில்லை.

மனதில் பட்டதை
யாருக்கும் பயப்படாமல்
பேசுவது திமிரு என்றால்
அந்த கெத்து என்னிடம்
நிறையவே இருக்கு.

நூற்றில் நாமும் ஒருவராக
இருப்பதற்கு பதிலாக
கெத்தா தனியாவே
இருக்கலாம்.

ரொம்ப வசதியா ஆடம்பரமா
வாழனும் என்று
ஆசையில்லை. சில பேர்
முன்னாடி கெத்தா வாழ்ந்து
காட்டணும் தான் ஆசை.

யாரும் இல்லாட்டியும்
தனியாக இருப்பதும்
தன்மானம் தான் அந்த
தனிமையே நாளடைவில்
நமக்கு நண்பனாகி விடும்.

உதட்டில் சிரிப்பும் மனதில்
வஞ்சகமும் வைத்து வெளியே
நல்ல மாதிரி பழகும் எந்த
உறவும் தேவையில்லை..
தனியாக இருந்தாலும்
உண்மையாக இருக்க
விரும்புகிறேன்.

கோபத்தை உப்பு போல
பயன்படுத்த வேண்டும்.
குறைத்தால் மரியாதை
போயிரும். கூட்டினால்
மதிப்பு போயிரும்.

எனக்கு யாரையும் ஒதுக்க
பிடிக்காது. ஆனால் என்னை
ஒதுக்குறவங்கள எப்பவுமே
எனக்கு பிடிக்காது.. தனித்திமிரு
என்னிடம் அதிகமாவே இருக்கு.

உன்னை பற்றி உன்
பின்னால் நின்று
கதைப்பவர்களை நினைத்து
கவலைப்படாதே.. அவர்களுக்கு
உன் முன்னாடி நின்று கூட
பேசுவதற்கு தகுதி இல்லாதவர்கள்.

யாரையும் அறியாமல் கூட
கஷ்டப்படுத்தி விடக்கூடாது
என நினைப்பவன் பல
கஷ்டங்களை வாழ்க்கையில்
கடந்திருக்கிறான்
என்று அர்த்தம்.

நேற்று நடந்ததை மறந்தால்
தான் இன்னைக்கு
நடப்பவையை எண்ணி
உன்னால் சிரிக்க முடியும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்கள் மற்றும் உங்கள் விருப்பத்துக்கு உரியவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் தன்னம்பிக்கை ஊட்டும் வரிகள் இங்கே கிளிக் செய்து படியுங்கள்.