முயற்சி கவிதை வரிகள்-Tamil Motivational Quotes

Tamil Motivational Quotes

இந்த பதிவில் உள்ள “முயற்சி கவிதை வரிகள்-Tamil Motivational Quotes வாழ்க்கையின் வெற்றிக்கு விடாமுயற்சியின் அவசியத்தை கவிதை வரிகள் ஊடாக வெளிப்படுத்தும்.

முயற்சி கவிதை வரிகள்-Tamil Motivational Quotes

நடக்கும் என்று
நினைத்துக் கொண்டு
நடக்கும் என்பதில் நம்பிக்கை
வைத்துக் கொண்டு
விடா முயற்சி செய் வெற்றி
நிச்சயம் ஒரு நாள்
உன்னை தேடி வரும்.

தன்னால் முடியாது என்று
நினைப்பவன் வெற்றி பெற
தவறிவிடுகிறான்.. தன்னால்
முடியும் என்று நம்ம்பிக்கை
வைத்து முழு முயற்சியோடு
பாடுபடுபவன் மற்றவர்கள்
விட்ட வெற்றியையும் சேர்த்து
பெற்றுக் கொள்வான்.

மண்ணில் விழுவது
அவமானம் இல்லை
விழுந்தால் முயற்சி செய்து
விதையாக மாறி பெரு
விருட்சமாக எழு.

உன்னால் முடியும் வரை
முயற்சி செய்.. உன்னால்
முடியாது போனால்
பயிற்சி செய்.

முயற்சி செய்ய சிறு
நொடி கூட தயங்காதே
முயற்சி செய்யும் போது
தடைகளும் உன்னை
தலை வணங்கும்.

முயற்சி என்பது விதை
போல அதை விதைத்துக்
கொண்டே இரு விதைத்தால்
மரம் இல்லையேல்
நிலத்திற்கு உரம்.

உன் முயற்சிகள் உன்னை
பல முறை கைவிட்டாலும்
நீ ஒரு போதும் முயற்சியை
கைவிடாதே.. முயற்சி தான்
உனக்கான வெற்றியை
உன்னிடம் அழைத்து வரும்.

முயற்சியும் பயிற்சியும்
உன்னிடத்தில்
இருக்குமானால்
உன்னுடைய இலக்கினை
உன்னால் அடையமுடியும்.

வெற்றியின் ரகசியம்
உன்னில் நீ நம்பிக்கை
வைத்து விடாமுயற்சி
செய்வது தான்.

வாழ்க்கையில் நீ
உயரத்தை அடைவதும்
ஒன்றும் இல்லாதவனாக
இருப்பதும் உன் முயற்சியில்
மட்டுமே தங்கி இருக்கின்றது.

முயற்சி இல்லாமல்
உன்னில் நம்பிக்கை
வைப்பது கால்கள்
இல்லாமல் நெடுந்தூரம்
நடப்பது போன்றதாகும்.

வாழ்க்கையில் உன்
முயற்சி தோற்கலாம்..
ஆனால் நீ முயற்சி
செய்வதை தோற்றுப்போக
விட்டு விடாதே.. முயற்சி
செய்வதை நிறுத்துவது தான்
உண்மையான தோல்வி.

ஏற்றம் வரும் போதும்
இறக்கம் வரும் போதும்
நம் கூடவே இருக்கும்
ஒரு நண்பன் நமது
முயற்சியும் நம்பிக்கையும்
மட்டும் தான்.

உன்னால் இயன்றவரை
முயன்று விடு நீ
இயற்கை எய்திய பிறகு
உன் வாழ்க்கை ஒருவரலாறாக
இருக்க வேண்டும்.

வெற்றி எனும் உயரத்தை
அடைய உனக்கு வழிகாட்டும்
வழிகாட்டி தான் உன் தோல்வி
உன் தோல்விகளை கண்டு
கலங்காமல் தொடர்ந்து
முயற்சி செய்து
கொண்டே இரு.

வரலாறு உன் பெயரை
சொல்ல வேண்டுமானால்
நீ பல முறை என்னை
தேடி வர வேண்டும்
இப்படிக்கு முயற்சி.

உன் வெற்றிக்கான
ஒவ்வொரு வாய்ப்பும்
உன் ஒவ்வொரு முயற்சியிலும்
உன் நம்பிக்கையிலும் தான்
ஒளிந்திருக்கும்.

வாழ்க்கை என்பது
ஒரு போதும் நீ எதிர் பார்ப்பது
போல அமையாது ஆனால்
நீ எதிர் பார்ப்பது போல
நிச்சயம் உன்னால் மாற்றி
அமைத்துக் கொள்ள முடியும்..
நீ முயற்சி செய்தால்.

உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன்
எல்லாம் மனிதன் இல்லை.
தன் உயிர் இருக்கும் வரை
முயற்சி செய்து கொண்டிருப்பவனே
மனிதன்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.