வெற்றி கவிதை வரிகள்

வெற்றி கவிதை வரிகள் நம்மை வெற்றியின் பாதையை நோக்கி செல்வதற்கான உத்வேகத்தை கொடுக்க கூடியவை.

இந்த வெற்றி கவிதை வரிகள் நம் வெற்றிக்கு தேவையான உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்க உதவியாக இருக்கும்.

வெற்றி கவிதை வரிகள்

வெற்றி என்பது எப்பவுமே
நிரந்தரமாக யாருடனும்
தங்கி விடாது.. தோல்வி
என்பது ஒரு போதும்
முடிவாக இருக்காது..!

நீ செல்லும் பாதையில்
தடைகளும் இடர்களும்
இல்லை என்றால் அது
நீ செல்லும் பாதை அல்ல
யாரோ ஒருவர்
சென்ற பாதை..!

தோல்வியை ஒப்புக்
கொள்ள ஒரு போதும்
தயக்கம் காட்டாதே..
உன் தோல்வியில்
இருந்து நீ கற்றுக்கொள்ள
வேண்டியது அதிகம்
இருக்கின்றது.

வெற்றிக்கும் தோல்விக்கும்
ஒரு சிறு வித்தியாசம் தான்
உண்டு அது யாதெனில் நீ
கடைமையை செய்தால்
வெற்றி.. அதே நீ கடமைக்கு
செய்தால் தோல்வி..!

தோல்வி என்பது
இறுதியானது அல்ல..
வெற்றி என்பது எளிதானது
அல்ல… எதற்கும்
விடாமுயற்சி என்பது
அவசியம்… உன் முயற்சி
தொடர்ந்தால் வெற்றி
என்பது நிச்சயம்..!

உங்களை குறை
சொல்பவர்களுக்கு நன்றி
சொல்லுங்கள் உங்களை
நீங்களே செதுக்கிக்
கொள்ள அவர்கள் தான்
உளி கொடுக்கிறார்கள்..!

தோல்வி என்ற ஒன்று
தான் உன் வெற்றிக்கான
போராட்ட குணத்தை
அதிகப்படுத்தும்..!

உன் வாழ்வில் நீ வெற்றி
பெற வேண்டும் என்றால்
உன் கால்களால்
நடந்து வா மற்றவர்களின்
முதுகில் ஏறி வர
நினைக்காதே..!

தொடர் தோல்விகள்
உன்னை பயமுறுத்தும்
போதும் உன் முயற்சியை
ஒரு போதும் கை விடாதே
உன் விடா முயற்சி தான்
உன் வெற்றியை
தேடித் தரும்..!

திட்டங்களில் வெற்றி
என்பது இல்லை..
திட்டமிடல் என்பதிலே
வெற்றி என்பது
தங்கியுள்ளது..!

தலைமை பண்பு என்பது
ஒரு உயர்வான தகுதி
தலைமை பண்பு
இல்லாமல் உண்மையான
வெற்றி என்பது
நிறைவு பெறாது..!

பயத்தினை வென்று
அதை கடந்து வருவதே
வாழ்வில் வெற்றி
பெறுவதற்கான முதல்
தொடக்கம் ஆகும்.

தன் தவறுகளை ஒப்புக்
கொள்வதற்கான தைரியமும்
அந்த தவறுகளை திருத்திக்
கொள்வதற்கான பழக்கமும்
தான் வெற்றிக்கான
பாதையை உருவாக்கும்..!

நீங்கள் செல்லும் பாதை
சரியாக இருந்தால்
வேகமாக ஓடினால்
மட்டுமல்ல மெதுவாக
நடந்தாலும் வெற்றி
என்பது உறுதி..!

வெற்றியை தேடி நீ
ஓடாதே.. உன் மீது
நம்பிக்கை வைத்து
உன் திறமையையும்
உன் விடா முயற்சியையும்
வளர்த்துக் கொள் வெற்றி
உன்னை தேடி வரும்.

அவமானங்களையும்
உன் தோல்விகளையும்
மறந்து விடாதே உன்
வெற்றி உன்னை
தேடி வரும்..!!

வெற்றிக்கான தன்னம்பிக்கை வரிகள்