நான் கெட்டவன் கவிதைகள்

kettavan kavithai tamil

இந்த “நான் கெட்டவன் கவிதைகள்” தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

  • கெட்டவன் கவிதைகள்
  • கெட்டவன் கவிதை
  • kettavan kavithai tamil

நான் கெட்டவன் கவிதைகள்

ஒவ்வொருவருக்கும் ஒரு
முட்டாளின் உதவி
தேவைப்படுகின்றது.. தன்னை
அறிவாளியாக காட்டிக் கொள்ள..!

யோக்கியன் என்று இங்கு யாரும்
கிடையாது.. தவறு செய்ய
வாய்ப்பு கிடைத்தவன் கெட்டவன்..
வாய்ப்பு கிடைக்காதவன் நல்லவன்..!

நல்லது செய்து கெட்டவன் என்று
பெயர் வாங்குவதை விட..
கெட்டவன் என்ற முகமூடிக்குள்
நல்லவனாகவே இருக்கலாம்..!

உண்மையான முகத்திற்கு
கிடைக்காத மதிப்பும் மரியாதையும்
போலியான முகமூடிக்கு
கிடைக்குமானால் அதை
அணிவதில் தவறில்லை..!

நம் சமூகத்தில் ஏன் என்று
கேட்பவன் “கெட்டவன்”..
ஆம் என்று சொல்பவன் “நல்லவன்”..!

நல்லவராக நடிக்க எல்லோராலும்
முடியும்.. நல்லவராக வாழ
ஒரு சிலரால் தான் முடியும்..!

பிறருக்காக இரக்கப்படுவதில்
தவறில்லை.. ஆனால் நாம் ஆடாய்
இருக்கும் பட்சத்தில் ஒநாய்க்காக
வருந்துவது என்பது முட்டாள்தனமே..!

எவரை போலவும் இல்லாமல்
இது தான் நான் என தன் இயல்பு
மாறாமல் வாழ்வதும் ஒரு வகையில்
வாழ்நாள் வெற்றி தான்..!

வலியின் விளிம்பிற்கே வந்து
வாயடைத்து போனாலும்
விட்டுக் கொடுக்க மாட்டேன்..
தன்மானத்தையும்..
தன்னம்பிக்கையையும்..!

யாரும் இல்லாவிட்டாலும்
தனிமையில் இருந்து
கற்றுக் கொண்டது
தன்னம்பிக்கை மட்டுமே.

நீ கொஞ்சம் நேர்மையாக
நீதியுடன் மனச்சாட்சிக்கு பயந்து
நடந்தால் அனைவர் கண்ணுக்கும்
நீ தான் கோமாளி.

நீங்கள் தேடும் போது நான்
கிடைக்கவில்லை என்றால்..
நான் இருக்கும் போது நீங்கள்
என்னைக் கண்டுக்கொள்ளவில்லை
என்று அர்த்தம்.

சிரித்துக் கொண்டு துரோகியாக
இருப்பதை விட..
முறைத்துக் கொண்டு எதிரியாக
இருப்பது எவ்வளவோ மேல்.

சில பேர் எனக்கு பின்னால்
பேச காரணம் என்கிட்ட
நேரா பேசுனா.. தரமான பதில்
இருக்கும்னு நிச்சயம் தெரியும்.

விட்டுட்டு போனவங்களே
சந்தோஷமாக இருக்கும் போது..
அவங்களுக்காக எல்லாத்தையும்
விட்டுக்கொடுத்து போன
நம்ம சந்தோஷமா இருந்தா
அது தப்பே இல்லை.

ஒரு முறை என்னை
புறக்கணித்தவர்கள் மீண்டும்
என்னை நேசிப்பதற்கு
தகுதி அற்றவர்கள்.

உன் மனசாட்ச்சிக்கு நீ
உண்மையாக இருந்தால் போதும்
எந்த நபர்களுக்கும் நிரூபிக்க
வேண்டிய அவசியம் இல்லை.

யாருடைய மாற்றமும் உன்னை
பலவீனமாக்க கூடாது.

இங்கு தூக்கி விட்டவர்களை விட..
தூக்குவது போல விட்டவர்களே
அதிகம்.

அடுத்தவன் போல் வாழ ஆசை
கொள்ளாதே.. ஏனென்றால்
அவனே அடுத்தவன் போல் தான்
வாழ ஆசைப்படுகின்றான்.

நீ உண்மையாக இருக்கும் வரை
பொய்யானவர்கள் உன்னை
நெருங்க பயப்படுவார்கள்.!

வாழ்க்கையில் உயர
வேண்டுமானால்.. முதலில்
செய்ய வேண்டியது உன்னை
இழிவாக நினைப்பவர்களையும்..
உன்னிடம் எப்பொழுதும்
குறை காண்பவர்களையும்
உன் வாழ்க்கையில் இருந்து
ஒதுக்கி விடு.!

ஒருவன் எப்படிப்பட்டவன்
அவன் குணம் எப்படி..? என்பதை
நீ பழகிப்பார்த்து தான்
முடிவு செய்ய வேண்டுமே தவிர
பிறர் கூறுவதை கேட்டு
முடிவு செய்ய கூடாது.!

மேலும் பதிவுகளை படியுங்கள்..

இந்த பதிவு பிடிந்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.