துரோகம் பொன்மொழிகள் | Drogam Quotes

drogam quotes in tamil

இந்த பதிவில் “துரோகம் பொன்மொழிகள் | Drogam Quotes Tamil” காணலாம்.

  • துரோகம் பொன்மொழிகள் | Drogam Quotes Tamil
  • நம்பிக்கை துரோகம் கவிதை வரிகள்
  • நம்பிக்கை துரோகம் கவிதை
  • Quotes நம்பிக்கை துரோகம்
  • நம்பிக்கை துரோகம் பொன்மொழிகள்
  • Drogam Quotes in Tamil

துரோகம் பொன்மொழிகள் | Drogam Quotes Tamil

இந்த உலகில் எதிரியிடம்
தோற்றவனை விட நிழல் போல்
அருகிலிருந்து துரோகியிடம்
தோற்றவனே அதிகம்.

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னால்
உழைப்பை விட துரோகம் தான்
அதிகமாக இருக்கும்.

வேண்டுமானால் எதிரியாய்
கூட மாறி விடுங்கள்..
ஆனால் துரோகியாய்
ஒரு நாளும் மாறி விடாதீர்கள்.

இதயத்தைக் கொடுத்தாலும்
துரோகி முதுகில் தான் குத்துவான்.

புன்னகையால் உடைத்தெறியுங்கள்
கூனிக்குறுகட்டும் துரோகங்கள்.

துரோகம் இருப்பவர்களிடம் கோபம்
இருக்காது..! கோபம் இருப்பவர்களிடம்
துரோகம் இருக்காது இதை
ஆழ்ந்து யோசித்தால் பல
உண்மைகள் புரியும்.

பிறருக்கு நம்பிக்கை துரோகம்
செய்வது கொலை செய்வதற்கு நிகரானது..!
தற்பெருமை பேசுவது தற்கொலை
செய்வதற்கு நிகரானது.

நடுத்தெருவில் நிற்க வைத்தாலும்
யாருக்கும் துரோகம் செய்யாத
மனது சிலருக்கு இருக்கிறது.

துரோகம் கத்தியை போன்றது
மற்றவரை குத்தும் போது
சுகமாகத்தான் இருக்கும்..
தன்னைக் குத்தும் போது தான்
கொடூரமாக இருக்கும்.

குற்றத்தை மன்னித்து விடலாம்
ஆனால் துரோகத்தை
மன்னிக்க முடியாது.

மனம் மரணித்து போக
நோயும் மரணமும் தேவையில்லை
ஏமாற்றமும் சில நம்பிக்கை
துரோகமும் போதும்.

போலியான வாக்குறுதிகள்
நம்பிக்கை துரோகத்தின்
மறு வடிவம்.

ஒரு அன்பும் ஒரு துரோகமும் போதும்
வாழ்க்கையை உணர்த்தி விட.

நேர்மையாக வாழ்ந்து பார்
எவ்வளவு துரோகிகளை கடந்து
வர வேண்டும் என்பது புரிந்து விடும்.

முன் பின் தெரியாதவர்கள் கூட
முதுகில் குத்துவதில்லை.. முகமறிந்த
உறவுகள் தான் அதிகம் குத்துகிறார்கள்..
துரோகம் எனும் கத்தியினால்.

தேவைப்படும் போது பழகுவதும்
தேவை முடிந்தவுடன் விலகுவதுமாக
இருக்கும் வரை மனித வாழ்வில்
ஏமாற்றங்களும் துரோகங்களும்
தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

தன்னுடைய சந்தோசத்திற்காக
தன்னை நம்புவோரை ஏமாற்றுவது
என்பது அந்த உறவிற்கு செய்யும்
மிகப் பெரிய துரோகம்.

நம்பியவனுக்கு கூட துரோகம்
செய் நம்பியது அவன் தவறு..
ஆனால் நல்லது செய்தவனுக்கு
மட்டும் துரோகம் செய்யாதே
அந்த பாவத்தை எங்கு சென்றாலும்
கழுவ முடியாது.

போராட்டங்களில் நிற்பதில் பெரிய
ஆபத்து நமக்கு எதிரில் நிற்பவர்கள்
அல்ல.. நம் பின்னால் நிற்கும்
துரோகிகள்.

நம்பாதவர்களிடம் நேர்மையாக
இருப்பதும் நம்புபவர்களுக்கு துரோகம்
செய்வதும் சிலரின் மாற்ற
முடியாத இயல்பு.

உனக்கு துரோகம் செய்து விட்டு
போனவர்கள் உன்னிடம் ஆயிரம்
முறை திரும்பி வரலாம் ஆனால்
ஒருமுறை கூட திருந்தி
வரப்போவதில்லை.

நம்பிக்கை துரோகம் நம்பாத
ஒருவரிடம் இருந்து கிடைக்காது..
நீ அதிகம் நம்பியவர்களிடம் இருந்து
மட்டுமே கிடைக்கிறது.

துரோகத்தின் பிறப்பிடம் நம்பிக்கை.
நம்பிக்கையின் இறப்பிடம் துரோகம்..!

நம்பி வந்தோரை நம்ப வைத்து
துரோகம் செய்தால்.. கல்லும்
கரைந்து போகும் கடவுள்
இல்லை என்று.

நம்பிக்கை வைத்தவன்
துரோகம் செய்து விட்டானே
என்று புலம்பாதே.. நீ வைத்த
நம்பிக்கை தான் உனக்கு
துரோகியை அடையாளம் காட்டியது.

மேலும்