கண்ணீர் துளிகள் கவிதைகள் வரிகள்

Kanneer Thuligal Kavithai

இந்த பதிவில் “கண்ணீர் துளிகள் கவிதைகள் வரிகள்” காணலாம்.

உணர்வுகளின் அதி உச்ச வெளிப்பாடே கண்ணீர் துளிகள். கண்ணீர் துளிகள் மிக மதிப்பு மிக்கவை.

உணர்வுகளை மதிக்க தெரியாத உறவுகளுக்கு கண்ணீர் துளிகளின் மதிப்பும் புரிவதில்லை.

  • கண்ணீர் கவிதை வரிகள்
  • கண்ணீர் கவிதைகள்
  • Kanneer Thuligal Kavithai

கண்ணீர் துளிகள் கவிதைகள் வரிகள்

1. எனக்கென்று யார் இருக்கிறார்கள்
என்று நினைக்கும் போதெல்லாம்
நான் இருக்கிறேன் என்று
முன் வந்து நிக்கிறது கண்ணீர்.

2. உன்னை நினைக்கும் போது
கலங்கும் என் கண்களுக்கு
மட்டுமே தெரியும்
நான் உன்மீது கொண்ட அன்பு.

3. அழும் போது ஆறுதல் சொல்ல
தேவையில்லை..
மேலும் அழ வைக்காமல் இருங்கள்
அதுவே மிகப்பெரிய
ஆறுதலாக இருக்கும்.

4. அளவுக்கு அதிகமான அன்பும்
எல்லையின்றி கொண்டாடப்படும்
நம்பிக்கையும் இருக்கும் இடத்தில்
கண்டிப்பாக ஒருநாள்
கண்ணீருக்கும் ஏமாற்றத்திற்கும்
இடம் உண்டு..
அது நட்பாக இருந்தாலும் சரி..
காதலாக இருந்தாலும் சரி.

5. நான் எனக்காக சிந்திய
கண்ணீரை விட..
உனக்காக சிந்திய
கண்ணீரே அதிகம்.

6. உலகில் உண்மையான பாசத்திற்கு
கிடைக்கும் இறுதி பரிசு கண்ணீர்.

7. நம் சிரிப்பு மற்றவர்களுக்கு கண்ணீரை
வரவழைக்கின்றது என்றால்..
நாமே நம் பற்களை
தட்டிக்கொள்ள வேண்டும்.!

8. நீ விடும் ஒவ்வொரு கண்ணீர் துளியும்
மலர் மீது பனித்துளியாக விழுகிறது..
ஒரு நாள் அந்த மலரே வந்து
உன் கண்ணீரை துடைக்கும்.!

8. சமுத்திரத்தை விட..
சுக துக்கங்களில் வெளிப்படும்
கண்ணீர் துளி அழகு.!

9. வாழ்க்கையில் சில நேரங்களில்
கண்ணீர் துளிகள் மட்டுமல்ல..
புன்னகையும் சோகத்தை
வெளிப்படுத்தும்.!

10. சிலர் மேல் உள்ள அதிக அன்பினால்
நமக்கு கண்ணீர் வரும்..
சிலருக்கு இவர்கள் மேல்
ஏன் இவ்வளவு அன்பு வைத்தோம் என்று
கண்ணீர் வரும்.!

Kanneer Thuligal Kavithai

11. கண்ணீர் துளிகளை துடைக்க
வேண்டிய உறவே கண்ணீருக்கு
காரணமானால் சாகும் வரை
சோகம் தான்.!

12. நீ மழையில் நனைந்து கொண்டே
அழுதாலும்..
உன்னை உண்மையாக நேசிக்கும்
இதயத்திற்கு தெரியும்.!

13. கண்களில் இருக்கும் கண்ணீர் துளிகள்
மதிப்பானது..
உதடுகளில் இருக்கும் வார்த்தை
வலிமையானது..
அன்பு உள்ள இதயம் அழகானது.!

14. விழுந்த உடன் மறைந்து போக
நான் மழைத்துளி இல்லை..
உன்னுடன் இறுதிவரை இருக்கும்
கண்ணீர் துளி.!

15. சிலுவையை சுமக்க சொன்னால்
சிரித்துக்கொண்டே சுமந்திடுவேன்..
அன்பே கண்ணீர் துளிகளை
சுமக்க சொன்னால் என்னால்
எப்படி சிரிக்க முடியும்.!

16. என் கண்ணீர் துளிகள் தான்
உன் சந்தோசம் என்றால்..
உன்னையும் கண்ணீர் துளிகள்
சிந்த வைப்பேன்..
என் கல்லறையில்.!

17. நீ கொடுக்கும் நினைவுகள்
மழையாக பொழிகிறது..
தினம் தினம் கண்ணீர் துளிகள்
வழிந்தன என் விழிகளில்.!

18. காற்று கூட கலங்குகிறது
என் கண்ணீர் துளிகளை கண்டு..
ஆனால் நீயோ என்னை தனியே
தவிக்க விட்டு விலகி செல்கிறாய்.!

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.