நினைவுகள் கவிதைகள் – ninaivugal kavithai

ninaivugal kavithai tamil

இந்த “நினைவுகள் கவிதைகள் – ninaivugal kavithai” தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

  • நினைவுகள் கவிதைகள்
  • ninaivugal kavithai tamil
  • காதல் நினைவுகள் கவிதை

நினைவுகள் கவிதைகள் – ninaivugal kavithai

கடந்து போனாலும் கனமாக
இருக்கிறது மனது.. கலைந்து
போனாலும் கனவாக
இருக்கிறது நினைவு..!

நினைவுகள் நல்லதாக
இருந்தாலும் சரி கெட்டதாக
இருந்தாலும் சரி நம்ம கூட
தான் இருக்கும்..
மறக்க முடியாது.

நினைவுகள் நிஜம் இல்லை
என்று தெரிந்தாலும்.. மனம்
என்னவோ நினைவுகளை
தான் நேசிக்கிறது..!

தொலைத்த இடமும்
தெரிகின்றது.. தொலைந்த
பொருளும் தெரிகின்றது..
வலியும் உணரப்படுகிறது..
ஆனால் திருப்பி மீட்கத்தான்
முடியவில்லை. எல்லாமே
நினைவுகளாக.

பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
பிடிக்காமல் போகிறது சிலரை..
வெறுப்பதற்கு காரணம்
இருந்தும் வெறுக்க
முடியவில்லை சிலரை..!

நிஜங்கள் தரும் சந்தோஷத்தை
விட நினைவுகள் தரும்
சந்தோஷம் அதிகம்..
அதனால் தான் நிஜங்கள்
நிலைப்பதில்லை நினைவுகள்
என்றும் அழிவதில்லை.

காலங்கள் கடந்தும் காலாவதி
ஆகிவிடாத மருந்து..
அன்பானவர்களின் அழகான
நினைவுகள் மட்டுமே..!

பத்து நிமிடமோ.. பல வருடமோ
சிலருடன் இருந்த நினைவுகள்
என்றும் மறந்து போகாது.

முகவரி இன்றி முடிந்து போன
உறவுகளிடம் தான் முடங்கி
விடுகிறது நம் நினைவுகள்.

நிஜத்தில் மீண்டும்
அடையமுடியாத அழகிய
நினைவுகளாய் கனவில் அடிக்கடி
திரையிடப்படும் நிகரில்லா
காட்சிகளாய் குழந்தை
பருவ ஞாபங்கள்.

மறக்க இயலாமல் வலியுடன்
நினைவுகளை சுமப்பதில்
உள்ளது உண்மையான அன்பு.

நிஜம் ஒரு நொடி வலி நினைவு
ஒவ்வொரு நொடியும் வலி.

மறதி உன்னை மனிதன்
ஆக்கும் ஆனால் நினைவுகள்
உன்னை கலைஞன் ஆக்கும்.

முடிந்ததையும் சரி..
இழந்ததையும் சரி..
எப்போதும் உன் நினைவில்
கொண்டுவரதே.

உணர்வுகளை நினைவுகளாய்
சேமிக்கும் மனிதர்கள் நாம்..
உணர்வுகளும் குறைய
போவதில்லை.. நினைவுகளும்
முடிய போவதில்லை.

முகவரி இன்றி முடிந்து போன
உறவுகளிடம் தான் முடங்கி
விடுகிறது நம் நினைவுகள்.

என்றோ சந்தித்து போன
சில காட்சிகளை மனது
இன்றைக்கும் சுவாசிக்குமானால்
அது நாம் நேசித்த நிமிடங்ககளாக
தான் இருக்க முடியும்.

மீண்டும் மீண்டும்
நினைக்கத் தோன்றும் கடந்த
காலத்தின் சில நினைவுகள்
தான் நம் வாழ்வின்
வசந்த காலம்.

காதல் நினைவுகள் கவிதை

உனது நினைவுகளால் நான்
அழிந்து போனாலும்..
உன் நினைவுகள் என்றும்
என்னை விட்டு அழிவதில்லை..!

தனக்காக அழுத பெண்ணையும்
தன்னை அழ வைத்த
பெண்ணையும் ஆண்கள்
ஒருபோதும் மறப்பதில்லை.

என் வாழ்க்கையில் மறக்க
முடியாத நிமிடங்களை உன்னோடு
வாழ்ந்து விட்டேன் இந்த
நினைவுகள் ஒன்றே போதும்
என் உயிர் நீங்கும் வரை..!

உனக்கு என் நினைவு வந்தால்
என்னை தேடாதே உன்
இதயத்தைத் தொட்டுப்பார்
நான் துடிப்பேன்..
உன் நினைவுகளோடு.

ஏமாற்றுவோருக்கு மறதி
அதிகம்.. நேசித்தவர்களுக்கு
நினைவுகள் அதிகம்..!

மிக அழகானது சிலரின்
நினைவுகள்.

உன்னை நினைவுகளாய்
என்னிடம் எதுவுமே இல்லை..
உன் நினைவுகளை தவிர.

நேசிக்கப்பட்டவருக்கு மறதி
அதிகம்.. நேசித்தவருக்கு
நினைவு அதிகம்.. இதுவே
வாழ்க்கையின் யதார்த்தம்.

இறந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு நொடியையும்..
என்றும் உயிர்ப்புடன்
வைத்திருப்பது என்னை
நீங்கா உன் நினைவுகள் மட்டுமே..!

மேலும் படியுங்கள்..

தமிழ் ஒருதலை காதல் கவிதைகள்

முதல் காதல் தோல்வி வலி கவிதைகள்

கனவு காதலி காதல் கவிதைகள்