கனவு காதலி காதல் கவிதைகள்

Kanavu Kadhal Kavithaigal

இந்த தொகுப்பு “கனவு காதலி காதல் கவிதைகள் வரிகள்” உள்ளடக்கியுள்ளது.

  • கனவு காதல் கவிதைகள்
  • கனவு காதலி கவிதை
  • காதல் கனவு கவிதைகள்
  • Kanavu Kadhal Kavithaigal

கனவு காதலி காதல் கவிதைகள் வரிகள்

கனவு இல்லையென்றால்
நான் எப்போதே இறந்திருப்பேன்..
நான் உன்னோடு வாழ்வதெல்லாம்
கனவுகளில் தானே..!

கனவுகள் எனக்கு பிடிக்கிறது
நீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்..
கண்ணீரும் எனக்கு பிடிக்கிறது..
உனக்காய் அது உதிர்வதால்..
தனிமை எனக்கு பிடிக்கிறது
உன் நினைவுகளோடு
என்றும் வாழ்வதால்..!

என் காதல் கனவு கலையாமல்
இருக்க.. என் நினைவுகளை
தினமும் கலைத்துக்
கொண்டிருக்கிறேன்..!

உறக்கத்தை மறந்து கனவு
காண்பதும்.. கனவில் கண்டதை
உறங்காமல் தவிப்பதும் காதல்..!

நீ என் அருகில் இல்லை என்பது
நிஜம் தான்.. ஆனால் என்
கனவுகளிலும் நினைவுகளிலும்
நீ மட்டும் தான்..!

ஒவ்வொரு நொடியும் உனக்காகவே
பிறந்திருக்கிறது.. உன்னை
நினைப்பதிலேயே அந்த
நொடிகளும் கடந்து போகிறது..
நீ மட்டும் எங்கே செல்கிறாய்
என்னை தவிக்க விட்டு..!

எல்லோரும் என்னை கடந்து
சென்றுவிட்டார்கள்.. உனக்காக
நான் மட்டும் காத்திருக்கிறேன்..!

உன்னுடன் வாழும் கனவு
வாழ்க்கையை நிஜமாக்கி
கொடுத்து விடு என்னிடம்..
இல்லையென்றால் கனவோடு
நானும் கலைந்து போவேன்
காற்றில்..!

காதல் என்பது கோலம் போன்றது..
ஒரு புள்ளி தவறினாலும் கோலம்
தவறாகி விடும்.. அது போல
உன்னிடம் இருந்து வரும்..
“நீ என்னை மறந்து விடு”
என்ற வார்த்தை நம் காதலை
பிரித்து விடும்..!

காதலும் கனவும் ஒரே
மாதிரி தான்.. சிலருக்கு பலிக்கும்..
சிலருக்கு கலைந்து விடும்..!

காதல் என்றால் கட்டியணைப்பேன்..
கவிதை என்றால்
கற்றுக்கொடுப்பேன்..
கனவு என்றால்
தூங்க வைப்பேன்..!

காலம் கடந்து போகும் கனவுகள்
விலகிப் போகும் வலிகள்
விழியில் நிறைந்தே போகும்..!

என் கனவுகளை உன்னிடம்
தருகிறேன்.. நீ காதலாக
மாற்றி எனக்கு தா..!

என்ன தான் உன் கனவு
தேசத்தில் நான் உன்
அடிமையாக இருந்தாலும்..
என் கனவு தேசத்தில்
உனதடிமை ஆகி விடுகிறேன்..!

காதல் கவிதை எழுத காதலி
தேவையில்லை.. கனவு
காதலியே போதும்..!

கட்டியணைக்க கனநொடியும்
காத்திருக்கிறேன்.. கண்முன்
வருவாயா..? காதலியே..
கரமொன்றை கரை தாண்டி
நீட்டிவிடு கண்மணியே..!

முதல் நாள் எப்படி காதலித்தாயோ..
அதே அளவு காதல் வேண்டும்..
என் இறுதி நாள் வரை தருவாயா..?

பேசாமல் இருப்பதால் என்
பிரியம் குறைந்து விட்டது என்று
நினைத்துவிடாதே.. வெளியில்
நான் அப்படி இருந்தாலும் என்
நினைவு கனவெல்லாம் என்றும்
நீ மட்டும் தான் இருக்கிறாய்..!

உன்னோடு வாழ்வதை யாரும்
தடுக்கலாம்.. உன் நினைவோடு
கனவினில் வாழ்வதை யாராலும்
தடுக்க முடியாது..!

இரவில் தோன்றி பகலில்
மறையும் வெண்ணிலவு அல்ல நீ..
என் காதல் கனவில் தோன்றி
கண்ணிமைக்காமல் தொடரும்
காதல் நிலவு..!

சோகம் தனிமை தேடும்..
தனிமை நினைவை தேடும்..
நினைவு கனவைத் தேடும்..
கனவு உன்னைத் தேடும்..!

ஒரு விழி உனது.. ஒரு விழி எனது..
நம் இரு விழிகளில் காணும்
ஒற்றை கனவு
நம் காதல் மட்டுமே..!

மேலும் படியுங்கள்..