கனவு கவிதைகள் வரிகள் – Kanavu Kavithai

Kanavu Kavithaigal in Tamil

இந்த தொகுப்பு “கனவு கவிதைகள் வரிகள் – Kanavu Kavithai in Tamil” உள்ளடக்கியுள்ளது.

  • கனவு கவிதைகள் வரிகள் – Kanavu Kavithai
  • கனவு கவிதைகள்
  • Kanavu Kavithaigal in Tamil
  • Kanavu Kavithai in Tamil

கனவு கவிதைகள் வரிகள் – Kanavu Kavithai

கனவில் மட்டும் என் வாழ்க்கை
நான் விரும்புவதை போல்
அமைகிறது.. நிஜத்தில் அல்ல..!

நீங்கள் என்ன செய்ய
விரும்புகிறீர்கள் என்பதை
விட்டு ஒரு போதும் விலக்காதீர்கள்..
பெரிய கனவுகளைக் கொண்டவர்..
அனைத்து உண்மைகளையும்
அறிந்த ஒருவரை விட
சக்தி வாய்ந்தவர்..!

கனவோடு வாழ்ந்து விட்டேன்
பாதி வாழ்க்கையை..
கற்பனையோடு வாழ்ந்து
விடுவேன் மீதி வாழ்க்கையை..!

ஒரு மனிதனின் கனவுகள்
அவனது மகத்துவத்திற்கு
ஒரு குறியீடாகும்..!

சிறிய கனவுகளை காணாதீர்கள்..
அவைகளுக்கு மனிதரின்
இதயத்தை நகர்த்தும்
சக்தி இல்லை..!

கனவுகள் காண்பது இயல்பாய்
போன மனித வாழ்வில்
முயற்சிக்காத வரை
வாழ்க்கை ஒரு கானலே..!

ஒரு சிறந்த தலைவருக்கு
எண்ணங்கள் நிறைவேற்றும்
தைரியம் தன் வேட்கையிலிருந்து
வருகிறது.. தன் நிலையிலிருந்து
அல்ல..!

கனவு காண்.. கனவு காண்..
கனவு காண்.. பின்னால்
கனவுகளை எண்ணங்கள்
ஆக்கிப் பிறகு செய்கையாக்கு..!

கனவு காண்பவர் எவரும்
மிகச் சிறியவர் அல்ல..
எந்த கனவும் மிக
பெரியது அல்ல..!

கனவு காணாததை விட
சாத்தியமற்ற கனவு
காண்பது சிறந்தது..!

உலகை மாற்ற முடியும் என்று
நினைக்கும் அளவுக்கு
பித்தம் பிடித்தவர்கள் தான்
அதை செயல்படுத்துகின்றனர்..!

கனவுகளை இறுக்கி கட்டிபோடுவது
காலத்தின் கணக்கு என்றால்..
கனவின் வெற்றிகளை கட்டிபோட
முடியாமல் தவிக்க போவதும்
காலத்தின் கணக்கே..!

வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு..
கடந்த காலம் ஒரு கனவு எதிர்காலம்
ஒரு பெருமூச்சு..!

என் தூக்கம் கலைந்தாலும்
கனவு கலையாத வாழ்க்கை
வாழ்கிறேன்.. உன் காதலால்..!

சில கனவுகளை நிஜம் என
எண்ணி மகிழ்வதும்..
பல நிஜங்களை கனவு என
எண்ணி மறப்பதும்
தான் வாழ்க்கை..!

வாழ்க்கையை மட்டும்
நினைத்து கனவுகள் கண்ட
என் இதயத்திற்கு அவள்
இல்லாத ஒரு வாழ்க்கை
வாழ தெரியாது.. என்னால்
வாழவும் முடியாது.. இது
கவிதை இல்லை
என் இதயத்தின் கவலை..!

கவலையின் மடியில்
கண் மூடுகின்றது..
கண்ணீரால் கட்டிய
கனவு மாளிகை..!

உன்னோடு வாழும் கனவு
வாழ்க்கையால்..
பகல் இரவாகவும்
இரவு பகலாகவும் மாறி
வதைக்கிறது என்னை..!

இரவில் சுயநினைவற்ற
கனவுகளைக் காட்டிலும்..
என் சுயநினைவோடு நான்
கண்ட கனவுகள் அதிகம்..!

கனவுகள் பலிக்குமா
என்றெல்லாம் தெரியாது..
ஆனால் இனிக்கும் கனவில்
வருவது நீயென்றால்..!

ஒவ்வொரு விடியலும் எனக்கு
எதிரியே.. அவளுடன்
வாழும் கனவு வாழ்க்கையை
கலைப்பதால்..!

உறங்காத இரவுகள்..
நிறைவேறாத கனவுகள்..
ஏற்காத காதல்கள்.. என்றும்
மனதின் சுமைகள்..!

சோகத்தை சுகமாக்குவதும்
கனவு தான்.. வெற்றிக்கு
முதல் படியும் கனவு தான்..!

மேலும் படியுங்கள்..