முத்தம் கவிதைகள் வரிகள்

Mutham Kavithaigal Tamil

இந்த தொகுப்பு “முத்தம் கவிதைகள் வரிகள் (Mutham Kavithaigal Tamil)” உள்ளடக்கியுள்ளது.

  • முதல் முத்தம் கவிதைகள்
  • ஆசை முத்தம் கவிதை
  • முத்தம் கவிதைகள் வரிகள்
  • Mutham Kavithaigal Tamil

முத்தம் கவிதைகள் வரிகள்

நீ எனக்கு தந்த முதல்
முத்தத்தை இன்றும் சேமித்து
வைத்துள்ளேன்.. என் காதலின்
புனித சின்னமாய்..!

உச்சமான என் சினத்தை
உன் நெற்றி முத்தம்
பற்றி அணைத்தது..!

இதழினை மெதுவாய் வருடவே
இமைகளை மூடினேன்..
திருடவே இதயத்தின் துடிப்புகள்
கூடவே இடையினை இழுக்கிறேன்
இதழினை கடித்திட..!

என்னால் தடுமாற்றம் இல்லாமல்
எதையும் தாங்கிக் கொள்ள
முடியும்.. உன் மெல்லிய
முத்தத்தை தவிர..!

இதழ் முத்தம்.. இதனை விட
தித்திப்பான கவிதை
இயற்றத் தெரியாது
பெண்ணே..!

ஆயிரம் இதழ் பதித்த
முத்தங்களை விட
உன் ஒற்றை நெற்றி முத்தம்
என்னை தழுவி விடுகிறது..
உந்தன் அன்பினில் உறைந்து
போய் விடுகின்றேன்..!

உயிர் தொலைத்து
தேடுகையில் தான்
நீ என் இதழ் பதித்து முத்தமிட்டது
நினைவிற்கு வருகின்றது..!

முத்தத்தை பெறுபவர்களுக்கு
வாழ்நாளில் ஒரு நாள் கூடுமாம்..
என் வாழ்நாள் முடியும் வரை
என்னவளுக்கு கொடுத்துக்
கொண்டே இருப்பேன்..!

முத்தம் மகிழ்ச்சி நிறைந்த
நேரங்களில் ஆசையாய்
உதடுகளில் கொடுத்ததை விட..
கவலை மிகுந்த தருணங்களில்
ஆறுதலாக நெற்றியில்
கொடுத்தது தான் அதிகமாக
இனிக்குதடி..!

பல துன்பங்கள் நேர்ந்தாலும்..
உந்தன் உடல் அசைவிலும்..
எனக்கு கொடுக்கும் பிஞ்சு
முத்தத்திலும்.. எனக்குள்
உள்ள துன்பங்கள் எல்லாம்..
உடைந்து தூள் தூளாக
சிதறி போகின்றன..!

முதல் முத்தத்தை நினைவு கூறும்
போதெல்லாம் கைகளால்
முகம் மூடுகிறாய் விரல்
இடுக்கில் வழிகிறது நாணம்..!

முத்தம் ஒன்று தந்தேனே
காதல் யுத்தம்
ஒன்றை நிறுத்த..!

முதல் மழையை வானத்தை
பார்த்து நான் ரசிக்க
எதிர்பாராமல்.. நீ கொடுத்த
அந்த முதல் முத்தம் இன்றும்
ஈரமாக என் கன்னத்தில்..!

தரிசு நிலத்தை முத்தமிட்டுக்
காதல் சொல்லும் மழைத்துளி
போல என்னைக் களிகூர
செய்கிறதே..
உன் ஒற்றை முத்தம்..!

குடைக்குள் இருந்தும் முழுவதும்
நனைகிறேன்.. அவள் இதழ்கள்
பொழியும் முத்த மலையில்..!

அவள் தரும் முத்தத்திற்காகவே..
என் காதலும்.. நானும்..
காயம் ஆவோம்..!

உன் அன்பு முத்தம்..
கேட்கும் போது மறுக்கிறாய்..
கேட்காத போது நனைக்கிறாய்..
மழையை போல..!

நீ கட்டி அணைத்து முத்தம்
தருகையில்.. இறங்கி தான்
போகிறது… என் கோபம்
எல்லாம் வழி தெரியாமல்..!

முத்தம் ஒன்று வேண்டும்
அன்பே.. உன்னிடம் இருந்து..
சத்தம் இல்லாமல் வேண்டும்..!

எவ்வளவு தந்தாலும் என்றுமே
திகட்டாதது உன் முத்தம்
மட்டுமே.. நீ எத்தனை
முறை தந்தாலும்..!

உன் முத்த அரவணைப்பில்
ஒரே ஒரு நொடியேனும்
வாய்ப்பளிப்பாயா
என் காதலே..!

அதிகாலையில் அணைக்காது..
அக்கம் பக்கம் அச்சத்துடன்
பார்த்து.. பயத்துடன் பருகி..
சுவைக்க சுவைக்க இன்பம்..
என்னவளின் காலை நேர
காதல் முத்தம்..!

மேலும் படியுங்கள்..