இன்றைய சிந்தனை துளிகள்

Indraya Sinthanai Thuligal

இந்த “இன்றைய சிந்தனை துளிகள்” பதிவு உள்ளடக்கியுள்ளது.

  • இன்றைய சிந்தனை
  • இன்றைய சிந்தனைகள்
  • Indraya Sinthanai Thuligal

இன்றைய சிந்தனை துளிகள்

கவலையை தீர்க்க வேண்டும்
என்றால்.. அதன் ஆணி வேரை
கண்டுபிடிக்க வேண்டும்.!

பேச வேண்டிய நேரத்தில் மட்டும்
பேசினால்.. உங்கள் வாழ்க்கை
இனிமையாக இருக்கும்.!

தன்னம்பிக்கை இருந்தால் தான்..
குறுகிய வட்டத்தில் இருந்து
வெளியில் வந்து மகிழ்ச்சியாக
வாழ முடியும்.

சவால்களை தைரியமாக
எதிர்கொண்டால் மனம்
உறுதி அடையும்.

ஒவ்வொரு வலியும் உங்களை
வலிமை ஆக்குகிறது என்பதை
எப்போதும் நியாபகம்
வைத்துக் கொள்ளுங்கள்.!

உங்களுக்குள் இருக்கும்
மன தடைகளை நீக்கினால்..
உங்கள் முன் இருக்கும்
பல வாய்ப்புக்கள்
தெளிவாக தெரியும்.

எண்ணங்களை சரியாக
கையாளும் கலையை
பெற்றால்.. ஆசைப்படும்
வாழ்க்கையை உருவாக்க
முடியும்.!

உங்களுடன் நீங்கள் நல்லதையே
பேசினால்.. உங்கள்
வாழ்க்கை நன்றாக இருக்கும்.

பிறரை குறை சொல்லி இன்னும்
எத்தனை காலம் உங்களின்
தவறுகளை மறைக்க போகிறீர்கள்..?

சுய மதிப்பிடும் சுய
முன்னேற்றமும் நின்று
விட்டால்..உங்களின்
வளர்ச்சியும் நின்று விடும்.

கோபம் என்னும் தொடர்
சங்கிலியை மன உறுதியுடன்
தடுத்து நிறுத்துங்கள்.!

உயர்ந்த நோக்கம் உள்ள
வாழ்க்கையை வாழ்வதே
உங்கள் வாழ்க்கையின்
நோக்கமாக இருக்க வேண்டும்.

ஒரு செயலை செய்வதற்கு முன்
அதை ஏன்.? செய்ய வேண்டும்
என்ற கேள்வியை
உங்களிடம் கேளுங்கள்.!

உங்களை நீங்கள் புரிந்து
கொண்டால் தான்.. பிறரை
உங்களால் புரிந்து கொள்ள
முடியும்.!

நீங்கள் எந்த அளவிற்கு
மன உறுதியுடன் இருக்கிறீர்களோ.?
அந்த அளவிற்கு வாழ்க்கையில்
முன்னேறலாம்.

எண்ணங்கள் என்னும்
மந்திர சாவியை சரியாக
பயன்படுத்தினால்.. திறக்காத
கதவுகளையும் திறக்க முடியும்.!

அடுத்தவரை குறை சொல்வதை
நிறுத்தும் போது தான்
உண்மையான மகிழ்ச்சியை
உணர தொடங்குவீர்கள்.

பகை எண்ணங்களுக்கு சக்தி
கொடுப்பது வீட்டிற்குள்
விஷ செடிகளை
வளர்ப்பதற்கு சமம்.!

பகையை வளர்த்து சக்தி
பெறாமல்.. அன்பை வளர்த்து
சக்தியை பெறுங்கள்.

உங்களை தாழ்த்திக்கொண்டு
இன்னொருவரை உயர்வாக
பேச வேண்டும் என்று
அவசியம் இல்லை.!

மிக பெரிய தோல்வியில் தான்..
மிக பெரிய வாய்ப்புக்கள்
ஒளிந்திருக்கிறது.

சந்தேகம் தரும் எண்ணங்களை
நீக்கி.. நம்பிக்கை தரும்
எண்ணங்களை சேர்த்தால்..
வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.!

உங்கள் மனதின் சாவியை
நீங்கள் வைத்துக் கொண்டால்..
வாழ்நாள் சுதந்திரத்தை
உணர முடியும்.!

பிறர் கடுமையாக விமர்சிக்கும்
போது பொறுமையாக
இருப்பவர்கள் கோழைகள் இல்லை
ஒற்றுமையை விரும்புபவர்கள்.

நேரத்தை வீணடிப்பது பணத்தை
வீணடிப்பதற்கு சமம்.!

பணமும் வேண்டும்..
நல்ல குணமும் வேண்டும் என்ற
நோக்கத்துடன் செயல்படுங்கள்.

தோல்வி அடைந்தால்
விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..
முயற்சி கூட செய்யாமல் இருப்பது
மாபெரும் தோல்வி.!

உங்களின் எண்ணமும் பேச்சும்..
செயலும் ஒரே மாதிரி இருந்தால்
வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

செய்யும் வேலையை மகிழ்ச்சியாக
செய்தால்.. வெற்றி மேல் வெற்றி
உங்களை வந்து சேரும்.!

மேலும் படியுங்கள்..

தமிழ் Quotes | Motivational Quotes in Tamil

சிறந்த பொன்மொழிகள் (Sirantha Ponmozhigal)

சிந்தனை தத்துவங்கள் – Sinthanai Thathuvangal