இனிய இரவு வணக்கம் தத்துவம்

Iravu Vanakkam Thathuvam

இந்த “இனிய இரவு வணக்கம் தத்துவம்” பதிவு உள்ளடக்கியுள்ளது.

இனிய இரவு வணக்கம் தத்துவம்

மற்றவர்களை போல்
நான் இல்லை என்று
எண்ணாமல் என்னைப் போல்
மற்றவர்கள் இல்லை என்று
எண்ணிக்கொள்..
இனிய இரவு வணக்கம்.

வலியை தீர்மானிப்பது
அடி அல்ல.. அடித்தது
யார் என்பது தான்..
இனிய இரவு வணக்கம்.

சில விஷயங்கள் நம்
வாழ்க்கையில் நிறைவேறாமல்
கனவாக இருப்பது
நம் வாழ்க்கைக்கு மிகவும்
நல்லது..
இனிய இரவு வணக்கம்.

கவலைப்படாதே என்பதை விட..
நான் பார்த்துக்கிறேன் என்பதே
சிறந்த ஆறுதல்..
இனிய இரவு வணக்கம்.

இந்த உலகில் எதை எதையோ
தேடி அலையும் மனதிற்கு
இறுதியில் தேவைப்படுவது
அமைதி மட்டுமே..
இனிய இரவு வணக்கம்..!

ரசிப்பதற்கு ஒரு விஷயம் தினமும்
கிடைத்துக் கொண்டிருக்கும் வரை
வாழ்க்கை அழகானது..
இனிய இரவு வணக்கம்.

உங்கள் தேவையற்ற பிடிவாதங்களை
விட்டுப் பாருங்கள்.. உங்களை
சுற்றி எத்தனை பிடித்தவர்கள்
இருக்கிறார்கள் என்று தெரியும்..
இனிய இரவு வணக்கம்.!

மூடிய கதவையே பார்த்து
காலத்தை தொலைத்து விடாதே..
அதை விட சிறந்தது உனக்காக
காத்திருக்கலாம்..
இனிய இரவு வணக்கம்.!

பெரிய பாறை மீது யாரும்
மோதிக் கொள்வதில்லை..
சிறிய கற்கள் தான்
இடற வைக்கின்றன..
இரவு வணக்கம்.!

நீ இருப்பதால் யார் அதிகமாக
மகிழ்ச்சி அடைகிறாரோ..
அவர் அருகில் இருக்க
பழகிக் கொள்..
இரவு வணக்கம்..!

பருவம் தவறிய மழையும்..
நிதானம் தவறிய மனிதனும்
பயனற்றுப் போவது உறுதி..
இனிய இரவு வணக்கம்.!

உங்கள் குறிகளை நீங்களே
அடையாளம் கண்டு
கொள்வது தான் வளர்ச்சியின்
அடையாளம்..
இனிய இரவு வணக்கம்.!

பிடித்தவர்களிடம் அன்பாய்
இருப்பதை விட உண்மையாய்
இருங்கள்..அன்பை விட
உண்மை அதிக மகிழ்ச்சியானது..
அதிக ஆழமானது..
இனிய இரவு வணக்கம்.!

எல்லோரும் சரியான மனிதர்களை
தேடுகிறார்களே தவிர.. தான்
அவ்வாறு இருக்க வேண்டும்
என்று நினைப்பதில்லை..
இனிய இரவு வணக்கம்.!

வெட்கப்பட்டு ஒதுங்கி
நிற்பவனை விட.. கூச்சப்படாமல்
கை நீட்டி கேட்பவனுக்கே
வாய்ப்புக்கள் அதிகம்..
இனிய இரவு வணக்கம்.!

வார்த்தை என்பது ஏணியை
போன்றது.. நீங்கள்
பயன்படுத்துவதை பொறுத்து
ஏற்றியும் விடும்..
இறக்கியும் விடும்.!
இனிய இரவு வணக்கம்.

துக்கம் இல்லாத வீடுமில்லை..
துயரம் இல்லாத மனிதனுமில்லை..
எத்தனை துன்பம் வந்தாலும்
எண்ணத்தில் தூய்மை பெற்றவரே
எதற்கும் அஞ்சாமல் வாழ்வர்..
துயரத்தை துரத்தி மகிழ்வர்..
இரவு வணக்கம்.

ஒருவர் இறந்த பின் பிணத்தோடு
பிணமாக சென்று நிற்பதை விட..
உயிரோடு இருக்கும் போது
பகையை மறந்து உறவாக
சென்று நில் உலகில்
உயர்ந்தவனாக நீ இருப்பாய்..
இனிய இரவு வணக்கம்.

உன் முன்னேற்றத்திற்கு முதல்
ரசிகனாக நீ இருக்க வேண்டும்..
அப்போது தான் யார் உன்னை
விட்டு விலகிச் சென்றாலும்
அதனை ஏற்றுக் கொள்ள
பழகுவாய்.. யாரையும் அளவுக்கு
அதிகமாக நேசிக்காதே..
நல் இரவு வணக்கம்.

மேலும் படியுங்கள்..

சிந்தனை தத்துவங்கள் – Sinthanai Thathuvangal

வாழ்க்கை பொன்மொழிகள் | Ponmozhigal Tamil