காதல் பிரிவு கவிதைகள் – Kadhal Pirivu Kavithaigal

Kadhal Pirivu Kavithaigal in Tamil

இந்த தொகுப்பு “காதல் பிரிவு கவிதைகள் – Kadhal Pirivu Kavithaigal” உள்ளடக்கியுள்ளது.

  • காதல் பிரிவு கவிதைகள் வரிகள்
  • காதல் பிரிவு கவிதை
  • Kadhal Pirivu Kavithaigal in Tamil
  • Kadhal Pirivu Kavithai

தமிழ் காதல் பிரிவு கவிதைகள் – Kadhal Pirivu Kavithaigal

அன்பு புரியவில்லை என்றால்
விளக்குவதை விட
விலகுவதே மேல்..!

நம்மீது அளவற்ற அன்பு
செலுத்தும் ஒருவரினாலேயே..
நம்மை அளவில்லாமல்
அழ வைக்க முடியும்..!

நமக்கு பிடித்தவர்களிடம்
இருந்து குறுஞ்செய்திகளும்
வரவில்லை எனும் போதே
தெரிந்து கொள்ளலாம்..
அவர்களுக்கு நம்மை விட
அதிகம் பிடித்தவர்கள்
அதிகம் இருக்கிறார்கள்
என்று..!

நான் தேடி தேடி வந்து
பேசுவதனால் அதற்கு
நீ தரும் பரிசு
வேதனைகளும்
அவமானங்களும்
மட்டும் தான்..!

என் கண்களில் இருந்து
வழியும் ஒவ்வொரு
கண்ணீர் துளிகளும்
நீ தந்த வலிகளின்
வெளிப்பாடு..!

வேண்டாமென்று செல்லும்
உறவுகளை தொந்தரவு
செய்யாதீர்கள்.. பிரிவில்
உங்கள் நினைவுகள்
நிழலாடும் உணர்ந்தால்
தேடி வரட்டும் வெறுத்தால்
விலகி செல்லட்டும்..!

பாரமாக ஒருவரின் அருகில்
இருப்பதை விட.. அவர்களை
விட்டு தூரமாக விலகி
இருந்து விடுங்கள்..!

நான் உன் கூட இருந்தாலும்
இல்லை என்றாலும
நீ சந்தோசமா இருந்தா
எனக்கு அதுவே போதும்..!

காரணம் இல்லாமல் கண்ணீர்
வருகிறது என்றால்.. நீ
யாரையோ நேசிக்கிறாய்
என்று அர்த்தம்
உண்மையாக அல்ல உயிராக..!

உங்களிடம் இருந்து விலகி
இருக்க விரும்புவர்களிடம்
வற்புறுத்தி அன்பை
பெற நினைக்காதீர்கள்..
அந்த அன்பின் மூலம்
உங்களுக்கு எந்த பயனும்
கிடைக்க போவதில்லை..!

இந்த உலகில் உண்மையான
காதலுக்கு கிடைக்கும் பரிசு
கண்ணீர் துளிகள் மட்டுமே..!

சிலரை பிடிக்காது என்றாலும்
வெறுக்க முடியாது..
சிலரை பிடிக்கும் என்றாலும்
நெருங்கிட முடியாது..
புரிதல் ஒன்றே
அன்பை உணர்த்தும்..!

காதல் ஒன்று உருவாகும் போது
அதன் பின்னால் பிரிவு ஒன்று
ஒளிந்திருக்கும்..!

இழந்து விட்டேன் என்பதை
விட.. தவறவிட்டேன்
என்பதே உண்மை..!

அன்பும் ஒரு நாள்
தோற்று போகும் உண்மை
இல்லாதவரை நேசித்தால்..!

பிரிந்து போன ஒவ்வொரு
காதலுக்கு பின்னும்
சொல்லப்படாத
ஒரு பாசம் இருக்கும்..
அது பிரிந்த பின்னும்
இருக்கும்..!

உனக்குள் என் நினைவும்
எனக்குள் உன் நினைவும்
இருக்கும் வரை நமக்கு
பிரிவு என்பதே இல்லை..!

பிறர் மீதான வீண்
எதிர்பார்ப்புக்களை
குறைத்துக் கொண்டால
போதும்.. எப்போதும்
நிம்மதியாக இருக்கலாம்..!

இதயத்தில் அன்பு இருந்தால்
உன்னை மறந்து விடலாம்..
உன் அன்பு தான் என் இதயம்
என்றால் எப்படி உன்னை
மறக்க முடியும்..!

ஒவ்வொரு நொடியும்
உனக்காகவே பிறக்கிறது..
உன்னை நினைப்பதிலேயே
அந்நொடிகளும்
கடந்து போகிறது..
நீ மட்டும் எங்கே செல்கிறாய்
என்னை தவிக்க விட்டு..!

எத்தனை சண்டை வந்தாலும்..
எவ்வளவு அழுதாலும்..
எவ்வளவு ஏமாற்றம் வந்தாலும்..
கடைசி வரை பிரிந்து விடாமல்
இருப்பது தான்
உண்மையான காதல்..!

என்றோ சந்தித்துப் போன
சில காட்சிகளை மனது
இன்றைக்கும் சுவாசிக்குமானால்..
அது நாம் நேசித்த
நிமிடங்களாக தான்
இருக்க முடியும்…!

மேலும் படிக்க…