காதல் தோல்வி கவிதை வரிகள்

காதல் தோல்வி கவிதைகள்

இந்த காதல் தோல்வி கவிதை வரிகள் தொகுப்பு. காதலில் தோற்று மனம் உடைந்தவர்களின் உணர்வை கவிதை வரிகளின் ஊடாக வெளிப்படுத்தும்.

காதல் தோல்வி கவிதை வரிகள் (காதல் தோல்வி கவிதைகள்)

உன் அருகில் நான் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் உனக்காக உன் நினைவுகளுடன்
தனிமையில் காத்திருக்கும் நாட்கள் கூட சுகம் தான்.

நீ பேசும் ஒரு சில வார்த்தைகளுக்காக
பல மணி நேரம் காத்திருந்த
அந்த நேரத்திற்கு தெரியும்
நான் உன் மேல் கொண்ட பாசத்தின் உச்சம்.

வெகு தூரத்தில் நீ இருந்தாலும்
மறக்க முடியாத உன் நினைவுகளுடன்
உனக்காக நான் காத்திருப்பேன்
இன்றும் என்றும் என்றென்றும்..!

மிகப்பெரிய வலி நான்
உன்னுடன் பேச நினைத்தும்
பேச முடியாமல் இருப்பதே..!

உங்கள் அன்புக்குரியவர்களை விட்டு
அதிக தூரம் சென்று விடாதீர்கள்
திரும்பி வருவதற்கு நிச்சயம்
வழிகள் இருக்காது..!

பல நாட்களுக்கு பிறகு ஒருவரை
நீ பார்க்கும் போது உன்னை அறியாமல் கண்ணீர் வந்தால்
உன் மனதில் அவர் இடத்தை நிரப்ப
யாராலும் முடியாது என்பதை புரிந்து கொள்.

எனக்கான சிறிய உலகத்தில்
நான் அமைத்துக் கொண்ட
மிகப் பெரிய உறவு நீ..!

பேசாமல் இருப்பதால் என்
நேசம் குறைந்து விட்டது என்று எண்ணி விடாதே
வெளியில் நான் அப்படி இருந்தாலும்
என் நினைவெல்லாம் என்றும் நீ தான்..!

புன்னகை செய்ய கற்றுக் கொடுத்த உன் இதயம்
இன்று கண்ணீர் விடவும் கற்றுக் கொடுக்கிறது.

ஒரு உண்மையான காதலை
எவ்வளவு தான் காயப்படுத்தினாலும்
அது மறுபடியும் உன்னை
இன்னும் அதிகமாக நேசிக்குமே தவிர
உன்னை விட்டு விலகி செல்லாது.

எல்லா நேரத்திலும் நமக்கு பிடித்தவர்கள்
ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க
நமக்கு தான் எவ்வளவு பட்டாலும்
புரியவே புரியாது.

நீ திட்டி பேசும் போது கூட எனக்கு வலிக்கவில்லை
ஆனால் நீ என்னிடம் பேசாமல் இருக்கும் போது தான்
ஏனோ மனம் அதிகம் வலிக்கின்றது.

உன்னை காண இருக்கும் அந்த
அழகிய நொடிகளுக்காக
என் ஆயுள் முழுவதும் காத்திருப்பேன்.

யார் மனதையும் புண்  படுத்திவிடாதீர்கள்
ஒரு வேளை அதுவே உங்கள்
கடைசி சந்திப்பாக கூட இருக்கலாம்.

உன்னிடம் எதையும் எதிர்பார்க்காத நேரத்தில்
உன் அன்பை வெளிப்படுத்தினாய்
இன்று உன் அன்பை மட்டும் எதிர்பார்க்கின்றேன் நீயோ
வெறுப்பை மட்டும் பொழிந்து செல்கிறாய் ஏன்..?

கண் மூடி நான் காணும் கனவு நீ என்றால்
விடியாத இரவுகள் போதும் நான் வாழ்வேன்..!

உன் நினைவுகளோடு பேசிப் பேசி
இன்று ஊமை மொழியும் கற்றுக் கொண்டேன்.

நீ மட்டும் என் உலகம் என்று நினைத்ததால் தானோ
நீ என்னோடு பேசாத நிமிடங்கள்
உலகமே நின்றது போல் உணர்கிறேன்.

நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும்
ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது
உன்னைத் தவிர யாருக்கும் தெரியாது.

நீ எப்போதும் என் கூடவே இருக்கனும்
உனக்கு நான் எனக்கு நீ.

மலர்கள் உதிர்ந்த மரமாக உருவமின்றி
உதிர்ந்து கிடக்கின்றேன் உயிரே
உன்னைப் பிரிந்த நாள் முதல்.

(காதல் தோல்வி கவிதைகள்)