வெற்றி பொன்மொழிகள் (Vetri Ponmozhigal)

வெற்றி பொன்மொழி

இந்த வெற்றி வெற்றி பொன்மொழிகள் (Vetri Ponmozhigal) உங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைவதற்கு தேவையான உற்சாகத்தை மனதினுள் விதைக்கும்.

வெற்றி பொன்மொழிகள் (Vetri Ponmozhigal)

நீ செல்லும் பாதை சரியாக
இருந்தால் வேகமாக அல்ல
மெதுவாக ஓடினாலும்
வெற்றி தான்.

எந்த சூழ்நிலையாக
இருந்தாலும் அதை
ஏற்றுக் கொள்ளுவது தான்
அதை வெற்றி
கொள்வதற்கான
ஒரே வழி.

வெற்றி பெற வேண்டும்
என்ற பதற்றம் இல்லாமல்
செயல்பட்டால் வெற்றியை
இலகுவாக
அடைந்து விடலாம்.

எப்போதும் பின்னோக்கிப்
பார்க்காதே எப்போதும்
முன்னோக்கி நீ எதை
செய்ய விரும்புகிறாயோ
அதை பார்.. நீ வெற்றி
பெறுவது உறுதி.

உன் வெற்றிக்கு
நீ முயன்றால் உதவி
செய்ய நான் தயாராக
இருக்கின்றேன்..
இப்படிக்கு தன்னம்பிக்கை.

அடுத்தவர் ஆயிரம் வழிகளில்
வாழலாம் ஆனால்
உனக்கான வாழ்க்கை
பாதையை நீ
தேர்ந்தெடுக்கும் வரை
வெற்றி என்பது உனக்கு
கிடைக்காத பொக்கிஷமாகவே
இருக்கும்.

துருப்பிடித்து தேய்வதை
விட உழைத்து தேய்வது
சிறந்தது.. நீ நினைத்தால்
விண் மீனையும் விழுங்கி
விட முடியும்.. இதுவே உன்
உண்மை பலம்.. மூட
நம்பிக்கைகளை
உதரித் தள்ளிவிட்டு
தைரியமாக செயல்படு.

இவ்வுலகில் உன்னால்
சாதிக்க முடியாத விடயம்
என்று எதுவும் இல்லை..
நீ நினைத்தால் இந்த
உலகில் எதையும்
சாதிக்கலாம்.

முடியாது என்ற வார்த்தை
முட்டாள்களினால் மட்டுமே
பயன்படுத்தப்படும் வார்த்தை..
அந்த வார்த்தையை நீ
பயன்படுத்தாதே.

உங்கள் எதிரி தவறு
செய்யும் பொழுது
அதில் ஒரு பொழுதும்
நீ குறுக்கீடு செய்யாதே.

வாழ்வில் நீ
வெற்றி பெறும் போதெல்லாம்
உன் முதல் தோல்வி
நினைவுக்கு வந்தால்
உன்னை யாராலும்
வெல்ல முடியாது.

உன் இலக்கை
அடையும் வரை..
வெற்றியோ..
தோல்வியோ.. எதையும்
எதிர்பார்க்காமல்
ஓடிக் கொண்டே இரு.

உன் வாழ்வில் எப்போதும்
நினைவில்
வைத்துக் கொள்..
வெற்றி என்பது
பெற்றுக் கொள்வது..
தோல்வி என்பது
கற்றுக் கொள்வது..
கற்றுக் கொண்டால்
மட்டும் தான் உன்னால்
பெற்றுக் கொள்ள
முடியும்.

தோல்வி அடைவதற்கு
பல வழிகள் காரணங்களாக
அமையலாம்.. ஆனால்
வெற்றி பெறுவதற்கு
ஒரே காரணம் தான்
அது உன் “உழைப்பு”.

முயற்சியை எவனொருவன்
கைவிடுகிறானோ..
அப்போதே அவன்
திறமையும் வெற்றியும்
அவனிடம் இருந்து போய்
விடுகின்றது.

உன் ஒரு நாள்
வெற்றி உனக்கு
அடையாளமாகாது..
பல நாள் தோல்வி
உனக்கு அவமானம் இல்லை
ஆனால் இவை இரண்டும்
உன் வாழ்க்கைக்கு
சிறந்த அனுபவமாக இருக்கும்.

பாதைகள் தொடர்ந்தால்
பயணங்கள் முடியாது..
விழுந்தவன் துணிவுடன்
மீண்டும் எழுந்தால்
இனி உனக்கு வெற்றி மட்டும்
தான் உன் வாழ்க்கை.

உன் வெற்றிகளை
எண்ணி பார்க்காதே..
உன் தோல்விகளை மட்டும்
எண்ணிப்பார்.. வெற்றியை
விட உயர்ந்து
தோல்விகள் தான்.

வெற்றி வந்தால்
நம்பிக்கை வரும்.
ஆனால் நம்பிக்கை
இருந்தால் மட்டுமே
வெற்றி கிடைக்கும்..
அதனால் நம்பிக்கையை
மனதில் வளர்த்துக்கொள்.

உழைப்பின் சக்தியே
உலகிலே உயர்ந்த சக்தி..
அதை வெற்றி கொள்ளும்
ஆற்றல் வேறெந்த
சக்திக்கும் கிடையாது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.