ஷேக்ஸ்பியர் தத்துவங்கள்

William Shakespeare Quotes In Tamil

பிரபல ஆங்கில கவிஞரும் நாடக ஆசிரியருமான ஷேக்ஸ்பியர் தத்துவங்கள் தொகுப்பை காணலாம்.

ஷேக்ஸ்பியர் தத்துவங்கள்

உங்கள் குறைகளை
நீங்களே அடையாளம்
கண்டு கொள்வது தான்
வளர்ச்சியின் அடையாளம்.

நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள்
ஒவ்வொரு கண்ணும் தங்களையே
பார்ப்பதாக எண்ணுவார்கள்.

எவர் பேசுவதையும் கேட்டுக்கொள்..
ஆனால் சிலரிடம் மட்டும்
பேச்சு கொடு. எவர் கஷ்டத்தையும்
தெரிந்து கொள்.. ஆனால்
உன் கருத்தைக் கூறிவிடாதே.

நேரத்தை தள்ளிப் போடாதே.
தாமதித்தால் அபாயமான
முடிவு ஏற்படும்.

பிடிவாதமுள்ளவன்
நஷ்டத்திற்கு அதிபதி.

உங்களை தவிர வேறு எந்த
மனிதரையும் கண்டு
நீங்கள் எச்சரிக்கையாக
இருக்க தேவையில்லை.

நண்பனிடம் கடன் வாங்குபவர்கள்
நட்பை விற்று விடுகிறார்கள்.

தண்ணீரில் ஏற்படும் அலைகள்
பெரிதாகி கடைசியில்
மறைந்து விடும். அதுபோல
புகழ் பெருகி கடைசியில்
ஒன்றுமில்லாமல்
மறைந்து விடும்.

துன்பங்கள் வரும்போது
தனியாக வருவதில்லை.
அவை மொத்தமாக வருகின்றன.

அறிவற்ற நண்பனிடம்
சேர்வதை விட புத்திசாலியான
விரோதியை அடைவதே மேல்.

சுருங்கச் சொல்வதே
பேச்சுத்திறனின் உயிர்நாடி.

நீங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்,
பின்னர் உங்கள் நேரத்தை
அது வீணாக்கும்.

நீந்துங்கள் அல்லது
மூழ்குங்கள்.

மாறுதல் கண்டவுடன்
மாறும் அன்பு
அன்பாகாது.

பெண்ணின் இதயத்தை
பேச்சால் வெல்ல முடியாதவன்..
நாக்குள்ள மனிதனல்ல.

கொள்ளைக்காரன் பணக்காரனை
கொள்ளையடித்து வாழ்கின்றான்.
முதலாளி ஏழையை
கொள்ளையடித்து வாழ்கின்றான்.

ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்

நல்லதொன்றும் கெட்டதொன்றும்
எதுவுமில்லை. நாம்
நினைப்பதுதான் அதை
அவ்வண்ணம் ஆக்குகிறது.

இனிய நண்பா, ஒரு சிறிது நேரம்
உன்னைப் பற்றி நான்
எண்ணினால், என் இழப்புகள்
அனைத்தும் மீட்கப்பட்டு
என் வேதனைகள் தீர்கின்றன.

நாகரிகம் மனிதனை விட
அவனது உடைகளை மிகவும்
தேய்த்து விடுகிறது.

எல்லோரிடமும் அன்பு
செலுத்துங்கள், சிலரிடம்
நம்பிக்கை வையுங்கள்.
யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.

செல்வம் என்பதுதான்
மனித சமுதாயத்தை
அழிக்கக்கூடிய கொடிய விஷம்.
ஏன் என்றால் உலகில் செல்வத்திற்காக
நிகழ்ந்துள்ள கொலைகள்
மற்றவகைக்காக நிகழ்ந்தவற்றை விட
அதிகமானதாகும்.

நீ போக வேண்டிய இடத்திற்கு
மூன்று மணிநேரம் முன் கூட்டியே
சென்று விடலாம். ஆனால்
ஒரு நிமிடம் கூட பின்தங்கி
விட கூடாது.

கருணைதான் பெருந்தன்மையின்
அடையாளம்.

வெறும் அதிஷ்டத்தை மட்டும்
தேடி ஓடும் போதுதான்
நாம் கால்கள் இடறி
விழுந்து விடுகிறோம்.

ஒரு தவறான சண்டையில்
உண்மையான வீரம்
இருக்க முடியாது.

நண்பனுக்கு கடன் கொடுத்தால்
நண்பனும் போய்விடுவான்
கடனும் போய் விடும்.

வாழ்வெனும் ஆடையில்
இன்பம் துன்பம் என்னும்
இரு நூல்களும்
இருக்கவே செய்யும்.

காற்றை விட கடும் வேகம் கொண்டது
பெண்ணின் எண்ணம்.

பலவற்றை கேளுங்கள்
ஒரு சிலவற்றை மட்டும்
பேசுங்கள்.

அரசியல்வாதி கடவுளையும்
ஏமாற்றக் கூடியவன்.

நேரத்தை தாமதப்படுத்ததே
தாமதங்கள் தீமையான
முடிவை தந்துவிடும்.

சமாதானமும் செல்வமும்
அதிகமானால் கோழைகளே
பெருகுவார்கள்.
கஷ்ட காலம் தான் வீரர்களை
பெற்றெடுக்கும் அன்னை.

நறுமண மலர்களோ
மெதுவாக மலரும்.
களைகளோ
வேகமாக வளரும்.

விவேகம் வீரத்தின்
சிறப்பான பகுதி.

நேர்மையைப் போல்
வளமான சொத்து
வேறு எதுவுமில்லை.

கோழை பலமுறை
செத்துப் பிழைக்கிறான்.
ஆனால் வீரன் ஒருமுறை
தான் சாகிறான்.

கூடி வாழும் இயல்பு
இல்லாதவனுக்கு சமுதாய வாழ்வு
சுகமாக இருக்காது.

William Shakespeare Quotes In Tamil

பெண்ணின் அழகிய தோற்றமல்ல,
பெண்ணிடம் உள்ள கள்ளமற்ற
இதயம் என் காதலைப் பெரும்.

உள்ளத்தில் ஒழுங்கு முற்றிலும்
குறைந்திருந்தால் நாம் புறத்தில்
ஒழுங்கை நிலை நாட்ட முடியாது.

காதலிக்க உணர்ச்சி
மட்டும் போதும்..
கைபிடிக்க அறிவும்
நம்பிக்கையும் வேண்டும்.

மனிதனின் கெட்ட குணங்களை
வெறுத்து விடு..
மனிதனை வெறுக்காதே.

காதல் வசப்பட்டவர்களும்..
கவிதை வசப்பட்டவர்களும்..
கள் வசப்பட்டவர்களும்
சும்மா இருக்க மாட்டார்கள்.

நீங்கள் கண்ணீருடன் இருந்தால்..
இப்பொழுதே அதை
சிந்த தயாராக இருங்கள்.

மனதில் திருப்தி ஏற்பட்டிருந்தால்
வாழ்வில் வறுமை வந்தாலும்
அது வறுமையாக தெரியாது.

ஏழையானாலும் உள்ளத்தில்
போதிய திருப்தி இருந்தால்
அதுவே பெரிய செல்வமாகும்.

ஒவ்வொரு தடவையும் விழுவது
மீண்டும் எழுவதற்கே
என்று நம்புங்கள்.

தர்ம காரியங்கள் எதுவும் செய்யாமல்
பெறப்படும் புகழ் அழியக்கூடியது.

தீமையான வார்த்தைகளால் தான்
தீமையான செயல்களும்
இரட்டிப்பாகி விடுகின்றன.

தைரியமே நம்முடைய
மிக நெருங்கிய நண்பன்.

நீ செல்லும் பாதையை சரியாக
தேர்ந்தெடு பிறகு
அந்தப் பாதையில்
உன் பயணத்தை தொடங்கு.

பொற்காலம் என்பது நமக்கு
முன்னால் உள்ளதே தவிர
நமக்கு பின்னால் இல்லை.

மேலும் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பொன்மொழிகள்

சார்லி சாப்ளின் பொன்மொழிகள்