சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

Sarli Saplin Quotes in Tamil

சிரிக்காத நாட்கள் எல்லாம் வீணான நாட்கள் என்று உலகையே சிரிக்க வைத்த சார்லி சாப்ளின் பொன்மொழிகள்.

  • சார்லி சாப்ளின் தத்துவங்கள்
  • சார்லி சாப்ளின் பொன்மொழிகள்
  • Sarli Saplin Quotes in Tamil

சார்லி சாப்ளின் பொன்மொழிகள்

ஏராளமான உற்பத்திகள் செய்யும்
இயந்திரங்கள் நம்மிடம் இருந்தும்
என்ன பயன்..
நாம் வறுமையில் தான்
உழன்று கொண்டிருக்கிறோம்.
இயந்திரங்களை விட நமக்கு
அதிகம் தேவை மனிதமே..!

ஒருவர் கூட உங்களிடம்
அன்பு காட்டவில்லை என்றால்
நீங்கள் மனிதர்களை
வெறுக்கலாம்.

சர்வாதிகாரர்கள் தாங்கள்
சுதந்திரமாக இருந்து கொண்டு
மக்களை அடிமைப்படுத்தி
வைத்திருக்கிறார்கள்.

புன்னகைத்து பாருங்கள்
வாழ்க்கையும் அர்த்தம்
உள்ளதாக மாறும்.

உங்களை தனியாக
விட்டாலே போதும்
வாழ்க்கை அழகானதாக
இருக்கும்.

நமது அறிவு யார் மீதும் நம்மை
நம்பிக்கை அற்றவர்களாக
ஆக்கி விட்டது.
நமது புத்திசாலித்தனம்
கடின மனம் கொண்டவர்களாகவும்
இரக்கமற்றவர்களாகவும்
நம்மை மாற்றிவிட்டது.

உங்கள் மனதில் இருக்கும்
குதூகலமும் மகிழ்ச்சியும்
பிரச்சனைகளுடன் போராட
மட்டும் அல்ல..
அதிலிருந்து மீளவும் உதவும்.

போலிக்கு தான்
பாராட்டும் பரிசும்..
உண்மைக்கு
ஆறுதல் பரிசு மட்டுமே.!

ஆசைப்படுவதை மறந்துவிடு..
ஆனால் ஆசைப்பட்டதை
மறந்து விடாதே..!

நான் புரட்சியாளன் அல்ல..
மக்களை மகிழ்விக்கும்
கலைஞன் அவ்வளவு தான்.

வாழ்க்கை வெகு தொலைவில்
இருந்து பார்க்கும் போது
மிகவும் ஆனந்தமானது..
அருகில் இருந்து பார்க்கும் போது
மிகவும் துயரமானது..!

சில பெற்றோர்களின் அன்பு தான்
பல குழந்தைகளின் ஒளி
பொருந்திய எதிர்காலத்தை
இருளடைய செய்து விடுகிறது.

என் துன்பங்களை என் உதடுகள்
அறிவதில்லை..
அவை என்றுமே
சிரித்துக்கொண்டே இருக்கின்றன.

நகைச்சுவை என்பது
தனக்காக மட்டுமல்லாமல்
பிறருக்காகவும்
இருக்க வேண்டும்.

தன்நம்பிக்கையை இழக்காதீர்கள்..
நம்மை ஆட்கொண்ட
துயரம் என்பது வேறொன்றுமில்லை
பேராசையின் விளைவுதான் அது.

நான் மழையில் நடக்கவே
விரும்புகிறேன்.. ஏனென்றால்
அப்பொழுது தான் நான் அழுவது
உலகிற்கு தெரியாது.

அறிவு கூர்மையை விட..
நமக்கு அதிகம் தேவை
இரக்க உணர்வும்
கண்ணியமுமே..!

இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும்
இடம் இருக்கின்றது..
நம்முடைய பூமி எல்லோருடைய
தேவைகளையும் நிறைவேற்ற கூடிய
அளவுக்கு வளம் மிக்கது.

நாம் மிக அதிகளவு சிந்திக்கின்றோம்..
ஆனால் மிக மிக குறைந்தளவே
அக்கறை கொள்கிறோம்.

நேசிக்கப்படாதவர்கள் தான்
வெறுப்பார்கள்.

சுதந்திரத்தில் நம்பிக்கை கொண்ட
தனிமனிதன் நான்.
இது மட்டுமே என் அரசியல்.

அணுகுண்டுகள் நம்மை அழிப்பதற்கு
முன்னால் அவற்றை நம்மால்
அழித்து விட முடியும் என்று
நான் நம்புகின்றேன்.

மனிதர்களின் ஆன்மாக்களின்
பேராசையானது நஞ்சைக்
கலந்து விட்டது. அந்த பேராசை..
வெறுப்பினால் இந்த உலகத்துக்கே
முட்டுக்கட்டை போட்டு விட்டது.
துன்பத்திலும் துயரத்திலும்
மக்களை தள்ளி விட்டது.

நீங்கள் வாழ்க்கையை பார்த்து
பயப்படவில்லை என்றால்
வாழ்க்கை அற்புதமானதாக
இருக்கும்.

மேலும் இதுபோன்ற பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்..

இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.