வாழ்க்கை Tamil Quotes

Tamil Quotes

இந்த தொகுப்பில் உள்ள “வாழ்க்கை Tamil Quotes” உள்ளடக்கியுள்ளது.

  • வாழ்க்கை Quotes
  • Tamil வாழ்க்கை Quotes
  • Tamil Quotes

வாழ்க்கை Tamil Quotes

நம்மிடம் எதுவும் இல்லை என்று
நினைப்பது ஞானம்.. நம்மை தவிர
எதுவும் இல்லை என்று
நினைப்பது ஆணவம்..!

பொய் பேசியதால் உருவான
பகைகள் குறைவு.. உண்மை
பேசியதால் உருவான
எதிரிகள் அதிகம்..!

உனக்காக வாழ்கிறேன் என்று
பிறர் சொல்வதை விட.. உன்னால்
வாழ்கிறேன் என்று ஒருவரைச்
சொல்ல வை..!

வேகம் எதிர்பார்க்காத முடிவினை
தரும்.. விவேகம்
எதிர்பார்ப்பினை முடிவாய் தரும்..!

நடிக்க தெரிந்தவனுக்கோ உலகம்
ஓர் அழகான நாடக மேடை..
ஆனால் நடிக்க தெரியாதவனுக்கோ
உலகம் ஒரு ஆபத்தான
நரகத்தின் மேடை..!

எதிரில் நிற்பவனெல்லாம் எதிரியும்
இல்லை.. தோளில் கை
போட்டவனெல்லாம் தோழனும்
இல்லை.. இதை உணர்ந்தவனுக்கு
எப்போதும் கவலையும் இல்லை..
துரோகத்தை எண்ணி..!

சின்ன சின்ன செலவுகளை
குறையுங்கள் காரணம்.. எவ்வளவு
பெரிய கப்பலையும் சிறிய
ஓட்டை மூழ்கடித்து விடும்..!

பல வருடம் வாழும் மனிதன்
அழுது கொண்டே பிறக்கிறான்..
ஒரு நாள் மட்டுமே வாழும் பூக்கள்
சிரித்துக் கொண்டே பூக்கிறது..!

குதிரை எவ்வளவு சிறப்பாக
வண்டியை இழுத்தாலும் அதற்கு
சாட்டை அடி உண்டு.. அதே போல்
எத்தனை சிறந்த மனிதனாக
நீ இருந்தாலும் உனக்கும்
விமர்சனம் உண்டு..!

எல்லா தத்துவங்களும் இளைமையிலே
வாசிக்க கிடைக்கின்றது.. ஆனால்
அதை பின்பற்ற முதுமை வரை
போராட வேண்டியிருக்கிறது..!

இல்லை என்பதும் இருக்கு என்பதும்
மனதின் நிலை.. இருப்பதைக் கொண்டு
திருப்தி அடைவதே வாழ்க்கையின்
சிறப்பு நிலை..!

எது எளிதானதோ அது நீண்ட காலம்
நீடிக்காது.. எது நீண்ட காலம்
நீடிக்கிறதோ அது எளிதானது
கிடையாது..!

சிறகுகள் நனைந்தால் பறக்க
முடியாது தான்.. ஆனால்
எந்த ஒரு பறவையும் வானத்திடம்
மழையே பெய்யாதே என்று
கெஞ்சுவது இல்லை.. வாழ்க்கையே
ஒரு போராட்டம் தான்.. போராடுவோம்
வெற்றி பெறுவோம்..!

உண்மை என்பது உண்மை தான்
யாரும் நம்பாமல் விட்டாலும் கூட..
பொய் என்பது பொய் தான்
எல்லோராலும் நம்ப பட்டாலும் கூட..!

அமைதியான கடல் ஆழம் இல்லாதது
போலத்தான் தோன்றும் அது போல..
பொறுமையான மனிதன் பலம்
இல்லாதவன் போலத்தான்
தோன்றுவான்..!

நேசிக்கும் நூறு பேரை நேசிக்க
துவங்கினாலே.. வெறுக்கும்
நான்கு பேரை பற்றி யோசிக்க
நேரமிருக்காது..!

வாழ்க்கையில் கடினமான இலக்கை
அடைய முயலுங்கள்.. நீங்கள்
வென்றால் அதனை வழிநடத்தலாம்..
நீங்கள் தோற்றால் அதற்கு
வழிகாட்டலாம்..!

நிரந்தரமானவற்றை தேடுங்கள்..
தாற்காலிகமானவற்றில்
தேங்கி நிற்காதீர்கள்..!

பிறருக்கு உதவி செய்து பழகியவர்களுக்கு
யாரிடமும் உதவி கேட்க
மனமிருப்பதில்லை.. பிறரிடம்
உதவி வாங்கி பழகியவர்களுக்கு
யாருக்கும் உதவி செய்ய
மனமிருப்பதில்லை..!

காரில் செல்பவனை பார்த்து
கண் கலங்கி நிற்காதே..
கால் இல்லாதவன் உன்னை கடந்து
போவதை கண் திறந்து பார்
அப்போது புரியும் வாழ்க்கை..!

இது போன்ற பதிவுகளை மேலும் படியுங்கள்…