தமிழ் ஸ்டேட்டஸ் வரிகள் – Status Quotes

Tamil Status Quotes

இந்த “தமிழ் ஸ்டேட்டஸ் வரிகள் – Status Quotes” தொகுப்பு உள்ளடக்கியுள்ளது.

  • தமிழ் ஸ்டேட்டஸ்
  • Tamil Status Quotes
  • Tamil Status

தமிழ் ஸ்டேட்டஸ் வரிகள் – Status Quotes

என் குணம் என் எதிரில்
நிற்பவனின் குணத்தை
பொறுத்தது..!
வாழ்க்கை என்பது யாதெனில்
வாழ வேண்டுமா என்று
சில நேரமும்.. வாழ்ந்தே
ஆக வேண்டும் என்ற பல நேரமும்
சேர்ந்த கலவையே..!
சோகம் மட்டும் வாழ்க்கை
கிடையாது.. சந்தோஷமாகவே
எந்நாளும் வாழ்ந்திடவும் முடியாது..
சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி
இருட்டினால் தான் நம்மால்
பல நொடி வெளிச்சத்தில்
வாழ முடியும்..!
இலக்குகளை குறி வை..
இல்லையெனில் கேள்விக்குறி
ஆகிவிடும் வாழ்க்கை..!
நம் வாழ்க்கை அடுத்தவர் திரும்பி
பார்க்கும் அளவிற்கு
இருக்க வேண்டுமே தவிர…
திருத்தி பார்க்கும் அளவிற்கு
இருத்தல் கூடாது..!
வாழ்க்கை குறுகியது வாழுங்கள்..
கோபம் தேவையற்றது அதை
தூக்கி எறியுங்கள்.. பயம்
மோசமானது அதை
எதிர்கொள்ளுங்கள்.. நினைவுகள்
இனிமையானவை அதை ரசியுங்கள்..!
எதையும் மறக்க முயற்சித்து
நிம்மதியை இழக்காதீர்கள்..
அதை அதை அப்படியே
விட்டு விடுங்கள் காலம்
மாற்றி விடும்..!
நீங்கள் பிரச்சனையில் இருக்கும்
போது அது தான் முடிவாக
இருக்குமோ என்று எண்ணாதீர்கள்..
அது வாழ்க்கையில் ஒரு
வளைவான இடம் அவ்வளவு தான்..!
அழகான வீட்டுக்குள் அன்பான
கூட்டுக்குள் அமைதியாய்
காத்திருங்கள்.. சிறகடிக்க காலம்
வரும் போது ஆனந்தமாகவும்..
சுகந்திரமாகவும் பறக்கலாம்..!
குறை கூறவே சிலர்
காத்துக்கொண்டிருக்கும் உலகம்
இது உன்னைப் பற்றி குறை கூற
அவர்கள் உத்தமர்களும் இல்லை..
அவர்கள் கூறியதை எண்ணி
கவலைப்பட நீ கோழையும்
இல்லை..!
நாம் இந்த உலகத்தில் தங்கி
செல்வதற்கான வாடகை..
மற்றவர் மீது நாம் செலுத்தும்
அன்பு மட்டுமே..!
ஒருவர் ஏமாற்றுகிறார்..
இன்னொருவர் வழிகாட்டுகிறார்..
மற்றொருவர் உதவுகிறார்..
இந்த வாழ்க்கை தான் எவ்வளவு
சுவாரசியமானது..!
உனக்கு மேலே உள்ளவனை
பார்த்து ஏங்காதே.. தாழ்வு
மனப்பாங்கு வரும்..! உனக்கு
கீழே உள்ளவனை ஏளனமாய்
பார்க்காதே.. தலைக்கனம் வரும்..!
உன்னை யாரோடும் ஒப்பிடாமல்
நீ நீயாக இரு..
தன்னம்பிக்கை வரும்..!
எப்படி வாழ்வான் பார்க்கலாம்
என்பவர்களுக்கு மத்தியில்..
இப்படித்தான் வளர்ந்தேன் என்று
வாழ்ந்து காட்டுங்கள்..!
உலகில் மிக எளிமையானது
பிறரிடம் குறை காண்பது..
உலகிலேயே மிகக் கடினமானது
தன் குறையை தானே உணர்வது..!
பாசத்தைக் கொண்டு பல நாள்
பயணிக்கலாம்.. நேசத்தை
கொண்டு நெடு நாள் பயணிக்கலாம்..
ஆனால் வேஷத்தைக் கொண்டு
ஒரு நாளும் பயணிக்க முடியாது..!
நம்மை பற்றி யார் என்ன
நினைத்தால் நமக்கு என்ன..?
நம்மை பற்றி நாம் அறியாததையா
அவர்கள் அறிந்திட போகிறார்கள்..!
நிம்மதி என்ற நிழல் உன்னை
தொடரும்.. நேர்மை என்ற
வெளிச்சம் உள்ளவரை..!
கயிறு அறுந்த போது தான்
பட்டத்துக்கு தெரிந்தது
உயரம் தனதல்ல என்று..
தலைக்கனம் தவிர்..!
ஆழம் குறைவோ.. அதிகமோ
அடிக்க வேண்டியது நீச்சல் மட்டுமே..!
சோதனைகள் ஒன்றோ.. பலவோ..
செய்ய வேண்டியது
முயற்சி மட்டுமே..!

இது போன்று மேலும் படியுங்கள்..