திருவள்ளுவர் பற்றிய கட்டுரை

Thiruvalluvar Patri Katturai In Tamil

இந்த பதிவில் திருவள்ளுவர் பற்றிய கட்டுரை பதிவை காணலாம்.

ஈரடி குறளில் உலக தத்துவங்கள் அனைத்தையும் திருக்குறள் எனும் உன்னத படைப்பின் மூலம் தந்தவர் தான் திருவள்ளுவர்.

உலகப் பொதுமறை எனும் திருக்குறளை படைத்து உலக இலக்கிய அரங்கில் தமிழ் மொழிக்கு என்று ஒரு உயர்ந்த இடத்தை தந்துள்ளார்.

  • திருவள்ளுவர்
  • Thiruvalluvar Patri Katturai In Tamil
தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை

திருவள்ளுவர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பும் வாழ்வும்
  3. திருக்குறள் தந்த தெய்வ புலவர்.
  4. திருக்குறள் கூறும் விடயங்கள்
  5. முடிவுரை

முன்னுரை

தமிழன்னையை அழகுபடுத்திய பாவலர்கள் பலர் இருந்தாலும் திருவள்ளுவரிற்கென தனியிடம் உண்டு.

ஈரடி குறள்களால் உலகத்தின் அத்தனை மக்களுக்கும் சால சிறந்த கருத்துக்களை கூறும் வகையில் உலக பொதுமறை என்னும் திருக்குறள் எனும் பேரிலக்கியத்தை தமிழில் படைத்து தமிழையே பெருமை கொள்ள செய்தவர்.

தெய்வபாவலர், முதற்பாவலர், பெருநாவலர், செந்நாபோதர், பொய்யாமொழி புலவர் என்றெல்லாம் மறுபெயர் கொண்டு திருவள்ளுவரை அழைப்பார்கள்.

திருக்குறளில் இல்லாத தத்துவங்களே இல்லை எனும் அளவிற்கு அனைவராலும் வியந்து போற்றப்படும் திருக்குறள் பெருமைக்குரியது.

இக்கட்டுரையில் வள்ளுவருடைய வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்ப்பணி பெருமைகள் பற்றி நோக்குவோம்.

பிறப்பும் வாழ்வும்

இவர் சங்கமருவிய காலத்திற்குரிய புலவராக தமிழிலக்கிய வரலாறானது கூறுகின்றது.

இவரது தந்தை ஆதி, தாய் பகவான் என்று கூறப்படுகிறது. இதனால் தான் முதல் குறளான “அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு” என தனது பெற்றோரை சிறப்பித்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

திருவள்ளுவருடைய மனைவி பெயர் வாசுகி. இலக்கியங்களில் சிறந்த கணவன் மனைவிக்கு இலக்கணமாக “வள்ளுவன் வாசுகி” என்று வழங்குவது இவர்களின் சிறப்பேயாகும்.

இவர் வாழ்ந்த காலம் சங்க காலத்தின் பிற்காலமாகும். இக்காலத்தில் வள்ளுவர் தோன்றி தனது அறக்கருத்துக்களால் சமூகத்தை நல்வழிப்படுத்த முயன்றார்.

பிற்காலத்திலும் உலக மக்களை நல்வழிபடுத்த வேண்டும் என்றொரு தேவை இருந்தது இதனுடைய வெளிப்பாடே திருக்குறள் ஆகும்.

திருக்குறள் தந்த தெய்வபுலவர்

திருக்குறளை தமிழில் எழுதி உலக இலக்கிய அரங்கில் தமிழர்களை தலைநிமிர செய்தவர் திருவள்ளுவர்.

அறிவாலும் அவரது தெளிந்த சிந்தனையாலும் திருக்குறள் உலகம் போற்றும் இலக்கியமாக இன்றுவரைக்கும் ஒப்பு உவமை இல்லாத இலக்கியமாக திகழ்கிறது. பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றாக திருக்குறள் காணப்படுகிறது.

திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பால், காமத்துபால் எனும் மூன்று பால்களும் 133 அதிகாரங்களும் ஒரு அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் அடங்கலாக 1330 குறள்களை உள்ளடக்கியது திருக்குறள் ஆகும்.

“அ” இல் ஆரம்பித்து “ன்” இல் முடிவடைகிறது திருக்குறள். ஈரடியில் உலகத்தின் அத்தனை விடயங்களை உள்ளடக்கிய நூல் ஆகையால் “ஈரடி வெண்பா” எனவும் அழைக்கப்படுகின்றது.

பல்வேறு தனித்துவமான பெருமைகளை கொண்ட திருக்குறளில் மனித வாழ்வின் எல்லா சந்தேகங்களிற்கும் விடை இருக்கிறது. மனிதன் எவ்வகையில் வாழவேண்டும் என இது வழிகாட்டுகிறது.

திருக்குறள் கூறும் விடயங்கள்

திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களிலும் கூறப்படும் விடயங்கள் மனிதனுடைய முழுவாழ்வுக்கும் பயன்படக் கூடியவையாகும்.

மனிதன் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் ஒரு மனிதனை அடிநிலையில் இருந்து உயர்நிலை வரை அழைத்து செல்ல கூடிய அனைத்து விழுமியங்களும் அடங்கிய நூலாகும்.

முழு வாழ்க்கையையே புரட்டி போடக்கூடிய ஆற்றல் மிகுந்த நூலாகும்.

திருவள்ளுவருடைய கருத்துக்களை கற்று உணர்ந்து அதன் பொருட்டு ஒருவர் வாழ்வாரே ஆனால் அது அர்த்தமுள்ள வாழ்வாக அமையும்.

வாழ்வின் எல்லா சந்தேகங்களுக்கும் திருக்குறளில் திருவள்ளுவர் அழகாக விளக்கம் கூறியுள்ளார்.

வாழ்வெனப்படும் காலத்தில் மனிதன் எவ்வாறு வாழவேண்டும் என “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” ஒரே குறளில் பாடியருளி உள்ளார்.

முடிவுரை

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு இலக்கியம்
இன்றைய காலத்துக்கும் பொருந்தும் வகையில் தனது ஆழமான கருத்துக்களால் அனைவரின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கிறது.

தமிழர்கள் மாத்திரமின்றி உலகத்தவரும் போற்றும் ஒப்பற்ற இலக்கியத்தை தமிழுக்கு தந்தவர் எனும் அழியா பெருமையை வள்ளுவர் பெறுகின்றார்.

இவ்வாறு உலகுக்கு தமிழ் பெருமையை ஓங்கும் வகையில் செய்த திருவள்ளுவர் என்றும் வணக்கத்திற்குரியவராவார்.

“வள்ளுவன் தன்னை இவ்வுலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று பெருமை கொள்வோம்.

You May Also Like :

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை

கல்வியின் சிறப்பு கட்டுரை