அம்பேத்கர் பற்றிய கட்டுரை

Ambedkar Katturai In Tamil

இந்த பதிவில் தலைசிறந்த கல்விமான் “அம்பேத்கர் பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

சாதிய ஒடுக்குமுறைகள், தீண்டாமை, உரிமை அடக்கு முறைகளை தன் கல்வியால் எதிர்த்து மக்களுக்காக போராடிய மிகச்சிறந்த புரட்சியாளர் தான் அண்ணல் அம்பேத்கர்.

சாதி ஒடுக்கு முறையை வெறுத்து “சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்” என்று கூறினார்.

பாரதியார் தமிழ் பற்று கட்டுரை

அம்பேத்கர் பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பும் வாழ்க்கையும்
  3. கல்வி சாதனைகள்
  4. அரசியலமைப்பின் தந்தை ஆன கதை
  5. இவரது பணிகள்
  6. முடிவுரை

முன்னுரை

இந்தியா எனும் நாட்டில் காலம் காலமாக இருந்து வந்த மூடநம்பிக்கைகள், தீண்டாமை மற்றும் அடக்குமுறைகள் இவற்றையெல்லாம் உடைத்தெறிந்த அம்பேத்கரின் வரலாறு ஆகச்சிறந்ததாகும்.

பல அவமானங்களை தாங்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்காக போராடிய மிகச்சிறந்த மாமேதை இவராவார். இந்தியாவில் அதிகம் அவமானப்படுத்தப்பட்ட சிலை அம்பேத்கரின் சிலையே ஆகும்

சாதிய ஒடுக்கு முறையினால் பாடசாலையில் இருந்து விரட்டப்பட்ட 5 வயது சிறுவன் பின்னாளில் 50 வயதில் உலகின் அதிக பக்கங்களை உடைய இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அறிஞர் அம்பேத்கர் எனும் அழியாத புகழ் பெற்றார்.

இவர் வாழ்வில் சந்தித்த வலிகள் புறக்கணிப்புக்கள் கொஞ்சமல்ல. இவரது வாழ்க்கை வரலாறுகள், சாதனைகள் இவர் ஆற்றிய பணிகள் என்பனவற்றை இக்கட்டுரை காண்கிறது.

பிறப்பும் வாழ்க்கையும்

இந்தியாவின் மத்திய மாநிலத்தில் உள்ள “மகோ” கிராமத்தில் பிறந்த இவரது இயற்பெயர் “பீம் ராவ் அம்பேத்கர்” ஆகும்.

இவரது தந்தையின் பெயர் “ராம் ஜீ மகோ” ராணுவ முகாமில் அமைந்துள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.

அம்பேத்கர் பிறந்த இரண்டு ஆண்டுகளில் அவர் தனது வேலையை விட்டு மராட்டியத்தின் ரத்னகிரி மாவட்டத்தின் தபோலி கிராமத்திற்கு இடம்பெயர்ந்தார். அங்கு சாதிய அடக்குமுறைகள் மிகவும் உயர்வாக இருந்தது.

இதனால் அங்கு தனது பிள்ளைகள் கல்வி கற்பது சிரமம் என கருதி மும்பைக்கு இடம் பெயர்ந்தனர்.

பள்ளியில் அமர சாக்கு துணி ஒன்றினை கொண்டு செல்ல வேண்டும் எனவும் தரையில் தாழ்ந்த சாதியினர் அமர்வதால் தீட்டு ஏற்படும் எனும் முட்டாள்தனமான அடக்குமுறைகள் அவருக்கு நிகழ்ந்தன.

மற்றைய மாணவர்கள் போல உணவு, நீர் என்பனவற்றை கூட வழங்க மறுத்து அவரது மனதை நோகடித்தார்கள்.

இவற்றையெல்லாம் தாங்கி கொண்டு வெறி கொண்டு கல்வி கற்றார் கல்வியினால் தான் இந்த அடக்குமுறைகளை ஒழிக்கலாம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

பிறப்பினை அடிப்படையாக கொண்டே இந்தியாவில் உரிமைகள் தீர்மானிக்கப்படுகிறது என்பதனை கண்டு கொதித்தார். அந்த கோபத்தை தனது கல்வி வளர்ச்சியில் வெளிப்படுத்தினார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி கற்க கூடாது என்ற நிலை இந்தியாவில் இருந்தது. இந்நிலையில் அம்பேத்கரின் கல்வி வளர்ச்சி சாதனையாக பார்க்கப்படுகிறது.

தனக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புக்களையும் பயன்படுத்தி வெளிநாடுகளிற்கு சென்று உயர்கல்வி கற்றுதேர்ந்து கல்வியில் பெரும் சாதனைகளை இவர் படைத்தார்.

அமெரிக்கா சென்று கற்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். தன் வாழ்நாள் முழுவதும் அடக்கு முறைகளுக்கெதிராய் கல்வி ஆயுதம் கொண்டு போராடிய மிகச்சிறந்த தலைவர் இவராவார்.

கல்வி சாதனைகள்

இந்த உலக வரலாற்றில் அதி உயர் கல்வி சாதனைகளை இவர் செய்திருந்தார். பிறப்பினால் ஒருவனை அடக்கி, கல்வியை கூட பறித்த ஒரு சமூகத்தில் கல்வியில் யாரும் அடைந்து விடமுடியாத உச்சத்தை இவர் தொட்டார்.

இவர் 50 ற்கும் மேற்பட்ட பட்டங்களை பெற்றிருந்தார். சட்டத்துறையில் “பாரிஸ்டர்” பட்டத்தை இங்கிலாந்தில் பெற்றிருந்தார். பொருளியல், அரசியல், சட்டம், மெய்யியல், தத்துவம் போன்ற துறைகளில் மாமேதையாக இவர் திகழ்ந்தார்.

இரண்டு கைகளாலும் எழுதும் திறன் கொண்ட ஒரு கல்விமான் என்று உலகமே வியந்தது. இவர் வாழ்ந்த காலத்தில் அதிக நூல்களை கற்ற ஒரே தலைவர் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

இவர் தனது வாழ்விடத்தை சிறந்த படிப்பகங்களின் அருகே இருக்க வேண்டும் என விரும்புவாராம்.

இவ்வாறு கல்வி மூலமே அனைத்து விடயங்களையும் சீர் செய்ய முடியும் என தனது வாழ்வில் வாழ்ந்து காட்டி இன்று பலருக்கு முன்னுதாரணமாகவும் உந்து சக்தியாகவும் திகழ்கிறார் என்றால் அது மிகையல்ல.

அரசியல் அமைப்பின் தந்தை ஆன கதை

சமூகத்தின் மிகவும் தாழ்ந்த இடத்தில் இருந்து வந்து இந்திய குடியரசின் அரசியலமைப்பை எழுதும் அளவிற்கு வளர்ந்த கதை ஆச்சரியங்கள் நிறைந்தது.

அடிப்படை அரசியல் மாற்றம் உருவாக நாட்டின் சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதனை அறிந்து இந்தியாவின் சட்டத்துறை அமைச்சரானார்.

அடிநிலை மக்கள் எதிர்கொள்ளும் அடக்கு முறைகள், கல்வி, சுதந்திரம், அனைத்து மக்களுக்குமான சம உரிமைகள், தொழிலாளர் நலன்கள், பெண்கள் உரிமைகள் தொடர்பாக சமூகத்தில் இருந்த தவறான நடை முறைகளை உடைத்து

உலகின் மிகச்சிறந்த பெரிய 300 பக்கங்களை உடைய அரசியலமைப்பு சட்டத்தை தனி மனிதனாக பாடுபட்டு செதுக்கிய சிற்பி இவராவார்.

ஒரு சிறுவனை அன்று கல்வி கற்கவே அனுமதிக்காது அவமானப்படுத்திய இந்த சமூகத்தில் அன்றைக்கு ஒரு பாராளுமன்றமே இவரின் வரவிற்காய் காத்திருந்தது மிக உயர் அங்கீகாரம் எனலாம்.

இனி வரும் சமுதாயம் சமத்துவமாய் உருவாக விதை போட்டவர் இவரே.

இவரது பணிகள்

இவர் தனது வாழ்நாள் முழுவதும் அடக்கு முறைகளுக்கு எதிராக சட்ட ரீதியாக போராடி பல வெற்றிகளை கண்டார்.

பிரிவினைகளையும் வேற்றுமைகளையும் தூண்டிய பல அரசியல் தலைவர்களை இவர் கடுமையாக எதிர்த்தார். கல்வி ஆயுதத்ததை அனைவரும் கையிலெடுக்க நாடு தானாக முன்னேறும் எனவும் இவர் வலியுறுத்தினார்.

“The Problem Of Rubee” என்ற நூலை எழுதி பிற்காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார நிறுவனம் ஆன “Reseve Bank Of India” உருவாக காரணமாய் இருந்தார்.

பெண்கள் உரிமைகள் தொடர்பான சட்டம். சுரங்க தொழிலில் பெண்களை ஈடுபடுத்த கூடாது எனும் சட்டம்.

பெண்களுக்கு மகப்பேறு விடுமுறை சம்பளத்தோடு வழங்கப்பட வேண்டும் என்ற சட்டம் . மருத்துவ காப்ப்பீட்டு திட்டம் என மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை இவர் உருவாக்கினார்.

முடிவுரை

தான் வாழ்ந்த காலத்தில் பிறப்புரிமையாலும் வசதி வாய்ப்புக்களாலும்
புறக்கணிக்கப்படும் கல்வி தங்கு தடையின்றி எல்லோருக்கும் கிடைக்கும் வகையில் செய்வேன் என வேட்கை கொண்டு இறப்பதற்குள் அதனை செயற்படுத்திய இவரது பணிகள் இன்றைக்கும் மெய் சிலிர்க்க வைக்கும்.

சுதந்திர இந்தியாவில் பல தலைவர்கள் இன்றும் இவரையே முன்னுதாரணமாக கொண்டு பணியாற்றும் அளவிற்கு இவரது வாழ்க்கை பலரையும் தாக்கம் பெற செய்துள்ளது.

இன்றைக்கு பல வசதிகள் கிடைத்தும் கல்வியை உதாசீனம் செய்யும் பலருக்கு மத்தியில் அன்றைய காலத்தில் பல இடர்கள் மத்தியில் பல அவமானங்களையும் பிரச்சனைகளையும் தாங்கி கொண்டு பெரும் கல்விமானாக உயர்ந்து

இந்தியாவின் வளமான எதிர்காலத்தையும் ஆக பெரும் அரசியல் மாற்றத்தையும் உண்டாக்கிய இவரின் வாழ்க்கை பெரும் சாதனை என்றால் மிகையல்ல.

You May Also Like :

பெண் கல்வி முக்கியத்துவம் கட்டுரை

தேசிய ஒருமைப்பாடு கட்டுரை