டெங்கு ஒழிப்பு கட்டுரை

Dengue Olippu Katturai In Tamil

இந்த பதிவில் டெங்கு ஒழிப்பு கட்டுரை பதிவை காணலாம்.

இன்று ஏற்படும் நோய்களில் முக்கியமானவை நுழைப்புகளால் ஏற்படும் நோய்களாகும் இவை அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்திக்கின்றன.

நமது சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நுளம்பு பெருக்கத்தினை கட்டுப்படுத்த முடியும்.

  • டெங்கு ஒழிப்பு
  • Dengue Olippu Katturai In Tamil
தூய்மை இந்தியா கட்டுரை

டெங்கு ஒழிப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. நோய் அறிகுறி
  3. பாதிப்புக்கள்
  4. ஒழிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள்
  5. முடிவுரை

முன்னுரை

இன்றைய காலகட்டத்தில் பலவகையான நோய்கள் மனிதனை பாதிக்கின்றன. அந்தவகையில் டெங்கு காய்ச்சல் ஒரு முக்கிய நோயாக பார்க்கப்படுகிறது. இது பெண்நுளம்பினால் பரவுகின்ற ஒரு நோயாகும். இது ஒரு உயிர்கொல்லி தொற்று நோயாகும்.

மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு நுளம்பு மூலம் இது காவப்படுகிறது. இது DENV எனப்படும் வைரஸ் மூலமாக இந்நோயானது ஏற்படுகிறது. இது அயன மற்றும் உபஅயன காலநிலை பிராந்திய நாடுகளில் பரவக்கூடிய நோயாக உள்ளது.

அதிகமாக நகர மற்றும் உபநகர பிரதேசங்களில் அதிகம் பரவுகின்றன. 100 தொடக்கம் 400 மில்லியன் மக்களை வருடமொன்றிற்கு இந்நோய் பாதிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் இந்நோயை சரியான சிகிச்சைகளை பெறுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

இக்கட்டுரையில் டெங்கு நோயின் அறிகுறி, அதன் பாதிப்புக்கள் மற்றும் அதனை ஒழிக்க எடுக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள். போன்ற விடயங்கள் நோக்கப்படுகின்றன.

நோய் அறிகுறி

இந்நோய் ஒரு மனிதனுக்கு ஏற்பட நுளம்புகளே காரணமாகும். இந்நோயை பரப்பும் நுளம்புகள் காலை மற்றும் மாலை 6.00 மணி நேரமளவில் கடிக்கும்.

இதன் மூலம் மனித உடலில் டெங்கு வைரஸ் உட்புகுந்து சில நோய் அறிகுறிகளான கண்வலி, தலையிடி, தசைவலி, சிவப்பு நிறபுள்ளிகள் தோன்றல், என்பு வலி, வாந்தி மற்றும் குமட்டல் நிலைகள் போன்ற அறிகுறிகள் இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.

இவ்வகையான அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவதனால் நோய் நிலை அதிகரிக்க முன்னம் இதனை கட்டுப்படுத்த முடியும்.

இதன் நோய்நிலை அதிகரிக்கும் பட்சத்தில் மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காய்ச்சல் அதிகரித்து மரணம் நிகழ வாய்ப்புண்டு ஆகவே இது தொடர்பாக நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

பாதிப்புக்கள்

இந்நோயானது ஒருவரை தாக்கி அவரது உடலை பலமிழக்க செய்து வயிற்றுவலி, வாந்தி, மூக்கு வழியாக குருதி பெருக்கு, சிறுநீரோடு குருதி வெளியேறல், சுவாச தொகுதி பாதிக்கப்பட்டு நோயாளி சுவாசிக்க சிரமப்படும் நிலையானது ஏற்படும்.

இது நாளடைவில் உயிரை கொல்லும் மிகவும் ஆபத்தான வைரஸ் ஆகும்.

இது தென்னாசிய பிராந்தியமான இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் போன்ற நாடுகளில் அதிகளவான உயிர்களை கொன்ற தொற்றுநோயாகும். வருடமொன்றில் 25000 இறப்புக்கள் உலகளவில் டெங்கு நோயினால் ஏற்படுகின்றது.

இந்நோய் மிகவும் ஆபத்தான விளைவுகளை மனிதர்களுக்கு ஏற்படுத்துவதனால் இது தொடர்பாக அவதானமாக இருப்போம்.

தடுக்கும் வழிமுறைகள்

இந்நோயை தடுப்பதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அதாவது இந்நோயை
உருவாக்கும் நுளம்புகள் பெருகாதவாறு நாம் வாழும் சூழலை வைத்திருக்க வேண்டும்.

நீர் தேங்கும் இடங்கள் குப்பை கூழங்கள் அசுத்தமான நீர்நிலைகள் போன்றனவற்றை இல்லாமல் செய்வதுடன் நாம் வாழும் சூழலை நுளம்பு பெருக்கம் இல்லாத சூழலாக மாற்றுவது தான் சிறந்த தடுப்பு நடவடிக்கை.

மேலும் தூங்கும் போது நுளம்பு வலைகளை பாவித்தல், நுளம்புகளை விரட்டும் பொருட்களை பாவித்தல், நோய்தொற்று ஏற்பட்டதை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சையினை பெறுதல்,

நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவுகளை உண்ணல் மற்றும் நிறைய நீர் அருந்துதல் போன்ற மருத்துவ ஆலோசனைகளை பின்பற்றுவதனால் இந்நோயில் இருந்து எம்மை முற்றாக பாதுகாக்கலாம்.

முடிவுரை

ஆபத்தான தொற்று நோய்களில் இருந்து எம்மையும் எமது குடும்பங்களையும் பாதுகாக்கவேண்டியது எமது கடமையாகும்.

வைத்திய துறையினரின் ஆலோசனைகளை பின்பற்றி நமது சூழலை நோய்கள் உருவாகாத சூழலாக மாற்றி நோய்களில் இருந்து விடுபடுவோம்.

அழகான வாழ்க்கையை சிதைக்கும் நோய்களில் இருந்து பாதுகாப்பாக இருப்போம்.

You May Also Like:

வாய்மையே வெல்லும் கட்டுரை

மருத்துவப் பணி கட்டுரை